துணை இராணுவக்குழுவின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் - அமெரிக்கா வலியுறுத்து

அமெரிக்க தூதுவர் ரொபேட் ஓ பிளேக்கிற்கும், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கும் இடையே இன்று மட்டக்களப்பில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன் போது கருத்துரைத்த அமெரிக்க தூதுவர், கிழக்கு மாகாணத்தில் முதலீடு செய்வதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் தயாராகவுள்ளதாகத் தெரிவித்தார்.

எனினும் அதற்கு ஏதுவாக கிழக்கு மாகாணத்தின் புறச் சூழ்நிலைகள் மாற்றமடைய வேண்டும் எனவும், ஆட்கடத்தல்கள் கொலைகள் நிறுத்தப்படவேண்டும் என்றும் அமெரிக்க தூதுவர் கேட்டுக்கொண்டார்.

அத்துடன் துணை ஆயுதக்குழுக்களின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர்களின் ஆயுதங்கள் களையப்படவேண்டும் எனவும் அமெரிக்கத் தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments: