சிறீலங்கா அரசபயங்கரவாத விமானத் தாக்குதலில் இளைஞர் பலி குழந்தைகள் உட்பட எண்மர் காயம்


சிறீலங்கா வான்படையினர் இன்று கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் விமானத்தாக்குதல் நடத்தினர். இதில் அப்பாவி இளைஞர் ரங்கநாதன் சதீஸ் (26 வயது) கொல்லப்பட்டுள்ளார். இதில் கொல்லப்பட்டவரின் மனைவியான அருட்செல்வி(27) இவர்களின் பிள்ளைகளான தனுசிகன் (2 வயது) தனுசிகா (9 மாதம்), மற்றும் ரேக்கா ஞானம் ( 25) இவரின் பிள்ளைகளான காந்தராசா ( 2 வயது ), துவாரகன் (8 மாதம்) மேலும் மங்களேஸ்வரி மாணிக்கம்பிள்ளை (62) டெஸ்சி யோகநாதன்(42) என்பவரும் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தத் தாக்குதல் இன்று சனிக்கிழமை பி.ப. 12.30 மணியளவில் இடம்பெற்றதாக தமிழீழக் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

Tamilwin.com


Tamilwin.com

No comments: