ஊர்காவல் படையினரால் படை உறுப்பினர்கள் இருவர் சுட்டுக்கொலை

அம்பாறையில் சிறீலங்கா ஊர்காவல்படையினரால் தரைப்படை, வான்படை உறுப்பினர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


நேற்று வெள்ளிக்கிழமை மாலை 3:00 மணியளவில் நிலம்பா, மஹாஓயா பகுதியில் குடிபோதையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தைத் தொடர்ந்து, இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.


காயமடைந்த இருவரும் மஹாஓயா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்துள்ளனர்.

No comments: