களுவாஞ்சிக்குடியில் 55 வயதான விவசாயி சுட்டுக்கொலை.


களுவாஞ்சிக்குடி செட்டிபாளையம் பிரதேசத்தில் விவசாயி ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
செட்டிபாளையம் அம்மன் கோயில் வீதியில் இன்று முற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வீரக்குட்டி கோபால்பிள்ளை என்ற 55 வயது விவசாயி மீது இனந்தெரியாத நபர்கள் இன்று முற்பகல் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

No comments: