நாச்சிக்குடா , புத்துவெட்டுவான் வரையான முன்னகர்வுகள் முறியடிப்பு: 47 படையினர் பலி! 87 படையினர் காயம்

வன்னிக் களமுனையில் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன.

இதன்போது படையினர் தரப்பில் 47 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 87 படையினர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என விடுதலைப் புலிகள் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.


நாச்சிக்குடா முதல் புத்துவெட்டுவான் வரையிலான முன்னரங்க நிலைகள் இடையே இந்த முன்னகர்வுகள் இடம்பெற்றுள்ளன. சிறீலங்காப் படையினரின் பல்குழல் வெடிகணைகள், ஆட்டிலறி, மோட்டார் எறிகணைகள் மற்றும் கனரக ஆயுத சூட்டாதரவுடன் இந்த முன்னகர்வுகள் இடம்பெற்றுள்ளன.

இந்த முன்னகர்வுகளுக்கு எதிராக போராளிகள் எதிர்ச் சமராடி படையினரை பழைய நிலைகளுக்கு பின்வாங்கச் செய்துள்ளனர். இதன்போது படையினர் தரப்பில் 47 படையினர் கொல்லப்பட்டும் மேலும் 87 படையினர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

வன்னிப் பகுதியில் கன மழை ஆரம்பித்துள்ள நிலையில், படையினரின் முன்னகர்வுகளுக்கு மழை பெரும் தடையாக உள்ளது. அடை மழை பெய்வதற்கு முன்னர் கிளிநொச்சியை ஆக்கிமித்துவிட வேண்டும் என்ற இலக்குடன் படையினர் முன்னகர்வுகளில் ஈடுபட்டுள்ளனர். எனினும் விடுதலைப் புலிகளின் கடுமையான தாக்குதல்களால் படையினரின் முன்னகர்வுகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

இந்தநிலையில் படையினருக்கு ஏற்பட்டு வரும் இழப்புகளை மூடிமறைப்பதற்காக இனிவரும் காலங்களில் போர் முனைச் செய்திகளை சிறீலங்காப் படையினர் வெளியிடப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.

No comments: