புலிகளை ஒழிப்பது கஷ்டம்-ராணுவ தீர்வு சாத்தியமல்ல: அமெரிக்கா

விடுதலைப் புலிகளை அழிக்க முடியாது. அவர்களை அழித்து விட்டுத்தான் இலங்கை இனப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று அதிபர் ராஜபக்சே கூறுவதை ஏற்க முடியாது.

ராணுவ ரீதியிலான தீர்வு மிகக் கடினம். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதர் ராபர்ட் பிளாக் கூறியுள்ளார்.


சென்னை பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், விடுதலைப் புலிகள் முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே பேச்சுவார்த்தை நடத்த முடியும் என இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியிருப்பதை ஏற்க முடியாது. அது சாத்தியமும் அல்ல.

ராணுவத் தீர்வு என்பது மிக மிக கடினமானது. இலங்கையின் வடக்கு முழுவதையும் ராணுவம் பிடித்தாலும் கூட, குறைந்தது ஆயிரம் விடுதலைப் புலிகளாவது தலைமறைவாகக் கூடும். அவர்களது கொரில்லாத் தாக்குதலை தவிர்க்க முடியாது என இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளதை நினைவில் கொள்ள வேண்டும்.

அரசியல் சீர்திருத்தம் தொடர்பான அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கமிட்டியின் பரிந்துரைகளை ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

கடந்த 25 ஆண்டுகளில் இலங்கை அரசு செய்த பெரிய தவறு, சிங்கள கட்சிகளையும் இதில் இணைத்து ஒப்பந்தம் செய்யாததுதான்.

அரசியல் ரீதியிலான தீர்வுக்கு இலங்கை அரசு முயன்றால் விடுதலைப் புலிகளை மேலும் வலுவிழக்கச் செய்யமுடியும் என அமெரிக்கா நம்புகிறது. அரசியல் ரீதியிலான தீர்வால் மூன்று வகையான பலன்கள் கிடைக்கும்.

ஒன்று, வன்னி பகுதியில், அகதிகளாக உள்ள 2 லட்சம் தமிழர்களும் தெற்கிலும் சுதந்திரமாக வசிக்க வகை ஏற்படும். தங்களுக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ள அவர்களால் முடியும்.

2வது, இலங்கைத் தமிழர்களின் ஏகோபித்த பிரதிநிதிகள் தாங்கள்தான் என்று விடுதலைப் புலிகளால் கூற முடியாது.

3வது, விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி செய்யாதீர்கள் என வெளிநாடுகளில் உள்ள தமிழர்களைக் கோர முடியும்.

அரசியல் ரீதியிலான தீர்வின் மூலம் மனித உரிமை சிக்கலையும் தவிர்க்க முடியும். இதுதான் இலங்கைத் தமிழர்களை மிகப் பெரிய அளவில் பாதித்துள்ளது.

இலங்கை விவகாரத்தைத் தீர்க்க இந்தியாவும், அமெரிக்காவும் சிறந்த முறையில் பங்காற்ற முடியும். தங்களது அனுபவங்களை இதில் பயன்படுத்த முடியும்.

இந்தியா தலையிட வேண்டும்:

இந்தியத் தலையீட்டின் மூலம் இலங்கைப் பிரச்சினைக்கு நிச்சயம் நல்லதொரு தீர்வைக் காண முடியும் என அமெரிக்கா நம்புகிறது.

இலங்கைப் பிரச்சினைக்கு ராணுவ தீர்வு சாத்தியமல்ல என்று அமெரிக்கா உறுதியாக நம்புகிறது. சமீபத்தில், இலங்கைக்கான ராணுவ உதவிகளை அமெரிக்க அரசு முற்றிலும் நிறுத்தி வைத்தது என்பதை நினைவு கூர விரும்புகிறேன்.

அங்கு நிலவும் மனித உரிமை மீறல்கள் குறித்த புகார்கள் மற்றும் சிறார் வீரர்கள் குறித்து வெளியான தகவல்களைத்தொடர்ந்து இந்தநடவடிக்கையை அமெரிக்கா எடுத்தது. இருப்பினும் தீவிரவாதத்தை எதிர்த்து இலங்கை ராணுவம் போராட முன்பு அமெரிக்கா உதவி செய்தது என்பதை கூறிக் கொள்ள விரும்புகிறேன். இதற்காக இலங்கைக்கு கடல் கண்காணிப்புக்கான ரேடார் அமைப்பு மற்றும் 10 படகுகளை இலங்கை கடற்படைக்கு அமெரிக்கா வழங்கியது.

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு அமெரிக்காவும், அதைத் தொடர்ந்து பிற நாடுகளும் தடை விதித்ததைத் தொடர்ந்து, அவர்களுக்கு வரும் நிதியுதவி கட்டுப்படுத்தப்பட்டது. இதனால் அவர்களால் முன்பு போல ஆயுதங்கள் வாங்க முடியவில்லை. இது சமீபத்திய அவர்களது தோல்வியின் மூலம் தெளிவாகியுள்ளது.

தற்போது அமெரிக்காவிலிருந்து இலங்கைக்குப் போகும் உதவிகள் அனைத்துமே மனிதாபிமான நோக்கில்தான் உள்ளன. அல்லது பொருளாதார, அரசியல் கட்டமைப்பை மேம்படுத்தும் உதவிகளாகவே உள்ளன.

இந்த ஆண்டு மட்டும் அமெரிக்கா 32.7 மில்லியன் மதிப்பிலான உணவு மற்றும் பிற பொருட்ளை இலங்கைக்கு அனுப்பியுள்ளது என்றார் பிளாக்.

மீண்டும் இந்த 'தவறை' செய்வோம்!: சீமான்-அமீர்,இந்தப் பிள்ளைகள் எந்தத் தவறும் செய்யவில்லை: பாரதிராஜா

பிரிவினைவாதத்தைத் தூண்டும்படி நாங்கள் பேசவில்லை. இலங்கையில் செத்துக் கொண்டிருக்கும் எங்கள் உறவுகளுக்காக மனிதாபிமான அடிப்படையில்தான் குரல் கொடுத்தோம். அது தவறென்றால், அந்தத் தவறை மீண்டும் மீண்டும் செய்வோம் என்று இயக்குனர் அமீர் கூறினார்.

ராமேஸ்வரத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக திரையுலகம் நடத்திய பேரணி மற்றும் மாநாட்டில் பிரிவினைவாதத்தைத் தூண்டும் விதத்தில் பேசியதாக இயக்குநர்கள் சீமான் மற்றும் அமீர் மீது வழக்குப் பதிவு செய்து நேற்றும் மாலை கைது செய்தது போலீஸ்.

கைதாகி சிறைக்குச் செல்லும்முன் நிருபர்களிடம் அமீர் கூறியதாவது:

இந்தியாவின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் வகையிலோ, பிரிவினையைத் தூண்டும் விதத்திலோ நாங்கள் எதுவும் பேசவில்லை. அது எங்களுக்குத் தேவையில்லை. மனிதாபிமான அடிப்படையில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவளித்துப் பேசினோம். இந்தக் கொடுமைக்கு எதிராக நாங்கள் குரல் கொடுக்காமல் வேறு யார் குரல் கொடுப்பார்கள்...

தெருவில் இருவர் சண்டை போட்டுக் கொண்டிருந்தால், அதைப் பார்த்துவிட்டு ஒரு நாய் கூட, இந்த சண்டை வேண்டாம் என்ற அர்த்தத்துடன் குரல் கொடுப்பதைப் பார்க்கலாம். அப்படி நாய்களுக்கு இருக்கும் உணர்வு கூடவா மனிதர்களுக்கு இல்லாமல் போய்விட்டது.

இலங்கையில் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கிற எங்கள் உறவுகளுக்காக மனிதாபிமான அடிப்படையில் நாங்கள் எழுப்பிய குரல் தவறென்றால், அந்தத் தவறைத் தொடர்ந்து நாங்கள் செய்துகொண்டே இருப்போம், என்றார் அமீர்.

உடனிருந்த சீமான் கூறியதாவது:

என் இன விடுதலைக்காக வீரத் தமிழ் மறவர்களாக சிறை செல்கிறோம்.

உலகில் எந்த நாட்டிலும் தன் இனம் அழிவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் மனிதர்களைப் பார்க்க முடியாது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்த அவலம். நானும் என் தம்பி அமீரும் ஈழ மக்களுக்கு ஆதரவளித்துப் பேசியதில் எந்தத் தவறும் இல்லை. எங்கள் உறவுகளுக்காக நாங்கள் குரல் கொடுத்தோம்.

உலகில் கோட்டை கட்டி ஆண்ட முதல் இனம், இன்று மண்டபம் அகதி முகாமில் கோணிப்பைக்குள் சுருண்டு கிடக்கிறது. ஈ, எறும்புக்கும் தானம் செய்வதற்காக அரிசி மாவில் கோலம் போட்ட எம் குல மக்கள் இன்று கால்படி அரிசிக்கு வழியின்றி கையேந்தி நிற்கிறார்கள். இந்த அவலத்தை கண்டும் காணாமல் இருக்கச் சொல்கிறீர்களா... தமிழர்களுக்குக் குரல் கொடுத்த பெருமையுடன் சிறைக்குச் செல்கிறோம்.

எங்கள் பேச்சு சரியா தவறா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும், தலைவர்கள் அல்ல என்றார் சீமான்.

இந்தப் பிள்ளைகள் எந்தத் தவறும் செய்யவில்லை: பாரதிராஜா

இந்தப் பிள்ளைகள் (சீமான், அமீர்) எந்தத் தவறும் செய்யவில்லை. இவர்கள் விடுதலையாகும் வரை தமிழ் இன உணர்வுள்ள எந்த இயக்குவரும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.

இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாரதிராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த இரண்டு பிள்ளைகளும் எந்தத் தவறும் செய்யவில்லை. பதவிக்காக இவர்கள் போராடவில்லை. தமிழர்களுக்காக, தமிழ் உணர்வுடன் போராடினார்கள்.

உலகில் எந்த நாட்டிலும் ராமேஸ்வரம் போராட்டத்தைப் போல திரைப்பட இயக்குநர்கள் மிகப் பெரிய போராட்டத்தை நடத்தியதில்லை. இவர்கள் இருவரும் சிறையிலிருந்து விடுதலையாகும் வரை தமிழ் இன உணர்வுள்ள எந்த இயக்குநரும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றார்.

இந்தியாவின் கோடிப்புறத்தை சர்வதேச விளையாட்டு மைதானமாக மாற்ற இந்தியா விரும்பவில்லை - பிரணாப் முகர்ஜி

இலங்கைக்கான இராணுவ உதவியை நிறுத்துமாறு தமிழகக்கட்சிகள் இந்திய மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தி வரும் நிலையில் அதனை மன்மோகன்சிங்கின் அரசாங்கம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இலங்கையின் பாதுகாப்பு என்பது இந்தியாவின் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டது என்றும் அது தெரிவித்துள்ளது.

ராஜ்சபாவில் கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைத் தீவின் கேந்திர முக்கியத்துவத்தை

இந்தியா மறந்து விடக் கூடாது. இது இலங்கையின் பாதுகாப்புடன் மட்டும் சம்பந்தமுடையது அல்ல. இந்தியாவின் பாதுகாப்புடன் தொடர்பைக் கொண்ட ஒரு விடயமாகும்.

அண்மையில் கொழும்பு சென்ற மூன்று இந்திய ராஜதந்திரிகளின் நோக்கத்தை விபரித்த முகர்ஜி இலங்கையின் பாதுகாப்புத் தேவைகளை தாம் நிறைவேற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் வேறு இடங்களை நாட வேண்டாம் எனக் அவர்களைக் கேட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ன உதவிகள் செய்யப்பட வேண்டும். அவர்களின் பாதுகாப்புத் தேவை என்ன என்பது குறித்து ஒரு பொதுவான மதிப்பீடு இருக்க வேண்டும். ஏனெனில் இப்பிரச்சினை இந்தியாவுக்கு நெருக்கமான ஒன்றாகும். இந்தியாவின் கோடிப்புறத்தை சர்வதேச விளையாட்டு வீரர்கள் விளையாடும் விளையாட்டு மைதானமாக மாற்ற இந்தியா விரும்பவில்லை என்பது நிச்சயமான விடயமாகும். இலங்கையின நிலவரம் தொடர்பான மதிப்பீட்டில் இவ்விடயங்கள் யாவும் உள்வாங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

நாச்சிக்குடா , புத்துவெட்டுவான் வரையான முன்னகர்வுகள் முறியடிப்பு: 47 படையினர் பலி! 87 படையினர் காயம்

வன்னிக் களமுனையில் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன.

இதன்போது படையினர் தரப்பில் 47 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 87 படையினர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என விடுதலைப் புலிகள் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.


நாச்சிக்குடா முதல் புத்துவெட்டுவான் வரையிலான முன்னரங்க நிலைகள் இடையே இந்த முன்னகர்வுகள் இடம்பெற்றுள்ளன. சிறீலங்காப் படையினரின் பல்குழல் வெடிகணைகள், ஆட்டிலறி, மோட்டார் எறிகணைகள் மற்றும் கனரக ஆயுத சூட்டாதரவுடன் இந்த முன்னகர்வுகள் இடம்பெற்றுள்ளன.

இந்த முன்னகர்வுகளுக்கு எதிராக போராளிகள் எதிர்ச் சமராடி படையினரை பழைய நிலைகளுக்கு பின்வாங்கச் செய்துள்ளனர். இதன்போது படையினர் தரப்பில் 47 படையினர் கொல்லப்பட்டும் மேலும் 87 படையினர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

வன்னிப் பகுதியில் கன மழை ஆரம்பித்துள்ள நிலையில், படையினரின் முன்னகர்வுகளுக்கு மழை பெரும் தடையாக உள்ளது. அடை மழை பெய்வதற்கு முன்னர் கிளிநொச்சியை ஆக்கிமித்துவிட வேண்டும் என்ற இலக்குடன் படையினர் முன்னகர்வுகளில் ஈடுபட்டுள்ளனர். எனினும் விடுதலைப் புலிகளின் கடுமையான தாக்குதல்களால் படையினரின் முன்னகர்வுகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

இந்தநிலையில் படையினருக்கு ஏற்பட்டு வரும் இழப்புகளை மூடிமறைப்பதற்காக இனிவரும் காலங்களில் போர் முனைச் செய்திகளை சிறீலங்காப் படையினர் வெளியிடப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.

ஐ.நா பொருளாதார மற்றும் சமூக உறுப்புரிமையில் இருந்து சிறீலங்கா நீக்கம்

ஐக்கிநாடுகள் சபையின் வர்த்தக பொருளாதார மற்றும் சமூக உறுப்புரிமையில் இருந்து சிறீலங்கா அரசாங்கம் நீக்கப்பட இருப்பதாக, கொழும்பின் ஊடகம் ஒன்று இன்று தகவல் வெளியிட்டுள்ளது.

18 நாடுகள் அங்கம் வகிக்கும் இந்த அமைப்பில் சிறீலங்காவிற்குப் பதிலாக இந்தியாவை இணைப்பதற்கான வாக்கெடுப்பு எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது.


இலங்கையில் தொடரும் தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள், மற்றும் அடக்கு முறைகளால் இவ்வாறான அனைத்துலக தொடர்புகளையும், அங்கத்துவத்தையும் சிறீலங்கா அரசு இழந்து வருகின்றது.


இவ்வருடம் மே மாதம் 21ஆம் நாள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இருந்து சிறீலங்கா அரசு நீக்கப்பட்டிருந்தது.


சிறீலங்காவின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்த உலக நாடுகள், அந்த நாட்டுக்கு எதிராக வாக்களித்திருந்தன.


இதேபோன்ற கண்டனத்தை வெளியிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம் சிறீலங்கா அரசுக்கு அதிக ஏற்றுமதி வருமானத்தைப் பெற்றுக் கொடுத்துவந்த GSP+ என்ற ஏற்றுமதி வரிச்சலுகையை வழங்க மறுத்து வருகின்றனமை சுட்டிக்காட்டத்தக்கது.

சீமான், அமீர் கைதை கண்டித்து நாளை திரைப்படங்கள் அனைத்தும் ரத்து

தமிழின உணர்வாளரும், திரைப்பட இயக்குனருமான சீமான் சற்றுமுன்னர் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று தமிழகம் முழுவதும் ஈழத்தமிழருக்கு ஆதரவாக நடைபெற்ற மனிதச்சங்கிலி போராட்டத்தில் கலந்துகொண்டு வீடு திரும்பிய சமயத்திலேயே, வீட்டில் வைத்து இக்கைது நடைபெற்றிருப்பதாக அறியமுடிகிறது.

சீமான், மற்றும் அமீர் ஆகியோரின் கைதை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் உள்ள அணைத்து திரையரங்குகளும் மூடப்படவுள்ளதாகவும், திரைப்படக்காட்சிகள் அணைத்தும் ரத்தாகும் எனவும் அறியமுடிகிறது!

நாளை காலை 9 மணியளவில், avm studio விற் முன்னால் திரையுலகக்கலைஞர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தப்போவதாகவும் தெரிவிக்கப்ப்டுகிறது இது குறித்து, இயக்குனர் சீமான், கைதாகிய தருணத்தில் அங்கிருந்த எமது நிருபர் வழங்கிய சிறப்புச்செவ்வி!

thankyou:4tamilmedaia.com

வலிந்த தாக்குதல் அச்சத்தில் சிறீலங்காப் படையினர் - தமிழீழ படைத்துறைப் பேச்சாளர் இ.இளந்திரையன்

கிளிநொச்சியைக் கைப்பற்றும் படை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சிறீலங்காப் படையினர் இப்போது இரவு பகலாக அச்சத்துடன் காணப்படுகின்றமையினை அவதானிக்க முடிகிறது.

எப்போதும் விடுதலைப் புலிகள் ஒரு வலிந்த தாக்குதலை தங்கள் மீது மேற்கொள்ளலாம் கரும்புலிகள் திடீரென பாயலாம் என்கிற அச்சமும் எதிர்பார்ப்பும் தற்போது படையினர் மத்தியில் அதிகரித்துக் காணப்படுகிறது

என விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இ.இளந்திரையன் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் விசுவமடுவில் நடைபெற்ற அநுராதபுரம் விமானப்படைத்தளத்தின் அதியுயர் பாதுகாப்பு வியூகத்தினுள் புகுந்து எல்லாளன் படை நடவடிக்கையினை வெற்றிகரமாக மேற்கொண்டு தங்கள் இன்னுயிர்களை அர்ப்பணித்த 21 சிறப்புக் கரும்புலிகளின் ஓராண்டு நினைவு நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வன்னியைக் கைப்பற்றும் படை நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கும் தளபதிகளில் சிலர் ஏற்கனவே விடுதலைப் புலிகளின் தாக்குதல் நடவடிக்கைகளின் போது தோல்வியுற்று பின்வாங்கியவர்கள். இவர்களுக்கு இந்த அச்சம் ஏற்படுவது தவிர்க்க முடியாததே எனவும் அவர் தெரிவித்தார்.

கிளிநொச்சியின் மேற்குப்பகுதிகளில் படைநடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் படையினர் தற்போது குழம்பிய நிலையிலுள்ளனர். படைத்தரப்பினர் நினைத்தது போல் ஒரு காலவரையறைக்குள் வன்னியை ஆக்கிரமிக்கும் நிகழச்சி நிரல் விடுதலைப் புலிகளின் கடுமையான எதிர்தாக்குதல்களால் முடியதாது போயுள்ளது.

தங்களது இயலாமை காரணமாகவே மக்கள் வாழ்விடங்களின் மீது எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டு அவர்களை இடம்பெயரச்செய்து வருகின்றார்கள். இன்று மக்கள் இடம்பெயர்ந்து சொல்லொணா துன்பங்களை அனுபவித்த வருகின்றார்கள்.

வியட்நாம் விடுதலையடையும் இறுதித் தருணத்திலும் அங்குள்ள மக்கள் இவ்வாறானதோர் துயரத்தை அனுபவித்தமையினை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். நம்பிக்கையும் விடுதலை மீதான பற்றுறுதியுமே எங்கள் விடுதலையை விரைவாக்கும் எனவும் அவர் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்தார்.

இந்நிகழ்வு விசுவமடு மாவீரர் மண்டபத்தில் விசுவமடுக்கோட்ட மாவீரர் செயற்பாட்டுக்குழுவின் தலைவர் திரு. ஞானம் தலைமையில் இடம்பெற்றது. பொதுச்சுடரேற்றப்;பட்டு, தேசியக்கொடியேற்றப்பட்டு வீரச்சாவடைந்த 21 கரும்புலி மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு ஈகச்சுடரேற்றி மலர் மாலைகள் சூட்டப்பட்டு பொது மக்களால் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. வன்னியில் மேலும் பல பகுதிகளிலும் இக் கரும்புலிகளுக்கு நினைவு கூரும் நிகழ்வு இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

http://cache.daylife.com/imageserve/06L3fohc5K9vw/610x.jpg

கொட்டும் மழையில் மனித சங்கிலி: கருணாநிதி தொடங்கி வைத்தார்


ஈழத்தில் போரை நிறுத்த வலியுறுத்தியும், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும் அனைத்துக்கட்சிகள் சார்பில் மாபெரும் மனித சங்கிலி அணிவகுப்பு இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் கன மழையின் மத்தியில் நடைபெற்றது.


சென்னை மாட்ட ‌‌ட்சிர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி ணிவகுப்பை தொடங்கி வைத்தார்.
ஈழத்தில் அப்பாவி தமிழர்கள் சிறீலங்கா படையினரால் கொலை செய்யப்படுவதை கண்டித்தும், ஈழத்தில் அமைதி ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வற்புறுத்தியும், அனைத்துக் கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வற்புறுத்தியும் இன்றைய போராட்டம் நடைபெற்றது.


கடந்த 21ஆம் நாள் நடைபெறவிருந்த இந்த மனித சங்கிலிப் போராட்டம் கன மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இன்றும் அடை மழையின் மத்தியில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

http://www.pathivu.com/uploads/images/2008/manitha_sankili_chennai_3.jpg


இன்று மாலை 3:00 மணிக்கு தொடங்கிய மனித சங்கிலிப் போராட்டம் 5:00 மணிவரை நடைபெற்றது.


மனித சங்கிலி அணிவகுப்பை தொடங்கி வைத்த முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, திறந்த 'ஜீப்' ஊர்தி மூலம் மனித சங்கிலி நடைபெறும் இடங்களை சென்று பார்வையிட்டார்.
மாவட்ட ட்‌‌சியர் அலுவலகம் முதல் அண்ணா சிலைவரை, வடசென்னையை சேர்ந்தவர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள், சட்டவாளர்களுடன் அமைச்சர் ஆற்காடு வீராசாமி கலந்துகொண்டார்.


அண்ணாசிலை முதல் கிண்டிவரை, மாணவர்கள் மற்றும் பா...வினர் ணிவகுப்பில் ங்கேற்றுள்ளனர். அவர்களுடன் அமைச்சர்கள் துரைமுருகன், .பொன்முடி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

http://www.pathivu.com/uploads/images/2008/manitha_sankili_chennai_1.jpg


தேனாம்பேட்டையில் இருந்து கிண்டி மேம்பாலம் வரை சனநாயக முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜெகத்ரட்சகன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர்.
கிண்டி முதல் தாம்பரம் வரை, திரைப்பட துறையினர் மற்றும் தென்சென்னையை சேர்ந்தவர்களுடன் அமைச்சர் மு..ஸ்டாலின் ங்கேற்றுள்ளார்.
தாம்பரம் முதல் சிவானந்த குருகுலம் வரை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தினருடன் ஆலந்தூர் பாரதி ள்பட ல்வேறு முக்கியபிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
சிவானந்த குருகுலம் முதல் செங்கல்பட்டு வரை வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுடன் அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம்,

http://www.pathivu.com/uploads/images/2008/manitha_sankili_chennai_2.jpg ..வேலு ஆகியோரும், செங்கல்பட்டு முதல் பிறமாவட்டங்களை சேர்ந்தவர்களுடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, .பெரியசாமி ஆகியோரும் ங்கேற்று‌‌ள்ளனர்.
இந்த மனிதச்சங்கிலி அணிவகுப்பில் பல்வேறு கட்சிகளும், அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் உள்பட பல்வேறு சங்கங்களும் கலந்துகொண்டுள்ளனர்.


தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் தலைமையில் அந்தக் குழுவில் அங்கம் வகிக்கும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இன்றைய மனித சங்கிலியில் பெரும் திரளாகக் கலந்துக் கொண்டார்கள்.


திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன், இந்திய பொதுவுடமைக் கட்சியின் தலைவர்கள் என அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சிகள், மற்றும் அமைப்புக்களின் தலைவர்கள் தமது தொண்டர்களுடன் பெருமளவில் இன்றைய மனித சங்கிலிப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

திரைப்பட இயக்குனர் சீமான் மற்றும் அமீர் ஆகியோர் கைது


இதுகுறித்து இயக்குநர் சீமான் கூறியதாவது:

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசியதற்காக என்னையும் தம்பி அமீரையும் கைது செய்ய வழக்குப் பதிவு செய்துள்ளார்களாம். இதுகுறித்து போலீசார் எனக்குத் தகவலும் கூறியுள்ளனர். அவர்கள் இப்போது என்னைக் கைது செய்ய வந்து கொண்டிருக்கிறார்கள்.

நான் இந்தக் கைதை மகிழ்ச்சியாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன். நான் தவறாக எதையும் பேசவில்லை. செத்து மடிந்து கொண்டிருக்கிற என் சகோதரனுக்கு ஆதரவுக் குரல் கொடுத்தது தவறா? அது தவறு என்றால் அதை நான் எப்போதும் செய்து கொண்டே இருப்பேன். நான் பேசியதில் எந்தத் தவறும் இல்லை. இந்தப் பேச்சுக்காக உலகத் தமிழர்கள், அறிஞர்கள், தலைவர்கள் பலரும் என்னைப் பாராட்டினார்கள். இந்தக் கைது எனக்குப் பெருமைதான்!, என்றார் சீமான்.

திரைப்பட இயக்குனர் சீமான் மற்றும் அமீர் ஆகியோர்; கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டின் முன்பாக செய்தி அறிந்த திரைப்பட இயக்குனர்கள், துறைசார்கலைஞர்கள், ஆதரவாளர்கள் பெருமளவில் குழுமியிருந்தனர். இவரது வீட்டிற்கு அருகாமையில் காவற்துறையினரும்; குழுமியிருந்தனர்.

சீமான் மற்றும் அமீர் ஆகியோர் வீட்டில் இருந்து வெளியே சென்று மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் கலந்துவிட்டு வீடு திரும்பும் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இயககுனர்கள் பாரதிராஜா, பாலுமகேந்திரா, இராம.நாராயணன் ஆகியோரும், ஏராளமான சினிமாத்துறை சார்ந்தோரும் குழுமியுள்ளதால் அங்கு ஒருவித பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு இருந்தது.

ராமேஸ்வரம் கூட்டத்தில் இன உணர்வுமிக்க சீமான் ஈழத்தமிழர்கள் குறித்தும், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் குறித்தும், விடுதலைப் புலிகள் அமைப்புக் குறித்தும் அவரது பல விடயங்களை உரையிலே வெளிப்படுத்தியிருந்தார். அவ்வுரை குறித்தே அவரைக் கைது செய்யவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை அதிமுகவின் தலைவி ஜெயலலிதா மற்றும் தமிழகாங்கிரஸ் கட்சியினர் சீமான், அமீர் ஆகியோரைக் கைது செய்யுமாறு வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாரதிராஜா கைதாவாரா?

அமீர், சீமான் இருவரும் கைது செய்யப்பட்ட பிறகு பாரதிராஜா மற்றும் சேரனையும் போலீசார் கைது செய்யக்கூடும் எனத் தெரிகிறது

இலங்கைத் தமிழர்களுக்காக நாங்கள் ஏன் உண்ணாவிரதம் இருக்கவேண்டும்? அஜித் அர்ஜன் கேள்வி - புலம்பெயர்ந்த தமிழ் இரசிகர்கள் கொதிப்பு

இலங்கைத் தமிழர் எதிர்நோக்கும் நெருக்கடிகளைக் கண்டித்து நடிகர் சங்கம் சார்பில் எதிர்வரும் முதலாம் திகதி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தியாகராய நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் இந்த உண்ணாவிரதம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளளது.

இதில் நடிகர் நடிகைகள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நடிகர் சங்கத்தில் சுமார் 3 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். உண்ணாவிரதத்தில் பங்கேற்குமாறு ரஜினி, கமல் உட்பட அனைவருக்கும் தனித்தனியாக நடிகர் சங்கம் கடிதங்கள் அனுப்பி வருகிறது. ரஜினி, கமல் உள்ளிட்ட அனைவரும் இதில் பங்கேற்கிறார்கள். உண்ணாவிரதத்தையொட்டி முதலாம் திகதி படப்பிடிப்பில் நடிகர், நடிகைகள் பங்கேற்கமாட்டார்கள் என நடிகர் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். வெளியூர் படப்பிடிப்பில் இருக்கும் நடிகர், நடிகைகள் முதலாம் திகதி திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நடிகர்களான அஜித்தும், அர்ஜனும் இலங்கையில் இருக்கிற தமிழர்களுக்காக நாங்கள் ஏன் இங்கே உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வேண்டும் எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். இவர்களின் இந்தக் கருத்து இலங்கைத் தமிழர்களை பெரும் ஆத்திரத்திற்கு உள்ளாக்கியுள்ளது. குறிப்பாக புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இவர்களின் கருத்து வெளிவந்த சில மணி நேரங்களில் இவர்களது படங்களைப் புறக்கணிக்குமாறு வலியுறுத்தி சுவரொட்டிகள் பிரான்ஸ் உட்பட பல நாடுகளில் ஒட்டப்பட்டுள்ளன.

இதேவேளை, இவர்கள் இருவரினது கருத்தால் இவர்களை வைத்து தயாரிக்கும் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களே இவர்களின் படங்களை பெரும் விலை கொடுத்து வாங்கி திரையிடுகின்றார்கள். ஈழத்தமிழர்களின் உழைப்பைச் சுரண்டி இவர்களுக்கு கொடுக்கின்றார்கள். இப்படியானவர்களின் படங்களை எடுத்து வெளியிடுபவர்கள் இனிமேல் சிந்திக்கவேண்டும் என மக்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, எதிர்வரும் முதலாம் திகதி யார் யார் கலந்துகொள்கின்றார்கள். யார் கலந்துகொள்ளவில்லை என்பதை தமிழ் பாதுகாப்பு இயக்கத்தினர் உன்னிப்பாக அவதானிக்கவுள்ளதாக நக்கீரன் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மட்டக்களப்பு வாழ் தமிழ் பேசும் உறவுகளுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்! - தமிழீழ விடுதலைப் புலிகள்

மகிந்தவின் பேரினவாத அரசு போடும் நாடகங்களை எமது மக்களை வைத்து அரங்கேற்றி உலகிற்கு தமிழரின் உரிமைப் போராட்டத்தை அர்த்தமற்றதாக்கும் வகையில்

இனத்துரோகிகள் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறை இன்று வெள்ளிக்கிழமை "மட்டக்களப்பு வாழ் தமிழ் பேசும் உறவுகளுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!" எனும் தலைப்பில் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழ் மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் தர்மப் போர் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கும் இந்த வேளையில் இந்தியாவில் வாழும் எமது தொப்புள்கொடி உறவுகளான எமது மக்கள் ஓரணியாக அணிதிரண்டு இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு ஓர் விடிவு கிடைக்க வேண்டி இந்திய அரசுக்கு முன்னால் பல போராட்டங்களை நடாத்தி வரும் இந்த சந்தர்ப்பத்தில் உலகின் பல பாகங்களிலும் வாழும் எமது உறவுகளும் தாயக மண்ணின் விடிவுக்காக தொடர்ந்தும் குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்த வேளையில், எமது மண்ணில் அதற்கு எதிர்மாறான கருத்துக்களையும் செயற்பாடுகளையும் சிங்களப் பேரினவாத அரசின் கைப்பொம்மைகளாக செயற்படும் இனத்துரோகிகள் மேற்கொண்டு வருகின்றார்கள். அதன் ஒரு கட்டமாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (26.10.08) மட்டக்களப்பு பொது விளையாட்டு மைதானத்தில் ஆர்ப்பாட்டப் பேரணி நடாத்த திட்டமிட்டிருக்கின்றனர். இந்த செய்தியினை நீங்கள் நன்கறிவீர்கள்.

மகிந்தவின் பேரினவாத அரசு போடும் நாடகங்களை எமது மக்களை வைத்து அரங்கேற்றி உலகிற்கு தமிழரின் உரிமைப் போராட்டத்தை அர்த்தமற்றதாக்க இந்த இனத்துரோகிகள் முயற்சி செய்கின்றனர்.

ஆகவே, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பங்களிப்புச் செய்து வரலாற்றுத் தவறினை இழைக்க வேண்டாம் என உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.