ஜோசப் படைத்தளம் மீதான தாக்குதல் சிறீலங்காவின் பின்புலதாருக்கு வலித்திருக்கும்

vavunia-83n803e.jpgவவுனியாவின் அதிகாலைப்பொழுதை அதிர வைத்த வெடியோசை சிறீலங்காவின் அரசையும் படைத்தலைமையையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தமிழீழ விடுதலைப்புலிகள் தேர்ந்தெடுத்த இலக்கு சிறிய சலசலப்பை ஏற்படுத்தியதொன்றல்ல. ஜோசப் படைதளம் என்றால் அது புலிகள் மூச்சுக்கூடப் பட்டுவிட முடியாத இடமாக படையாள் ஒருவர் தொடக்கம் சிறீலங்காவின் படைத்தளபதி சரத் பொன்சேகா வரை அதீத நம்பிக்கை வைத்திருந்த இடம்.

வவுனியா நகரின் தெற்காக ஐநூறு மீற்றர் தொடக்கம் சுமார் நான்கு கிலோமீற்றர் வரை நீண்ட நிலப்பரப்பில் அமைந்துள்ள ஜோசப் படைத்தளம் மேற்காக ஏ9 வீதியை எல்லையாகக் கொண்டது. சிறீலங்காவின் வான்படைத்தளமும், வன்னிக்கான கூட்டுப்படை கட்டளைத்தளமும் அமைந்துள்ள குறிப்பிட்ட இந்தத் தளம் மீது புலிகள் முப்படைகளை கொண்டு தாக்கியமை சிறீலங்கா அரசையும் படைத்தலைமையையும் புலிகள் மீதான கிலியை அதிகரிக்கவே செய்திருக்கும்.

தளம்பற்றிய விடயங்களை ஆராய்கின்ற போது இந்தத் தளத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள முடியும். வடக்குப்புறமாக சூசைப்பிள்ளையார்குளம், இறும்பைக்குளம், கிழக்காக கோவிற்குளம், கல்நாட்டியகுளம் தெற்காக ஈரப்பெரியகுளம், மேற்காக ஏ9 வீதி (இந்தப்பக்கம் கற்குழி, தேக்கங்தோட்டம், மூன்று முறிப்பு ஆகிய கிராமங்கள் உள்ளன.) குறிப்பிட்ட இந்த கிராமங்களில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழரை விரட்டியபின்னர் மக்களின் வாழ்விடங்களையும் தோட்டக்காணிகளையும் வவுனியா காட்டிலாக அலுவலகம் விதை உற்பத்தி நிறுவனத்தின் கட்டிடம் என்பனவற்றையும் வன்பறிப்பு செய்து வைத்துள்ள இடம் தான் ஜோசப் படைத்தளம்.

1984 ம் ஆண்டு வவுனியா நகரில் இருக்கும் இறைச்சிக் கடையில் இறைச்சி வாங்குவதற்காக ஜீப் ஒன்றில் வந்த படையினர் மீது தாக்குதல் நடத்தியதில் நான்கு சிறீலங்கா வான்படையினர் பலியானார்கள். இதற்குப் பழிவாங்கும் முகமாக நகரில் நவீன சந்தை, தமிழரின் கடைகள் என்பனவற்றை தீயிட்டு கொழுத்தியதுடன் கொள்ளையிட்டார்கள். பொது மக்களைப் படுகொலை செய்தார்கள். இளம் பெண்களை வன்புணர்ச்சிக்குள்ளாக்கினார்கள். அந்த நாள் தொடக்கம் சிறிய வானூர்தி ஓடு தளம் மட்டும் அமைந்திருந்த இடம் இன்று பல தமிழரின் பல கிராமங்களை பிய்த்தெடுத்து பெரியதொரு கிராமத்தையே அமைத்து கொண்டது போலத்தான் இப்படைத்தளம் இருக்கிறது.

"பெரு நம்பிக்கை கொண்ட தளத்திற்குள் தமிழீழ விடுதலைப்புலிகள் எவ்வாறு துல்லியமாக தகவல்களை திரட்டினார்கள்? நுழைந்தார்கள்? என்பது வியப்புக்குரிய கேள்விதான்"

இந்தப் படைத்தளத்திற்குள் தென் கிழக்குப்புறமாக அமைந்துள்ள கட்டிடத்தில் கூட்டுப்படைதளபதிகளின் மகாநாடு நடப்பது வழமை. முன்பு தளத்திற்குள் நுழைவதற்கு பல வாயில்கள் இருந்தன. ஆனால் 1999 ம் ஆண்டிற்கு பின் ஈரப்பெரியகுளம் சந்தியில் இருந்தே படைத்தளத்திற்குள் நுழைவதற்கு வாயில் உள்ளது. MI 17 போன்ற துருப்புக்காவி உலங்கு வானூர்திகளை நிறுத்தி வைப்பதற்கான தகரத்தினால் ஆன பாரிய கொட்டகைகள் (இது வானூர்திகளை மறைத்து வைப்பதற்காக அமைக்கபட்ட கொட்டகைகள்) பலவுள்ளன.

சிறீலங்கா வான்படையினருக்கான பயிற்சிகள் நடைபெறும் இடமும் நவீன ராடர் கருவிகளும் இங்குள்ளன. தமிழ் மக்களின் விடுதலைப் போரை மனோவியல் ரீதியாக நலிவடையச் செய்வதற்காக மத்திய அலைவரிசை, பண்பலை வரிசை ஆகியவற்றினூடாக இயங்கிய வானொலிகளான வானம்பாடி, வன்னிச்சேவை என்பனவும் இங்கிருந்தே இயங்கியது.

வானூர்தித்தளம் கூட்டுப்படைத்தளம் கூட்டப்படைதளம் என்பவற்றின் பாதிப்புக்காக நாலாபுறமும் மின்னொளி பாய்ச்சப்பட்டிருக்கும். கொமோண்டோ முட்கம்பிகள் சுருள் சுருளாக போட்டு அதற்கும் மின் பாய்ச்சபட்டுள்ளது. சீமெந்தினால் ஆன எட்டடி உயரமான தூண்களை நட்டு அதில் ஆறு அங்குலத்திற்கும் அதிகமான முட்கம்பிகளை அடித்துள்ளார்கள். எல்லையோரம் இவற்றை அடுக்கடுக்காக செய்து வைத்துள்ளதுடன் தொடர் பதுங்கு குழிகளில் இருபத்தி நான்கு மணி நேரமும் படையாட்கள் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இடையிடையே கண்காணிப்பு கோபுரங்கள் பலவுள்ளன. குறிப்பிட அடுக்கடுக்கான தளத்தின் பாதுகாப்போடு மிதிவெடி பொறிவெடி வயல்களும் தாராளமாகவுள்ளது. இவற்றையும் தாண்டி புலிகள் நுழைந்து விட்டாலும் என்ற நோக்கத்தில் ஒவ்வொரு மணி நேர இடைவெளியில் சிறிய படைக்காவி ஊர்தியொன்று எல்லையோரங்களை கண்காணிப்பதற்காக சென்று வரும்.

ஆய்வு முரசத்திற்காக மதி

தவிரவும் தளத்திற்குள் எல்லையோர கண்காணிப்பில் இருந்து சுமார் இருநூறு மீற்றர் தொலைவில் பாரிய நிலக்கீழ் பதுங்கு குழிகளைக் கொண்ட காவலரண்கள் பலவுள்ளன. இவை சிறிய முகாம்களைப் போல அமைக்கப்பட்டிருக்கும். ஐம்பது கலிபர் போன்ற கனரக சுடுகுழல்கள் எந்த வேளையிலும் எல்லையோரங்களில் இயங்கும் நிலையில் இருக்கும். மோட்டார், ஆட்டிலெறித் தளங்கள் என்பன கல்நாட்டிய குளம் பக்கமாக இருப்பதனால் படையாட்களை கொண்டவர்கள் சுற்றுக்காவலிலும் ஈடுபடுகின்றனர். மிகவும் இறுக்கமான பாதுகாப்பு கொண்ட தளத்தினுள் புலிகள் எவ்வாறு நுழைந்தார்ளோ?

தளத்தின் வடமேற்குப் புறமாக சிறீலங்கா காவற்துறையின் வன்னிக்கான உயர்பீடங்கள் அமைந்துள்ளன் பயங்கரவாத குற்றத்தடுப்பு காவற்துறையினரின் விசாரணைப்பீடம், சிறைக்கூடம் என்பனவும் உள்ளன. இவை தளத்தின் குறிப்பிட்ட எல்லையோர பாதுகாப்பிற்கு வெளியே இருப்பது கூட தளத்திற்கான பாதுகாப்புத்தான்.

இவ்வளவு இறுக்கமான பாதுகாப்பு இருந்தமையால்தான் தளத்தினுள்ளே படைத்தளபதிகள் நீந்திக்குளித்து உற்சாகமாக இருப்பதற்கு கோடிக்கணக்கான பணங்களை செலவு செய்து நீச்சல் தடாகம் ஒன்றை அமைத்து வைத்துள்ளார்கள்.

பெரு நம்பிக்கை கொண்ட தளத்திற்குள் தமிழீழ விடுதலைப்புலிகள் எவ்வாறு துல்லியமாக தகவல்களை திரட்டினார்கள்? நுழைந்தார்கள்? என்பது வியப்புக்குரிய கேள்விதான். சிறீலங்கா படைத்துறையின் படைத்தளபாடரீதியான பலம் அமிகமெனும் தமிழீழ விடுதலைப் புலிகளது பலம் மதிநுட்பம் கொண்டதாகவுள்ளது. சிறீலங்காவில் சனாதிபதியகாக மகிந்த ராஜபக்ச பதவியேற்றபின்னர் வீரமுழக்கம் செய்தார். இதோ புலிகள் அழித்து விடுகிறேன். கதை முடிகிறது என்று. போரியர் ரீதியாக புலிகளது தந்திரோபாய நடவடிக்கைகளை எல்லாம் புலிகளது பலவீனம் என்று எண்ணி அறிக்கை விட்டார்.

ஆனால் உண்மையில் நடப்தென்ன என்பதை கவனிக்கத் தவறுகின்வர்காக ஒரு தகவலைச் சொல்வது பொருத்தமானதாக இருக்குமென எண்ணுகிறேன். தமிழீழ விடுதலைப் புலிகள் ஆளணி இழப்புகளைக் குறைத்தது சிறீலங்காப் படைத்தரப்பின் கட்டுமானங்களைச் சிதைத்து வருகிறார்கள். மகிந்த ராஜபக்சவின் காலத்தில் புலிகளது புதிய தொழில்நுட்பம் நன்றாக வேலை செய்வதாகத்தான் தெரிகிறது.

பலாலி வான்படைத்தளம், அனுராதபுரம் வான்படைத்தளம், கட்டுநாயக்கா வான்படைத்தளம் இறுதியாக வவுனியா வான்படைத்தளம் என்பனவற்றைப் புலிகள் குறிவைத்தமையின் மூலம் புலிகளது தன்மை என்னென்று புரிந்து கொள்ள முடியுமல்லவா? இவற்றில் அனுராதபுரம், வவுனியா ஆகிய மாவட்டங்களில் புலிகள் வேறுபாடு கொண்ட தாக்குதல்களைச் செய்தார்கள். ஆனால் அவையிரண்டும் ஒரேமாதிரியான தாக்ககுதலாக தெரிந்தது. எனினும் இவற்றை நாம் சரியாக அலசி ஆராய்ந்து பார்க்கையில் சிறீலங்காப்படையை புலிகள் திணற வைக்கின்றனர் என்று சொல்லலாம். பலாலியில் முதலில் தமிழீழ வான்படை தாக்கிய போது ஊடகமொன்றில் சிறீலங்காப்படைத்துறைப் பேச்சாளர் கூறுகையில் அங்கு ஒரு பட்டம் கூடப் பறக்கவில்லை என்றார். இதுபற்றி தமிழீழ படைத்துறைப்பேச்சாளர் இளந்திரையனிடம் அதே ஊடகம் தொடர்பு கொண்டு கேட்டபோது அங்கு பட்டம் பறந்ததா இல்லையாவென அவர்களுக்குத் தான் தெரியும் என்றார்.

தமிழீழ வான்படையின் வானுர்திகள் கட்டுநாயக்காவில் தாக்கியபோது அங்கு ஏற்பட்ட அழிவுகளை மூடி மறைத்தனர். பலாலி மீது இரண்டாவது தடவஐ வான்தாக்குதல் செய்த புலிகள் பூனகரியில் இருந்து ஏக காலத்தில் ஆட்டிலெறித்தாக்குதலையும் நடத்தினர். கொழும்பில் இருக்கும் ஊடகவிலயலாளர்களை அருகில் இருக்கும் கட்டுநாயக்கா வான்படைத்தளத்திற்கு அழைத்துச் செல்லாத சிறீலங்காப் படைத்தலமை பலாலிக்கு வேக வேகமாக அழைத்துச்சென்று சேதமெதுவும் ஏற்படவில்லை எனக் காண்பித்தது. ஆனால் அனுராதபுரம் மீதான தாக்குதல் புதிய வடிவத்திலானதாக அமைந்தது. நவீன போர்க்கருவிகளுடன் கரும் புலிகள் களமிறங்கி இலக்கை அழிக்க தமிழீழ வான்படையும் தாக்குதலை நடத்தியது. சிதைத்தழிக்கபட்ட அனுராதபுரம் வான்படைத் தளத்தை மூடி மறைக்க வழியின்றி திணறினார்கள். அழிவைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் கரும்புலிகளின் உடலங்களுடன் வீர விளையாட்டுக் காட்டியது வேறுகதை. (அது சிங்கள இனத்தை அவர்களே அவமானப்படுத்தியதற்கு சமமானது என ஒரு சில சிங்களச் சிந்தைனயாளர்களே சொல்லிக்கொண்டார்கள்.

இவை எல்லாவற்றிக்கும் முற்றிலும் புறம்பாக வவுனியா வான்படைத்தளம் மீதான தாக்குதல் அமைந்தது. கரும்புலியணி இலக்கை அழித்துக்கொண்டிருக்க ஆட்டிலெறி தாக்குதலும் துல்லியமாக நடத்தப்பட்டுக்கொண்டிருக்க தமிழீழ வான்படையும் மூன்று தடவை குண்டுவீச்சுத் தாக்குதலைச் செய்துள்ளது. அதிகாலை மூன்று மணி தொடக்கம், காலை எட்டு மணிவரை தொடராக வெடியோசை வவுனியா நகரையே அதிரவைத்துக்கொண்டிருந்தது. வவுனியா வாழ் மக்கள் ஆங்கிலத்திரைப்படம் ஒன்றைப் பார்ப்பது போலவும் கண்முன்னே நடக்கும் காட்சியின் கதை தெரியாமலும் திகைப்பில் இருந்துள்ளனர். அவ்வளவு வெடியோசைகளை கேட்டு ஓய்ந்த பின்னர் அரச தரப்பினர் அங்கு சிறிய சேதம் தான் எனக் கூறியதைக் கேட்டால் அந்த மாவட்ட மக்களை சிரிப்பதைத் தவிர வேறு எதனைத் தான் செய்திருப்பார்கள்.

பலத்த பாதுகாப்பு கொண்ட வவுனியா ஜோசப் படைத்தளம் மீதான தாக்குதல் சிறீலங்காப் புலனாய்வாளர்களையும் மாரடிக்க வைத்துள்ளது. இது போன்ற தாக்குதல் நடைபெறப்போவதை முற்கூட்டியே அறியவில்லை. தாக்குதல் நடந்த பின்னரும் தலையைப் பிய்த்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள். நுழைய வழி இல்லாத இடத்திற்குள் எப்படி புலிகள் தகவல்களைத் திரட்டினார்கள். இப்படியொரு திட்டத்தை நிறைவேற்றினார்கள் என்பது சிறீலங்காவின் அனைத்து புலனாய்வாளர்களுக்கும் குழப்பத்தையும் நெருக்கடியையும் ஏற்படுத்தக்கூடியவொன்றுதான்.

ஒட்டு மொத்தமாக ஜோசப் படைத்தளம் மீதான தாக்குதல் சிறீலங்கா அரசிற்கும் அதன் தமிழன அழிப்பிற்கு துணை போகின்ற வல்லாதிக்க சக்திகளுக்கும் ஒரு செய்தியை விளக்கியுள்ளது. ஈழத்தமிழரின் விடுதலைப்போராட்டம் சந்தையில் விற்கும் ஒரு பொருளல்ல. அது ஒரு தேசியத்தின் ஆன்மா புனிதம் கொண்டது. நேர்மை பொதிந்தது. விடுதலைக்கான இதுவரைகால விலைகொடுப்பினை விலைமதிக்க முடியாத தியாகம் நிறைந்தது. எனவே தான் உலகத்தவரில் துணிவான செயல் புரியும் தற்கொடையாளர்களும் தமிழீழ விடுதலைக்காக உயிர்களை தற்கொடை செய்கின்றார்கள்.

எந்தவொரு மனிதனும் எப்போது சாவேன் எனச் சொல்லமுடியாது. கரும்புலிகள் எப்பொழுது சாவைத் தழுவ வேண்டும் என்று தெரிந்து நெஞ்சுரத்தோடு செல்கின்றனர் என்றால் அது ஏன்? எப்படி? எதற்காக செய்வதற்கு துணிகின்றனர் எனப் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழீழ மக்கள் மீது சிறீலங்காவின் மிகையொலி குண்டு வீச்சு விமானங்கள் பலதடவை குண்டுகளை வீசியுள்ளன. குழந்தைகள் உள்ளடங்கலாக மக்கள் உடல் சிதறிப்பலியாகியுள்ளனர். 1984 ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை ஏராளம் தாக்குதல்களைப் பட்டியலிடமுடியும். எதிரி நாட்டின் மீது தாக்குதல் நடத்துவது போன்று தொடராக தாக்குதல்களை செய்துள்ளமை பற்றி உலகம் நேர்மையாக பார்க்க தவறியுள்ளது. ஆகவே தான் எமதுறவுகளை நாமே காப்பாற்றுவோம் எனப் புறப்பட்டவர்கள் தான் கரும்புலிகளும் தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துப் போராளிகளும். அவர்கள் தியாகத்தின் முதிர்ச்சி தான் தமிழீழ வான்படை. ஆற்றலுள்ள விலைபோகாத தலைவரின் வழிகாட்டலில் ஈழத்தமிழினம் நாடில்லாத உலகத்தமிழினத்திற்கு நாடொன்றை காண்பிக்கின்றது. எனவே அதனை தேசியம் வலுமிக்கது என்பதனை உலகத்தவரே புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியா அதன் பிராந்திய நலனிற்காக தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் அதன் உட்கிடக்கையையும் சரியாகப் புரிந்து அங்கீகரிக்கத் தவறியுள்ளது. இதனை ஜோசப் படைத்தளம் மீதான தாக்குதலில் புலிகள் வெளிப்படுத்தியுள்ளனர். போர்த்தளபாட உதவிகளைச் செய்வதாக மட்டும் கூறிவந்த இந்தியா இன்று என்ன சொல்லப்போகின்றது. தனது வான்படை தொழில்நுட்பவியலாளர்களை ஜோசப் படைத்தளத்தில் ராடர்களை கண்காணிப்பதற்கு சிறீலங்கா வான்படை தொழில்நுட்பவியலாளர்களிற்கு பயிற்சி வழங்கவும் தங்க வைத்தது ஏன்? ஈழத்தமிழினம் தங்களைப் பாதுகாக்க தாங்களே போராடுகிறார்களே? இதனால் இந்தியாவிற்கு என்ன வலி? ஒரு இனத்தின் உயிர் உங்களிற்கு பிராந்திய நலனிற்கான் கேடயமா? சிலவேளை குறிப்பிட்ட இந்திய தொழில்நுட்பவியலாளர்கள் சாவடைந்திருந்தால் மூடி மறைத்திருப்பீர்கள். இலக்கு சிறீலங்கா படைத்துறை முக்கிய இடங்கள். இந்திய தொழில்நுட்பவியலாளர்கள் கிடையாது. காயமடைந்த குறிப்பட்ட இருவருமே அதற்கு சாட்சி.

2004 ம் ஆண்டு சிறீலங்காவின் முப்படைத் தலைவராக சிறீலங்காவின் கடற்படைத் தளபதி தயாசந்தகிரி பதவி ஏற்கும் வைபவத்தில் கலந்து கொள்வதற்காக கொழும்பிற்கு வந்த இந்தியாவின் கடற்படைத் தளபதி அருண்பிரகாஷ் (அன்றைய காலம் இலங்கையில் சமாதானப் பேச்சுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த காலம்) நான்கு நாட்கள் தங்கி நின்றார். இலங்கையில் முக்கிய தளங்கள் சிலவற்றையும் நேரில் பார்வையிட்டார். அவர் சிறீலங்காவிற்கு வைபவம் ஒன்றிற்கு வந்த ஆள் கிடையாது. மீண்டும் போர் தொடங்கினால் இந்தியா படைத்துறை சார்ந்த அனைத்து உதவிகளையும் செய்யும் என்றார். அருண்பிரகாஷ் அப்படிக்கூறினாலும் இந்திய அரசியல் தலைவர்கள் நேரடி ஆள் அணி உதவிகள் எதுவும் செய்யவில்லை என்ற கருத்தை முன்வைத்தனர். இந்த ஏமாற்றுக்காரர் இன்று வெட்கித் தலை கவிழ வேண்டும்.

எனவே இன்று நாம் இவை எல்லாவற்றையும் நோக்குகின்ற போது சிறீலங்காவின் வாய் வீச்சுக்காரர மகிந்த ராஜபக்ச சகோதரர்களுடனோ சரத் பொன்சேகா போன்ற தளபதிகளுடனோ அவர்கள் வழிநடத்தும் படைகளுடன் மட்டுமோ தமிழீழ விடுதலைப் புலிகள் சமராடவில்லை. வல்லாதிக்க நாடுகளின் போர்த்தளபாடங்களைப் பெற்று அவர்களின் முழுத் தொழில்நுட்ப வழங்கலுடனும் முன்னெடுக்கப்படும் போரிற்கே புலிகள் முகம் கொடுக்கின்றனர். எனவே தந்திரோபயமாக போரை முன்னெடுப்பதும் எதிர் கொள்வதும் தான் புத்திசாலித்தனர். அதனையே புலிகள் செய்வதனால் வெற்றிகளை நிரந்தரமாக தமிழீழமே பெறப்போகிறது. இனி ஜோசப் படைத்தளம் போன்று எந்த்த் தளமோ என சிறீலங்கா விழியை விரியவைத்துள்ளது. குறிப்பிட்ட இந்த தாக்குதலும் தமிழீழம் சிறீலங்காவின் முகத்தில் அறைய பிடரியில் இருந்தவர்களுக்கும் வலித்திருக்கும்.

நன்றி : முரசம்

கொழும்பில் மூவர் கடத்தப்பட்டனர்

whait_van.jpgதிருகோணமலை மற்றும் யாழ்ப்பாணத்தை,மலையகத்தை சேர்ந்த மூவர் கொழும்பில் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது.

திருகோணமலை லிங்க நகரை சேர்ந்த தியாகராஜா ஜெகன்(29வயது) என்பவர் கடந்தவாரம் கொழும்பு செட்டியா தெருவில் காணாமல்போயுள்ளார்.

ஜெகன் திருகோணமலையில் 5 பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சமயம் கொழும்பில் இருந்து சென்ற விசேட படை பிரிவால் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டு விடுதலைசெய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் திருகோணமலையில் இருந்து கொழும்பு வந்து, கடந்த இருவருடங்களாக கொழும்பு செட்டியா தெரு 83ஆம் இலக்க நகைகடையில் தனது உறவினருடன் வசித்துவந்துள்ளார்.

இந்த நிலையில் இவர் கடந்த இருவருடங்களில் மூன்று தடவைகள் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் யாழ் காரை நகரை சேர்ந்த சுப்ரமணியன் சிறிதரன்(39வயது)என்பவர் கடந்த 19ஆம் திகதி வெள்ளைவான் ஆயுததாரிகளினால் தெஹிவளையில் வைத்து கடத்திச்செல்லப்பட்டுள்ளார்.

பிரபல ஹோட்டல் ஒன்றில் கடமையாற்றிவரும் இவர் ஆறு பேர் கொண்ட பொலிஸ் மற்றும் சிவிலுடையில் வந்த வெள்ளைவான் ஆயுததாரிகளினால் கடத்திச்செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடத்தப்பட்டவரின் மனைவி,பிள்ளைகள் கனடாவில் வசித்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் நுவரேலியா மாவட்டம் மஸ்கெலியா பிரதேசத்தின் மீக்கா தோட்டத்தை சேர்ந்த,கொழும்பு கிராண்பாஸில் வசித்துவந்த சின்னத்தம்பி திருச்செல்வம்(38வயது)என்பவர் கடந்த 21ஆம் திகதி முதல் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும், கிராண்பாஸ் ,நவகம்புர பகுதியில் நீண்டகாமாக வசித்துவரும் இவர் கடந்த 21ஆம் திகதி கிராண்பாஸ் மெஸன்சர் வீதியில் உள்ள காடவெயார் ஒன்றில் தொழில்புரிந்துவந்துள்ளார்.

கடந்த 21ம் திகதி வேலை முடிந்து 4.00மணியளவில் வீதி திரும்பியவர் இதுவரை வீடு திரும்பவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கிராண்பாஸ் பொலிஸ் நிலையம் மற்றும் மக்கள் கண்காணிப்பு குழு என்பனவற்றில் முறையிடப்பட்டுள்ளது.

மண்டூரில் விசேட அதிரடிப்படையினரால் வர்த்தகர் சுட்டுக்கொலை

gun_ak_-47.jpgமட்டக்களப்பு மண்டூர் பகுதியில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு வர்த்தகர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

மண்டூர் 1, வீரமுனை அம்பலாந்துறை வீதியிலேயே வியாழக்கிழமை இரவு 8.15 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தனது வர்த்தக நிலையத்திற்கு பின்புறமாகவுள்ள காணியில் மாட்டைக் கட்டிவிட்டு திரும்பிய போதே இவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இவர் மீது சரமாரியாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மார்பிலும் தொடைப்பகுதியிலும் குண்டுகள் பாய்ந்த நிலையில் அந்த இடத்திலேயே வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

விசேட அதிரடிபடையினர் இவரிடம் கடனுக்க பொருட்கள் கேட்டதாகவும் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துவந்த நிலையிலேயெ இவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்ப்ட்டுள்ளது.

நான்கு பிள்ளைகளின் தந்தையான விஸ்வலிங்கம் தம்பிராஜா (48 வயது) என்பவரே சுட்டுக் கொல்லப்பட்டவராவார்.

இவரது சடலம் நேற்றுக் காலை களுவாஞ்சிக்குடி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கருணாநிதி அளித்த ஐ‌ந்து உறுதிமொழிகள்


தமிழீழம் மலர ஆதரவு,
தமிழர்களுக்கநிலையாஉரிமை,
நிரந்த
பாதுகாப்பு,
ஈழத்தமிழர்களுக்க
அடைக்கலமதருமகடமையிலிருந்ததவமாட்டோம்,
தமிழினத்த
பாதுகாக்எந்தியாகத்துக்குமதயாரஎன்பதகருணாநிதி அளித்த ஐ‌ந்து உறுதிமொழிகள்.
ஆனால
இப்போதஈழத்தமிழரபிரச்சனையில
கருணாநித
ி மவுனமசாதிப்பது ஏன் ?

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/0809/22/1080922050_1.htm

களுவாஞ்சிக்குடியில் 55 வயதான விவசாயி சுட்டுக்கொலை.


களுவாஞ்சிக்குடி செட்டிபாளையம் பிரதேசத்தில் விவசாயி ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
செட்டிபாளையம் அம்மன் கோயில் வீதியில் இன்று முற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வீரக்குட்டி கோபால்பிள்ளை என்ற 55 வயது விவசாயி மீது இனந்தெரியாத நபர்கள் இன்று முற்பகல் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

சிறீலங்கா அரசபயங்கரவாத விமானத் தாக்குதலில் இளைஞர் பலி குழந்தைகள் உட்பட எண்மர் காயம்


சிறீலங்கா வான்படையினர் இன்று கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் விமானத்தாக்குதல் நடத்தினர். இதில் அப்பாவி இளைஞர் ரங்கநாதன் சதீஸ் (26 வயது) கொல்லப்பட்டுள்ளார். இதில் கொல்லப்பட்டவரின் மனைவியான அருட்செல்வி(27) இவர்களின் பிள்ளைகளான தனுசிகன் (2 வயது) தனுசிகா (9 மாதம்), மற்றும் ரேக்கா ஞானம் ( 25) இவரின் பிள்ளைகளான காந்தராசா ( 2 வயது ), துவாரகன் (8 மாதம்) மேலும் மங்களேஸ்வரி மாணிக்கம்பிள்ளை (62) டெஸ்சி யோகநாதன்(42) என்பவரும் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தத் தாக்குதல் இன்று சனிக்கிழமை பி.ப. 12.30 மணியளவில் இடம்பெற்றதாக தமிழீழக் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

Tamilwin.com


Tamilwin.com

முகமாலை நோக்கி ஆளணி, படைக்கல நகர்த்தல்

யாழ் முகமாலை முன்னரங்க நிலைகள் நோக்கி சிறீலங்கா படையினர் ஆளணி, படைக்கல நகர்த்தலை மேற்கொண்டு வருகின்றனர்.


வீதிகளைப் போக்குவரத்துக்குத் தடை செய்யும் படையினர், தொடர்ச்சியான படைக்கல நகர்த்தலில் ஈடுபட்டுள்ளதாக ஐரோப்பிய தொலைக்காட்சியின் யாழ் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.


நேற்று முதல் பாரிய எடுப்பில் இவ்வாறான நகர்த்தல்கள் இடம்பெறுவதால், மக்கள் மத்தில் அச்சம் காணப்படுகின்றது.

இலங்கை சிங்களவருக்கு மட்டும் உரித்தானது என்ற இராணுவத் தளபதியின் கூற்றுக்கு முஸ்லிம் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அண்மையில் கனேடிய பத்திரிகையென்றுக்கு அளித்த செவ்வி தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது கடும் ஆட்சேபத்தை வெளியிட்டுள்ளது.

சிறுபான்மையினரை உதாசீனம் செய்யும் வகையில் இராணுவத் தளபதி வெளியிட்ட கருத்துக்கள் மிகவும் வேதனையளிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஊடக அறிக்கையின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை சிங்களவருக்கு மட்டும் உரித்தானது என்ற சரத் பொன்சேகாவின் கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இனரீதியான காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தும் இவ்வாறான கருத்துக்களை நாட்டின் இராணுவத் தளபதி என்ற ரீதியில் வெளியிடக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் தேசிப் பிரச்சினை தீர்மானமிக்கதொரு கட்டத்தை எட்டியிருக்கும் தருணத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துக்கள் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை பாதுகாப்பு சேவையில் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வரும் உயிர்த் தியாகங்களை மேற்கொண்ட தமிழ் முஸ்லிம்கள் இந்தக் கூற்றின் மூலம் கேவலப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சாதாரண தமிழ் மற்றும் முஸ்லிம்கள் இந்த நாட்டின் அபிவிருத்திக்கு பாரியளவு பங்களிப்பு நல்கியிருப்பதனை எவரும் மறந்துவிடக் கூடாதென ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

சிங்களவர்களுக்கு நிகரான உரிமைகளை சிறுபான்மையினர் அனுபவிக்க தகுதியற்றவர்கள் என்ற கருத்து பொறுப்புணர்ச்சியற்ற வகையில் வெளியிடப்பட்டதொன்றாகும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இராணுவத் தளபதி ஒருவர் அரசியல் ரீதியான கூற்றுக்களை வெளியிடுவதன் மூலம் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் பாதிக்கக் கூடும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஊடக அறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளார்.

கனேடியத் தமிழ் இளையோரின் 30 மணிநேர உண்ணாநிலைக் கவனயீர்ப்பு நிகழ்வு வெள்ளி பி.ப 4 மணிக்கு ஆரம்பம்


கனேடியத் தமிழ் இளையோரின் 30 மணிநேர உண்ணாநிலைக் கவனயீர்ப்பு நிகழ்வு இன்று (வெள்ளி) மாலை 4மணி 01 நிமிடமளவில் கனடா றிச்மன்ட்ஹில் ஆலய கலாச்சார மண்டபத்தில் ஆரம்பமாகித் தொடர்ந்த வண்ணமுள்ளது.


தாயகத்தில் அல்லலுறும் மக்களின் துன்பங்கள் வெளித் தெரியும் வண்ணம் அமைதிவழிப் போராட்டத்திற்கே மகுடம் சேர்த்த இன்றைய பொழுதிலே கனேடித் தமிழ் இளையோர் சமூகம் ஏற்பாடு செய்த இந் நிகழ்வில்

35 இற்கு மேற்பட்ட இளையோர்களின் முழுமையான 30 மணித்தியால உண்ணா நிலை நிகழ்வுடன் இந் நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.

கவனயீர்ப்பிற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்விலே சேகரிக்கப்படும் நிதியானது தாயகப்பகுதியிலே தற்போதைய இடப்பெயர்வால் அல்லலுறும் மக்களிற்கு, அவர்களது தேவைகளை நிறைவு செய்யும் வகையில் அவர்களிற்கு வழங்கப்படுகின்றது.


நிகழ்வினை மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் துணைவியார் ஈகைச்சுடரேற்றி உண்ணாநிலைக் கவனயீர்ப்புப் போராட்டத்தினை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து உண்ணா நோன்பில் கலந்து கொண்ட இளையவர்களால் அவர்கள் ஏன் இக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்ற தம் விளக்கத்தை தெரியப்படுத்தினர்.

அத்துடன் இளையோரின் இச் செயற்பாட்டிற்குத் தம் ஆதரவினைத் தெரிவித்துப் பல மக்கள் வருகை தந்து ஊக்கமளித்துக்கொண்டுள்ளார்கள். இன்று ஆரம்பமாகியுள்ள இவ்வுண்ணா நோன்பு நிகழ்வு நாளை சனி இரவு 10 மணிக்கு நிறைவடையும் என்பதனை கனேடியத் தமிழ் இளையோர் தெரியப்படுத்துகின்றனர். அவர்களை

647 834 1075 என்னும் தொலைபேசியினூடாகத் தொடர்பு கொள்ளமுடியும்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ ஒளி ஊடகமான தமிழீழத் தேசிய தொலைக்காட்சி (NTT), இணையம் வழியாக தனது ஒளிபரப்பினைத் தொடங்கியது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ ஒளி ஊடகமான தமிழீழத் தேசிய தொலைக்காட்சி (NTT) நேற்று வெள்ளிக்கிழமை முதல் இணையம் வழியாக தனது ஒளிபரப்பினைத் தொடங்கியது.

தமிழீழ விடுதலைப் புலிகளினால் 2005 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 1 ஆம் நாள் தமிழீழ தேசிய தொலைக்காட்சி தொடங்கப்பட்டது.

சிறிலங்கா, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, கனடா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் வரை தாயக மக்களின் அவலங்களை மற்றும் வாழ்வியலை காட்சி வெளிப்பாடாக கொணர்ந்து சேர்ப்பதில் தமிழீழத் தேசிய தொலைக்காட்சி பெரும் பங்காற்றி வருகின்றது.


பலத்த சிரமங்களில் மத்தியில் தனது சிறப்பான சேவையை வழங்கி வரும் தமிழீழத் தேசிய தொலைக்காடசின் ஒளிபரப்பை முடக்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் பல வழிகளிலும் முயற்சித்து வருகின்றது.

இருந்த போதிலும் இன்றும் பல நாடுகளில் தமிழீழத் தேசிய தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை தங்கு தடையின்றி மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

இந்த வகையில் தற்போது தமிழீழத் தேசிய தொலைக்காட்சி www.tamilntt.com எனும் முகவரியின் ஊடாக இணையத்தில் காலடி வைத்துள்ளது.

இதன் மூலம் இணைய வழியாக வரும் ஒளிபரப்பினை தாம் விரும்பிய நேரத்தில் பார்க்கக்கூடியவாறு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தமிழீழ தேசிய தொலைக்காட்சியின் இணைய தொழில்நுட்பப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

ஈழத்தமிழ் மக்களின் அவலங்கள் தொடர்பாக இந்திய தலைமை அமைச்சர் மன்மோகன் சிங்க எந்தவித கவனமும் கொள்ளவில்லை - டி.ராஜா

ஈழத்தமிழ் மக்களின் அவலங்கள் தொடர்பாக இந்திய தலைமை அமைச்சர் மன்மோகன் சிங்க எந்தவித கவனமும் கொள்ளவில்லை என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலர் D.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.


மன்மோகன் சிங் இந்திய தலமை அமைச்சராக பதவியேற்றமை இந்தியாவின் துரதிஸ்டம் எனவும், ஈழத் தமிழ் மக்கள் தொடர்பாக அவர் எந்தவித கரிசனையும் கொள்ள மாட்டார் என்றும், அவரிடம் அவ்வாறு எதிர்பார்க்க முடியாது என்றும் ராஜா கூறினார்.

அரியாலை படை முகாம் மீது விடுதலைப்புலிகள் எறிகணை தாக்குதல்

யாழ் மாவட்டம் அரியாலை படை முகாம் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில் சிறீலங்கா படைகள் தரப்பில் பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளது.


எனினும் தமது தரப்பில் ஒருவர் மட்டுமே கொல்லப்பட்டதாகவும், மேலும் சில படையினர் காயமடைந்திருப்பதாகவும் சிறீலங்கா படைத்தரப்பு அறிவித்துள்ளது.

சிறீலங்கா படையினரது எறிகணை வீச்சில் இளம் தாய் படுகாயம்


கிளிநொச்சி, உருத்திரபுரத்தில் சிறீலங்கா படையினரது எறிகணை வீச்சில் இளம் தாய் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.


ஒரு பிள்ளையின் தயாரான 26 அகவையுடைய வஜிதரஞ்சினி ரவிச்சந்திரன் என்பவரே படுகாயமடைந்து கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


பூநகரி, ஞானிமடத்தைச் சேர்ந்த இவர் இடம்பெயர்ந்து கிளிநொச்சி, உருத்திரபுரத்தில் தங்கியிருந்த நிலையில் எறிகணையில் படுகாயமடைந்தார்

ஊர்காவல் படையினரால் படை உறுப்பினர்கள் இருவர் சுட்டுக்கொலை

அம்பாறையில் சிறீலங்கா ஊர்காவல்படையினரால் தரைப்படை, வான்படை உறுப்பினர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


நேற்று வெள்ளிக்கிழமை மாலை 3:00 மணியளவில் நிலம்பா, மஹாஓயா பகுதியில் குடிபோதையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தைத் தொடர்ந்து, இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.


காயமடைந்த இருவரும் மஹாஓயா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்துள்ளனர்.