ஐ.நா பொருளாதார மற்றும் சமூக உறுப்புரிமையில் இருந்து சிறீலங்கா நீக்கம்

ஐக்கிநாடுகள் சபையின் வர்த்தக பொருளாதார மற்றும் சமூக உறுப்புரிமையில் இருந்து சிறீலங்கா அரசாங்கம் நீக்கப்பட இருப்பதாக, கொழும்பின் ஊடகம் ஒன்று இன்று தகவல் வெளியிட்டுள்ளது.

18 நாடுகள் அங்கம் வகிக்கும் இந்த அமைப்பில் சிறீலங்காவிற்குப் பதிலாக இந்தியாவை இணைப்பதற்கான வாக்கெடுப்பு எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது.


இலங்கையில் தொடரும் தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள், மற்றும் அடக்கு முறைகளால் இவ்வாறான அனைத்துலக தொடர்புகளையும், அங்கத்துவத்தையும் சிறீலங்கா அரசு இழந்து வருகின்றது.


இவ்வருடம் மே மாதம் 21ஆம் நாள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இருந்து சிறீலங்கா அரசு நீக்கப்பட்டிருந்தது.


சிறீலங்காவின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்த உலக நாடுகள், அந்த நாட்டுக்கு எதிராக வாக்களித்திருந்தன.


இதேபோன்ற கண்டனத்தை வெளியிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம் சிறீலங்கா அரசுக்கு அதிக ஏற்றுமதி வருமானத்தைப் பெற்றுக் கொடுத்துவந்த GSP+ என்ற ஏற்றுமதி வரிச்சலுகையை வழங்க மறுத்து வருகின்றனமை சுட்டிக்காட்டத்தக்கது.

No comments: