பாதுகாப்பு வலயம் மீது படையினரின் தாக்குதலில் இன்று (வெள்ளி) 102 பொதுமக்கள் படுகொலை; 156 க்கு மேற்பட்டோர் காயம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு மக்கள் பாதுகாப்பு வலயத்தின் மீது இன்றும் சிறிலங்கா படையினர் நடத்திய தாக்குதல்களில் 102 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 156-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

பாதுகாப்பு வலய' பகுதிகளான வலைஞர்மடம், அம்பலவன்பொக்கணை பகுதிகளில் சிறிலங்கா படையினர் இன்று வெள்ளிக்கிழமை காலை தொடக்கம் இரவு வரை ஆட்லறி எறிகணை, பல்குழல் பீரங்கி, துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை அகோரமாக நடத்தினர்.

இத்தாக்குதல்களில் 102 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 156-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

மேற்படி பகுதிகளில் உள்ள மூன்று மருத்துவ சிகிச்சை நிலையங்களில் காயமடைந்த மக்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகின்றது. அத்துடன், திலீபன் மருத்துவ சேவைப்பிரிவினரும் காயமடைந்த மக்களுக்கு சிகிச்சை வழங்கினர்.

இதேவேளையில் முள்ளிவாய்க்கால் பகுதி இடம்பெயர்ந்த மக்கள் வாழ்விடங்கள் மீதும் சிறிலங்கா படையினர் இன்று செறிவான எறிகணைத் தாக்குதல்களை நடத்தினர்.

அதேவேளையில் மாத்தளன் பகுதி மீதும் சிறிலங்கா படையினர் செறிவான துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களையும் நடத்தினர். இத்தாக்குதல்களில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதேவேளை பாதுகாப்பு வலயப் பகுதிகளில் காயமடைந்த பொதுமக்களில் ஒரு தொகுதி நோயாளர்களையும், அவர்களின் பராமரிப்பாளர்களையும் ஏற்றிக்கொண்டு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் கப்பலான கிறீன் ஓசன் கப்பல் புல்மோட்டைக்கு புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
[ புதினம் ]

இலங்கையில் இடம்பெற்று வரும் இன ஒடுக்குமுறைக்கு குறித்து ஐ.நா. பாதுகாப்புப் பேரவை பொறுப்புடன் செயற்பட வேண்டும்

இலங்கையில் இடம்பெற்று வரும் இன ஒடுக்குமுறைக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவை தனது பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டுமென பொறுப்புக்களை பாதுகாக்கும் சர்வதேச மையம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் அறிவிக்கப்பட்டிருந்த தற்காலிக போர் நிறுத்தம் நிறைவடைந்ததனைத் தொடர்ந்து இறுதி கட்ட இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறித்த அமைப்பு அறிக்கையொன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளது.

யுத்த சூனிய பிரதேசம், தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைகள் என்ற பாகுபாடு இன்றி அரசாங்க இராணுவம் விமான மற்றும் ஆட்லறித் தாக்குதல்களை மேற்கொண்டு வருவாதாக சுட்டிக்காட்டியுள்ளது.

2005ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கமைய அப்பாவி பொதுமக்களை பாதுகாக்க வேண்டியது பாதுகாப்புப் பேரவையின் தலையாய பொறுப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தைப் போன்றே தமிழீழ விடுதலைப் புலிகளும் பொதுமக்களை யுத்த சூனிய பிரதேசத்திலிருந்து வெளியேற விடாது தடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் பிரகடனத்தின் அடிப்படையில் இலங்கை விவகாரத்தில் தலையீடு செய்யும் உரிமை உலக நாடுகளுக்கு இருப்பதாக அந்த அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் கெரத் ஏவன்ஸ், முன்னாள் ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான பிரதி செயலாளர் ஜேன் என்கெலன்ட், ஐக்கிய நாடுகளின் முன்னாள் செயலாளர் நாயகம் ஜொவான் மென்டாஸ் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்த அறிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.

இலங்கையில் போர்நிறுத்தம் கோரி 21ம் தேதி திரையுலகம் உண்ணாவிரதம்: பாரதிராஜா

இலங்கையில் போரை நிறுத்தி விட்டுத்தான் தமிழகத்திற்கு சோனியா காந்தி வர வேண்டும். அதை விட்டு விட்டு இழவு வீட்டில் வந்து அவர் வாக்கு கேட்கக் கூடாது என்று இயக்குநர் பாரதிராஜா கடுமையாக கூறியுள்ளார்.
இலங்கையில் போர் நிறுத்தம் கோரி தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு பெண்கள், சென்னையில், மதிமுக தலைமைக் கழக அலுவலகமான தாயகத்தில் கடந்த ஐந்து நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

இவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த நிலையில் இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், நடிகர் சத்யராஜ், கவிஞர் அறிவுமதி உள்ளிட்ட திரையுலகினர் அங்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் பாரதிராஜா உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பாரதிராஜாவும், சத்யராஜும் உணர்ச்சிகரமாக பேசினார்.

அப்போது பாரதிராஜா பேசுகையில்,

இங்கே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள், 20ஆம் தேதி சென்னைக்கு வரும் சோனியா காந்தியை சந்தித்து இலங்கை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட வலியுறுத்துவோம் என்று தெரிவித்துள்ளனர்.

தேர்தல் நேரத்தில் பிரச்சாரத்துக்காக தமிழகத்துக்கு வரும் சோனியா காந்தி, இலங்கையில் போரை நிறுத்தி விட்டேன் என்று சொல்லிவிட்டுதான் சென்னையில் காலடி வைக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு இழவு வீட்டிற்கு வந்து வாக்குக் கேட்கக் கூடாது.

போர் நிறுத்தம் அறிவிக்காவிட்டால், 21ஆம் தேதி தமிழ் திரையுலகம் சார்பில் சென்னையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும். உண்ணாவிரதம் நடக்கும் இடம் இன்னும் முடிவு செய்யவில்லை. இந்த உண்ணாவிரதத்தில் சின்னத்திரை கலைஞர்கள், திரையுலகில் இருக்கும் அனைத்து சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பார்கள்.

உண்ணாவிரதத்தின் நோக்கம் மற்றும் ஈழத்தமிழர்களின் பிரச்சனையில் தமிழ் திரையுலகின் அடுத்தக் கட்ட நடவடிக்கை உள்ளிட்ட முடிவுகளை நாங்கள் 21ஆம் தேதி அறிவிப்போம் என்றார்.

சத்யராஜ் கூறுகையில்,

கடந்த 5 நாட்களாக ஈழத்தமிழர்களுக்காக 100 பெண்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் 3 பேரின் உடல்நிலை சரியில்லாமல் உள்ளது. அவர்களை பேட்டி காணுங்கள். அவர்கள் சொல்லுவதை ஊடகங்களில் போடுங்கள்.

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அரசியல் கட்சியினர், யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் ஒரு சிறிய வேண்டுகோள். இலங்கை தமிழர் பிரச்சனையில் எல்லோரும் ஓரணியில் நின்று போராடுவோம் என்றார் உருக்கமாக.

தமிழர்களை கொன்று குவிப்பதனை உடனடியாக தடுத்து நிறுத்தவும்: மலேசிய அமெரிக்கத் தூதரகத்திடம் மனு

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து அமெரிக்கா உடனடியாக தலையிட்டு போரை நிறுத்த வேண்டும் என்று கோரி மலேசிய தமிழ் மக்கள் சார்பில் அமெரிக்கத் தூதரகம் ஊடாக அமெரிக்க அரச தலைவர் பாராக் ஒபாமாவுக்கான மனு கையளிக்கப்பட்டது.
உலகத் தமிழர் நிவாரண நிதியத்தின் அறங்காவலர் வழக்கறிஞர் பசுபதி சிதம்பரம் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மா.மனோகரன், சார்ள்ஸ் சந்தியாகு, சிவராசா இராசையா, மாணிக்கவாசகம், சைல்டு நிறுவனத்தின் தலைவர் மருத்துவர் ஐங்கரன், 'மலேசியா இன்று' இணைய இதழின் ஆசிரியர் காத்தையா உட்பட எழுவர் அடங்கிய குழுவினர் இங்குள்ள அமெரிக்க தூதரகத்திடம் மனுவினை கையளித்தனர்.

இலங்கையில் 'பயங்கரவாதிகளுக்கு எதிரான போர்' என்ற பெயரில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இராணுவத்தினரின் கண்முடித்தனமான குண்டுவீச்சினால் மக்கள் உயிர்ச் சேதம் அதிகமாகி வருகின்றது.

இந்நிலையில் அமெரிக்கா மனிதாபிமான அடிப்படையில் இலங்கை விவகாரத்தில் தலையிட்டு போரை முடிவுக்குக்கொண்டு வருவதுடன், தமிழ் மக்களின் உரிமைப்பூர்வமான கோரிக்கைகள் நிறைவேறவும் செயற்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க தூதரகத்திடம் கையளிக்கப்பட்ட மனுவின் விபரம் பின்வருமாறு:

மலேசியத் தமிழர்களாகிய நாங்கள், சிறிலங்கா அரசாங்கத்தால் ஈழத் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் இனப்படுகொலை குறித்து உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்.

அரச தலைவர் ராஜபக்ச தலைமையிலான சிங்கள இனவாத அரசு தனது சொந்த மக்களை இனப்படுகொலை செய்து வருவதை அறிந்து நாங்கள் அதிர்ச்சியும் வேதனையும் அடைகின்றோம்.

ராஜபக்சவும் அவரது இராணுவத்தினரும் இதுவரையில் குழந்தைகள் உட்பட 77,000 தமிழ் மக்களைக் கொன்று குவித்துள்ளனர்.

கடந்த 3 மாதங்களில் மட்டும் சிறிலங்கா ஆயுதப் படையினரால் 4,100-க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டும் 8,800-க்கும் அதிகமான பொதுமக்கள் படுகாயமடைந்தும் உள்ளனர்.

அரச தலைவர் அவர்களே!

குறைந்தது 190,000-க்கும் அதிகமான பொதுமக்கள் 20 மைல் சதுர பரப்பளவு மட்டுமே கொண்ட பகுதியில் இருக்கின்றனர்.

இலங்கையில் இருந்து தமிழர்களை முற்றாக துடைத்தொழிப்போம் என சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் உறுதி எடுத்துள்ளனர். இவர்கள் இருவரும் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் என்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்.

கோத்தபாய ராஜபக்ச, இப்போது தொடங்கி முல்லைத்தீவு பகுதியில் சிக்கும் தமிழ்ப்பெண்கள் இராணுவத்தினருக்கு விருந்தாகட்டும். ஆண்களாக இருந்தால் அவர்களின் இரத்தத்தால் இந்திய சமுத்திரம் சிவக்கட்டும்," என முழக்கமிட்டிருக்கிறார்.

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அடோல்ப் ஹிட்லரைப் போன்று அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரசியா, சீனா போன்ற நாடுகளுக்கு ஐக்கிய நாட்டு சபையில் உள்ள வீட்டோ அதிகாரத்தின் ஆசியுடன் செயற்பட்டு வருகின்றார் என்று கூறலாம். ஹிட்லருக்கு எதிரான நின்ற இந்த நாடுகள் அனைத்துமே நின்று ராஜபக்சவுக்கு ஆதரவாக நிற்கின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வடகொரியா தனது ஏவுகணையைப் பாய்ச்ச முற்பட்டபோது மீண்டும் வீட்டோ அதிகாரம் பயன்பட்டுள்ளது.

ஆனால், கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக தமது சொந்த மண்ணில் அமைதியாகவும் சுயமரியாதையுடனும் வாழ்கின்ற உரிமைக்காக போராடும் தமிழ் மக்களுக்கு இந்த நாடுகளிடம் இருந்து எந்தவகையிலும் ஆதரவான பதில் கிடைக்கவில்லை.

மலேசிய தமிழர்களாகிய நாங்கள், இன்றுவரையில் அமெரிக்கா, இலங்கை தமிழர்களின் கோரிக்கைகளைச் செவிமடுத்து அவர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் இனப்படுகொலையைக் களைவதில் தோல்வியடைந்து விட்டது என்றே கருதுகின்றோம்.

உங்கள் நாட்டில் குடியுரிமை பெற்றுள்ள கோத்தபாய ராஜபக்ச ஒருபோதும் தமிழர்களைக் காப்பாற்ற போவதில்லை.

அரச தலைவர் அவர்களே!,

பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் சிக்கிக் கொண்டுள்ள 190,000 தமிழர்களைக் இனப் படுகொலையில் இருந்து காக்க உடனே தலையிட்டு ஆவண செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும், அரச தலைவர் அவர்களே!

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு மன்றத்தோடு இணைந்து உடனடியாக இலங்கையில் நிரந்தர போர் நிறுத்தத்தைக்கொண்டு வரவும் தமிழ் மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளித்து அவர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படையை அங்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

மாண்புமிகு அரச தலைவர் அவர்களே!

உங்கள் மீது முழு நம்பிக்கை கொண்டு நாங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு உடனடியாக தலையிட்டு இச்சிக்கலில் தீர்வு காண்பீர்கள் என பெரிதும் எதிர்பார்க்கின்றோம் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- புதினம் -

வன்னியில் பொதுமக்கள் கொல்லப்படுவது மோதல்களை முடிவுக்கு கொண்டுவராது; சமாதானத்துக்கும் இழுக்கு: அமெரிக்கா


வன்னியில் பொதுமக்கள் கொல்லப்படுவதானது மோதல்களை முடிவுக்குக் கொண்டுவராதென்றும் அது எந்த இறுதியான சமாதானத்துக்கும் இழுக்கு ஏற்படுத்துவதாகவே இருக்குமென்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களப் பேச்சாளரான றொபேர்ட் வூட் தெரிவித்திருப்பதாக ஏ.பி. செய்திச் சேவை தெரிவித்துள்ளது
வன்னியில் பொதுமக்களின் உயிரிழப்புகளை தவிர்க்கும் முகமாக இலங்கை அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் உடனடி போர்நிறுத்தம் ஒன்றிற்குச் செல்லவேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளதாக ஏ.பி. மற்றும் ஏ.எவ்.பி. செய்திச் சேவைகள் தெரிவித்துள்ளன.

பொதுமக்கள் தப்பிச் செல்லக்கூடிய வகையில் உடனடியாக மோதல் நிறுத்தமொன்றிற்கு செல்லவேண்டும் என அமெரிக்கா இலங்கை அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவென ஏற்படுத்தப்பட்ட வலயங்கள் மீது எறிகணைத் தாக்குதல்கள் நடத்துவதை சிறிலங்கா அரசாங்கம் நிறுத்தவேண்டுமென்றும் அத்துடன் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் முகாம்களை சென்று பார்வையிட சர்வதேச கண்காணிப்பாளர்களுக்கும் ஊடகங்களுக்கும் அனுமதி வழங்கப்படவேண்டும் என்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களப் பேச்சாளரான றொபேர்ட் வூட் நேற்று வியாழக்கிழமை தெரிவித்திருப்பதாக ஏ.பி. செய்திச் சேவை தெரிவித்திருக்கின்றது.

அதுமட்டுமல்லாது உதவி அமைப்புகள் முகாம்களுக்குச் சென்று செயற்படுவதற்கான அனுமதியும் வழங்கப்படவேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நீண்டகால பிரச்சினைக்கு முடிவொன்றை வைக்கும் வாயப்பொன்று இலற்கை அரசாங்கத்திற்கு இருக்கின்றது என்றும் றொபேர்ட் வூட் தெரிவித்திருக்கின்றார்.

அத்துடன் பொதுமக்கள் கொல்லப்படுவதானது மோதல்களை முடிவுக்குக் கொண்டுவராதென்றும் அது எந்த இறுதியான சமாதானத்துக்கும் இழுக்கு ஏற்படுத்துவதாகவே இருக்குமென்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களப் பேச்சாளரான றொபேர்ட் வூட் மேலும் சுட்டிக்காட்டியிருப்பதாகவும் ஏ.பி. செய்திச் சேவை தெரிவித்திருக்கின்றது.

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதானது ரத்து: டைரக்டர் சீமான் விடுதலை; உயர் நீதிமன்றம் உத்தரவு


விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசியதாக அங்கு வழக்கு பதிவு செய்யப்பட்ட டைரக்டர் சீமான் மீது தொடரப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் அவர் விடுதலை ஆகிறார்.
சினிமா டைரக்டர் சீமான் பெப்ரவரி மாதம் புதுச்சேரியில் நடந்த கூட்டத்தில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பேசினார். அவர் விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசியதாக அங்கு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

17-2-09 அன்று நெல்லையில் நடந்த கூட்டத்திலும், இலங்கை தமிழர்கள் பிரச்சினை பற்றி பேசினார். இதில் அவர் இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வழக்குபதிவு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து டைரக்டர் சீமான் கைது செய்யப்பட்டார்.

நெல்லை கலெக்டர் பரிந்துரையின்பேரில், சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி வழக்கு தொடரப்பட்டது. இதனால் அவர் 1 வருடம் ஜெயிலில் இருக்கும் நிலை ஏற்பட்டது.

இதை எதிர்த்து டைரக்டர் சீமானின் தம்பி பீட்டர் ஜேம்ஸ் சென்னை உயர்நீதிமன்றில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதில் சீமான் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட முகாந்திரம் இல்லை. எனவே அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறி இருந்தார்.

இதற்கிடையே தேசிய பாதுகாப்பு வாரியத்திடமும் முறையீடு செய்யப்பட்டது. அங்கும் விசாரணை நடத்தப்பட்டது. தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி சீமான் கைது செய்யப்பட்டதற்காக, கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அரசு விளக்கம் அளித்தது.

இந்த நிலையில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்து சீமானை விடுதலை செய்யக்கோரி அவரது தம்பி தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் தர்மராவ், செல்வம் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சீமான் கைது செய்யப்பட்டதை ரத்து செய்து, அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டனர். சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது தவறு என்றும் தீர்ப்பில் கூறி உள்ளனர்.

என்றாலும், புதுச்சேரி பொலிஸார் பதிவு செய்த வழக்கு நிலுவையில் உள்ளதால் சீமான் விடுதலை ஆவதில் சிக்கல் உள்ளது.

புதுச்சேரியில் சீமான் இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர் ஜாமீன் பெற முடியும். எனவே ஒன்றிரண்டு நாட்களில் அவர் விடுதலை ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பக்கத்து வீடு பற்றி எரியும் போது பார்த்துக்கொண்டிருக்கலாமா?:ஈழத்தமிழருக்காக நடிகர் சத்யராஜ் ஆவேசம்


கவிஞர் பா.விஜய் நாயகனாக நடிக்கும் ‘ஞாபகங்கள்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை ஏவி.எம். ஸ்டூடியோவில் இன்று மாலை நடந்தது. நடிகர் சத்யராஜ், இவ்விழாவிற்கு வந்ததுமே அனைவரின் கவனமும் அவர் மீது தான் இருந்தது. அதற்கு காரணம், அவர் அணிந்திருந்த கருப்பு டீ-சர்ட்டில் ‘ஈழத்திற்காக குரல் கொடுப்போம்’ என்று ஆங்கில வாசகம் அச்சிடப்பட்டிருந்ததுதான்.

சத்யராஜ் பேசும் போதும் அனைவரின் கவனமும் அவர் மீதுதான் இருந்தது.

‘’நான் இந்த மேடையை ஒரு நல்ல விசயத்திற்காக பயன்படுத்திக்கொள்கிறேன். ஈழ விசயத்திற்காகத்தான் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன்.

தேர்தலுக்காக யார் வேண்டுமானாலும் யாருடனாவது கூட்டணி வைத்துக்கொள்ளட்டும். ஆனால், ஈழத்தமிழர்கள் விசயத்தில் ஒன்றுபடட்டும். ஒருமித்த குரல் எழுப்ப வேண்டுகிறேன்.

வெளிநாடுகளில் எத்தனை தமிழர்கள் இருக்கிறார்களோ அத்துனை தமிழர்களும் ஈழ ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்கிறார்கள்.

ஆனால் தாய் தமிழகத்தில் எத்துனை தமிழர்கள் கலந்துகொள்கிறார்கள். இதுதான் வேதனை. ஈழத்தமிழர்களுக்காக அனைத்து தமிழர்களும் குரல் கொடுக்க முன்வரவில்லை.

பக்கத்து வீடு பற்றி எரியும் போது பார்த்துக்கொண்டிருக்கலாமா? நம் சொந்தங்கள் செத்து மடியும் போது குரல் கொடுக்கக் கூட யோசித்துக்கொண்டிருக்கலாமா?’’ என்று ஆவேசப்பட்டார்.

என் ரத்தம் எல்லாம் கண்களுக்கு ஏறுகிறது:ஈழத்தமிழருக்காக கவிஞர் வைரமுத்து ஆவேசம்



கவிஞர் பா.விஜய் நாயகனாக நடிக்கும் ‘ஞாபகங்கள்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை ஏவி.எம். ஸ்டூடியோவில் இன்று மாலை நடந்தது. இவ்விழாவில் பாடல் கேசட்டை வாலி வெளியிட வைரமுத்து பெற்றுக்கொண்டார்.

வைரமுத்து பேசும்போது, ‘’இந்த மேடையில் ஈழப்பிரச்சனையை பேசக்கூடாது என்று மனசு சொல்கிறது. ஆனால் என் ரத்தம் எல்லாம் கண்களுக்கு ஏறுகிறது.



உலக நாடுகள் எல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஆனால் ராஜபக்சே கொஞ்சமும் இசையவில்லை. ஐநா சொல்லியும் கூட, அமெரிக்கா சொல்லியும் கூட இசையவில்லை.

உலக நாடுகளுக்கெல்லாம் தலைவன் என்று அமெரிக்கா மார் தட்டுகிறது. அது சொல்லியே ராஜபக்சே கேட்கவில்லை. இனி தலைவன் என்று தம்பட்டம் அடிக்கக்கூடாது என்று அமெரிக்கா’’ என்று ஆவேசப்பட்டார்

இலங்கை தமிழர்களுக்காக நடிகர், நடிகைகள் மீண்டும் போராட்டம் நடத்த சத்யராஜ் அழைப்பு



இலங்கை தமிழர்களுக்காக நடிகர்-நடிகைகள் மீண்டும் போராட்டம் நடத்த சத்யராஜ் அழைப்பு விடுத்துள்ளார். இலங்கை தமிழர்களுக்காக நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட திரையுலகத்தினர் ஏற்கனவே ஊர்வலம், உண்ணாவிரத போராட்டங்கள் நடத்தினர். தற்போது இன்னொரு போராட்டம் நடத்தவும் முயற்சிகள் நடக்கிறது.

கவிஞர் பா.விஜய் கதாநாயகனாக நடிக்கும் “ஞாபகங்கள்” படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா ஏ.வி.எம். ஸ்டூடியோவில் நடந்தது. இதில் பங்கேற்று நடிகர் சத்யராஜ் பேசும்போது கூறியதாவது:-

ஈழத்தில் தொடர் படுகொலைகள் நடக்கின்றன. விஜயன் என்ற சிங்கள மன்னன்தான் அங்கு முதலில் குடியேறினான், அதற்கு முன்பே இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்தனர்.

தமிழ்நாடும் இலங்கையும் ஒரே நாடாகவே இருந்தன. இலங்கை மண்ணுக்கு உரிமையானவர்கள் தமிழர்கள்தான். மலையக தமிழர்கள் என்று அழைக்கப்படுகிறவர்களை பின்னாளில் ஆங்கிலேயர்கள் இங்கிருந்து கொண்டு போய் விட்டனர்.

ஈழத்தமிழர்கள் சொந்த நாட்டிலேயே அவதிப்படுகின்றனர். அவர்களுக்காக அத்தனை தமிழர்களும் சேர்ந்து போராட வேண்டும். எல்லா அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் அனைத்து அரசியல் கட்சியினரும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.

லண்டனில் 2 இலட்சம் தமிழர்கள் குழந்தை குட்டிகளோடு போராடியுள்ளனர். அவர்கள் நம்மை விட 10 மடங்கு வசதி படைத்தவர்கள். கனடா, சுவீடன் என எல்லா நாடுகளிலும் தமிழன் போராடுகிறான். நாம் அதை விட அதிகமாக போராட வேண்டும்.

திரையுலகை சேர்ந்தவர்கள் மீண்டும் ஒரு போராட்டம் நடத்த வேண்டும். தலைவர்கள் கலந்து பேசி இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். உலகம் முழுவதும் 8 கோடி தமிழர்கள் உள்ளனர். நம்மால் 3 இலட்சம் தமிழர்களை காப்பாற்ற முடியாவிட்டால் தலை குனிவு ஏற்பட்டு விடும்.

எனக்கு நாட்டுப்பற்று அதிகமாகி விட்டது. வெல்க ஈழம். வெல்க ஈழம். இவ்வாறு சத்யராஜ் பேசினார்.

மக்களை இனச்சுத்திகரிப்பு முகாம்களுக்குத் திரட்டுவதற்கான அரிதாரமே பாதுகாப்பான வெளியேற்றம் ‐ சு.ஞாலவன்





குறிப்பிட்ட ஒரு நிலப்பரப்பைத் தமது பாரம்பரிய தாயகமாகக் கொண்டிருக்கும ஒரு மக்கள் சமூகத்தை பாதுகாப்பான வெளியேற்றம் என்ற அரிதாரம் பூசி இனச்சுத்திகரிப்பு முகாம்களுக்குத் திரட்டுவது குறித்து பன்னாட்டுப் பிரமுகர்கள் சிலர் வாய்கூசாது ஒலித்து வருவதைக் காண்கிறோம். இங்கு நடப்பது ஒன்றும் இயற்கை அனர்த்தமல்ல. தாம் உரிமை கோரும் ஒரு வாழ்வினைச் சகமனிதனுக்கு அனுமதிக்க மறுக்கும் பேரினவாதச்சிந்தனையில் ஊறி நாளும் சிங்களத்தின் நுணுக்கமாகத் திட்டமிட்ட தமிழினப்படுகொலையே இது.

பயங்கரவாத்திற்கெதிரான யுத்தம் எனச் சிங்களத்தில் குறிப்பிடப்படும் இந்த இனப்படுகொலையின் உண்மை முகம் பகிரங்கமாக வெளிப்பட்டு விட்ட பின்னரும் சில பிரமுகர்கள் இன்னமும் பாதுகாப்பான வெளியறறம் குறித்துப் பேசி வருவது தமிழ் மக்களிடையே சில கேள்விகளை எழுப்பியுள்ளது.

உலகில் போர் நடந்த எந்தவொரு பகுதியிலும் முன்மொழியப்படாத இத்தகைய கூட்டிக் கொடுத்தல் ஹிட்லரின் நாசி அரசின் கீழ் அயல்நாடுகளால் யூதர்கள் திரட்டப்பட்டு நாசிக்களின் வதைமுகாம்களுக்கு அனுப்பப்பட்ட கையோடு மனிதாபிமானமற்றதும் அநாகரிகமானதும் அசிங்கமானதுமான யெயிலாகக் கருதப்பட்டுக் கைவிடப்பட்டது.

அப்படியிருக்க ஈழத் தமிழர்களுக்கு எதிரான அநியாயங்களைத் தட்டிக் கேட்க விளையாது ஐநாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான செயலாளர் ஜோன் ஹோம்ஸ் உட்படச் சிலர் மலிவாகச் செயற்படுவது ஈனத்தனமானது.

வட அயர்லாந்திலே ஐஆர்ஏயின் தாக்குதல்களும் அதற்கெதிரான பிரித்தானியப் படைகளின் தாக்குதல் நடவடிக்கைகளும் தீவிரமடைந்த காலப்பகுதியிலே லண்டனோ அல்லது வெறெந்தத் தரப்போ ஆயினும் சரி பொதுமக்களின் மீதான தங்களது அதிகபட்சக் கரிசனையாக பாதுகாப்பான வெளியேற்றத்தை முன்மொழிந்திருக்குமா? அவ்வாறு கருத்துத் தெரிவிப்பதற்குத் தானும் முயன்றிருக்குமா என்றால் இல்லை. ஏனென்றால் நாசிகளின் இனச்சுத்திரிகரிப்பை நன்றாகவே நினைவில் வைத்திருக்கும் மேற்கு இவையிரண்டும் கொண்டுள்ள ஒற்றுமைகளை நன்றாகவே அறியும். இருந்தும் ஈழத்தமிழினம் குறித்து மட்டும் ஏனிந்த இரண்டகம்?

சரி பாதுகாப்பான வெளியேற்றம் பற்றிப் பேசும் தரப்புக்கள் அவ்வெளியேற்றத்திற்குப் பின்னரான தமிழ் மக்களின் பாதுகாப்பான வாழ்வு மற்றும் இருப்புக் குறித்து எந்தளவிற்கு உத்தரவாதம் அளிக்கக் கூடியவர்களாக உள்ளனர்.

பழைய காலங்களை விட்டுவிட்டுப் பார்ப்போமாயினும் மூதூரில் அக்சன் பெய்ம் பணியாளர்கள் 17 பேர் உட்பட ஆறு வயதுச் சிறுமி வக்கிர வெறியாட்டத்தறகு; பலி கொள்ளப்பட்டது வரை நீதியான எந்த நடைமுறைகளும் இன்றிச் செயற்படும் ஆட்சியாளர்களை எப்படி நம்புவது? 1948.லிருந்து நம்பிக்கெட்டதால் பட்டுப் பெற்ற அறிவுதானே நம்மைப் போராட வைத்தது.

அரசின் பொது மக்கள் மீதான கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தாமல் தன்னுடைய முழுமையான படைத்தளபாட, ஆலோசனை ஆசீர்வாதத்;தை வழங்கி வரும் இந்திய காங்கிரஸ் அரசு இல்லாத தனது மனிதாபிமானத்தை அலங்கரித்துக் கொள்வதற்காக புல்மோட்டையில் மருத்துவ முகாம் ஒன்றை அமைத்து எம்மிடம் தினமும் 500 பேர் வரை காயப்பட்ட மக்கள் சிகிச்சை பெறுகிறார்கள். இத்தொகை மேலும் அதிகரிக்கும் என்பதால் தினமும் மேலும் பலநூறு மக்களைக் கையாளக் கூடியதாக முகாமை விரிவு படுத்த உள்ளோம் என்று விளம்பரப்படுத்தி வருகின்றது.

காயப்படுத்தியும் படுகொலை செய்துமே இனச்சுத்திகரிப்புச் செய்யும் சிங்களப் பேரினவாதிகளை அதிலிருந்து தடுத்து நிறுத்தாமல் ஆசீர்வதித்து ஆலோசனை வழங்குபவர்கள் கட்டுப் போடுவதாகக் காட்டித் தங்ளைக் கௌரவப்படு;த்திக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.

இதைப் போலவே சற்று வேறுபட்டது பன்னாட்டு முகாம். தமிழ் மக்களின் மனிதாபிமான விடயங்கள் தொடர்பிலான எங்கள் முயற்சி சிறிது முன்னெற்றம் கண்டுள்ளது. என்கிறார் ஐநா பேச்சாளர். அந்த முன்னேற்றம் என்ன என்று சொல்ல ஏதாவது இருக்க வேண்டுமே? தமிழினத்தின் போராட்ட நியாயங்களைக் கருத்திலெடுக்காது சிங்கள அரசினதும் அதன் ஒட்டு நாடுகளினதும் இராஜதந்திரங்களுக்கு மட்டுமே செவிசாய்த்து பன்னாட்டுத் தப்புக்கள் கடந்த காலங்களில் கடைப்பிடித்து வந்த அலட்சிய அதர்மப் போக்கே சிங்களப் பேரினவாதத்தை மேலும் தீவிரமடையச் செய்தது.

நிலைமை இப்படியிருக்க தங்களின் தவறை உணர்ந்து மாற்றுக் கொள்கையைக் கடைப்பிடிப்பதை தவிர்த்து இங்கே பகிரங்கமான இனப்படுகொலை நிகழ்வதைத் தடுத்து திட்டமிட்ட நுணுக்கமான வெளித்தெரியாத இனச்சுத்திகரிப்பிற்குத் தமிழ் மக்களைப் பலிகொடுப்பதற்கானதே தற்போதைய பாதுகாப்பான வெளியேற்றம் குறித்த அழுத்தங்கள்.

இந்நிலையில் முழு உலகமும் ஏன் நமக்ககெதிராகச் செயற்படுகிறது என்கிற மன ஆதங்கம் எழுவது இயல்பே. உண்மையைச் சொல்லப் போனால் இந்திய காங்கிரஸ் தவிர்ந்த நீங்கலாக வேறு எந்த நாடுமே நம்மை எதிரிகளாகக் கருதவில்லை.

சிங்களம் தன்னைப் பலம் வாய்ந்ததாக வெளியுலகில் வெளிப்படுத்துவதற்கு ஏதுவான புறந்சூழல் காணப்படுகிறது. இப்டியிருக்க பலவீனமாக உள்ளதாகத் தாம் கருதும் ஈழத் தமிழினத்துடன் நட்புப் பாராட்ட முன்னணி நாடுகள் பெரிதும் விரும்பாமல் ஏதோ தங்களுடைய முன்னணி நிலைக்கு அகௌரவம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதற்காகப் பகிரங்கமான இனப்படுகொலையை மட்டும் தடுத்து நிறுத்த முயற்சிக்கிறது. அதற்காகவே பாதுகாப்பான வெளியேற்றம் இவ்வெளியேற்றத்துக்குப் பின்னரான பலியெடுப்புக்கள் உரிமை மீறல்கள் எல்லாம் சர்வதேச மனச்சாட்சியை எட்டாமல் சிறிலங்காவின் ஊடக ஒடுக்குமுறையும் புலனாய்வுத்துறையும் பார்த்துக் கொள்ளும்.

இவ்வாறான சூழலில் எமது பலத்தை ஒன்று திரட்டி உச்சபட்சமாக வெளிப்படுத்தி பேரினவாதப் படைகளை வெற்றி கொள்வதினூடாக தாயகப் பகுதிகள் மீட்டெடுக்கப்படுவது மட்டுமன்றி பன்னாட்டு ஆதரவினையும பெற்றுக் கொள்ளலாம்
ஏககாலத்தில் புலத்தில் வாழும் எம்மவர்களின் அயராத உறுதிமிக்க போராட்டமும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும். அதாவது புலம் பெயர் வாழ் தமிழ் மக்களின் தற்போதைய தமிழ் மக்களுக்கான கவனயீர்ப்புப் போராட்டங்கள் என்பன அந்தந்த நாட்டு மக்களை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு தமிழ் மக்களுக்கான ஐரோப்பிய அமெரிக்க மக்களின் போராட்டங்களாகப் பரிணமித்து அரசியல் சக்தியாக எழ வேண்டும். அதாவது கலந்து கொள்ளும் ஒவ்வொரு தமிழரும் பத்திற்கும் குறையாத அந்நாட்டவர்களும் என்ற ரீதியில் மாபெரும் சக்தியாகத் திகழ வேண்டும். இதற்காகச் சகல ஆதரவு சக்திகளும் உறவு கொள்ளப்பட வேண்டும்.

கூடவே ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் வாழும் நம்மவர்களுக்கு வேறொரு வாய்ப்பும் உள்ளது. அங்கே ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு இன சமூகங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் பலர் நம் தமிழுறவுகளின சகமாணவர்களாக தொழிலாளர்களாக, அயலவர்களாக நண்பர்களாகவும் உள்ளனர். ரஸ்யா, இஸ்ரேல், ஈரான், துருக்கி, வியட்நாம் உட்படப் பல சமூகங்களைச் சேர்ந்தவர்களின் அமைப்புக்களுடனும் நட்புறவினை ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய வசதி வாய்ப்பினைப் பெற்றவர்களாகவும் இவர்கள் உள்ளனர்.

இப்பல்லின நட்பு சக்திகளுக்கு எங்களின் பிரச்சினைகளைத் தெளிவு படுத்தி அவர்களுடாக அந்தந்த நாடுகளின் சிங்கள ஆதரவுப் போக்கிலே மாற்றஙகளைக் கொண்டு வர முடியும்.

ஆகவே சகல வாய்ப்பு வசதிகளையும் பயன்படுத்தி தமிழினத்தின் உரிமைகளுடன் கூடிய கௌரவமான வாழ்வு நிலை பெறுவதற்காக அனைவரும உழைப்போம்

இலங்கை அரசாங்கத்தின் சர்வதேச நிலை காய் நகர்த்தல்


பீஷ்மர்

இலங்கையின் இனக் குழுமப் போர் கிளிநொச்சி சம்பவத்துடன் அப்பிரச்சினையின் பின்புலம் கூட மறக்கப்பட்டு கிளிநொச்சி நிலைப்பட்ட மக்கட் பெயர்வு பிரச்சினையே இன்று மிகப் பெரிய சர்வதேச நிலை பிரச்சினையாகியுள்ளது.

விடுதலைப் புலிகளின் அதிகாரத்திலுள்ள பிரதேசங்களிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு மக்கள் வருகின்றார்கள், வரவிரும்புகின்றனர். இதற்கான பிரதான காரணம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தின் மீது நடைபெறும் குண்டு வீச்சு மற்றும் ஷெல் தாக்குதலாகும். உண்மையில் விமானக் குண்டு வீச்சிலும் பார்க்க ஷெல் தாக்குதலே அதிகரித்துள்ளது. இலங்கையில் இப்பொழுது தடைசெயப்பட்டுள்ள பி.பி.ஸி.யின் தமிழ் ஓசை செதிகளைக் கேட்கின்ற போது, இந்த மக்கட் பெயர்வு குறித்த ஒரு மனப்படிமத்தைப் பெற்றுக் கொள்ள முடிகின்றது.

குண்டுவீச்சுத் தாக்குதல் காரணமாக, அதுவும் ஷெல் வீச்சுத் தாக்குதலினால் அதிகம் கூடியுள்ள "ஆபத்தபாய'(Risk) பயம் காரணமாக மக்கள் அந்தப் பிரதேசங்களில் ஓரிரு அங்குல வெளியில் அசைவதற்குக் கூட பயப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் வாகன அசைவியக்கங்கள் பற்றிய தகவல்களை அரசாங்கம் நம்பகமாக அறிந்துகொண்டு அத்தகைய இடங்கள் மீது ஷெல் தாக்குதல்களும் விமானத் தாக்குதல்களும் நடத்துகின்றதாம்.

இந்த மக்கட் பெயர்வு இரண்டு நிலைமைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒன்று, சாதாரண மக்கள் சற்று அதிகமான தொகையினராகவே வெளியேற விரும்புகின்றமை. இது விடுதலைப் புலிகளின் ஆள்நில பரிபாலனத்துக்கும் காப்புக்கும் பிரச்சினைகளை தோற்றுவிக்கின்ற ஒன்றாகும். இரண்டாவது இவ்வாறு புலிகளின் மேலாண்மைப் பிரதேசத்திலிருந்து அரசாங்கத்தின் நிர்வாகம் நடைபெறும் இடத்துக்கு வந்து சேர்தலாகும். அரசாங்கத்துக்கு இது இருதலைக்கொள்ளி நிலையை ஏற்படுத்துகின்றது. அரசாங்கமென்னும் வகையில் மக்கட் தொகையாக வருவது அரசின் நற்பெயருக்கு நல்லது. ஆனால், இந்த ஆட்பெயர்வின் ஊடே வரக்கூடாதவர்கள் வந்துவிடலாமென்ற பயம் அரசுக்கு இருக்கின்றது. இதனால் அவர்களை அரச பகுதிக்குள்ளே உள்வாங்கும் பொழுது மிகுந்த எச்சரிக்கையுடனே செயற்படப் பார்க்கிறார்கள். இந்த எச்சரிக்கை நிலை வரும் மக்களுக்கு மேலும் பல அசௌகரியங்களை ஏற்படுத்துகின்றது.

விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரையில் மக்கள் எத்தகைய பயம் காரணத்தினாலோ இடம்பெயர்கின்ற போது அப்பெயர்வு இவர்களை நிச்சயம் இரண்டு வகையில் பாதிக்கும். ஒன்று தங்கள் மேலாண்மைப் பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கின்றதென்பதாகும். (இது உண்மையில் ஒரு முரண்நிலையை தோற்றுவிக்கின்றது). எந்த மக்களுக்காக போராட்டம் நடைபெறுகின்றதோ அந்த மக்கள் இடம்பெயர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது. இதனால் புலிகளும் யார் போகின்றார்கள் அவர்கள் எத்தகையவர்கள் என்பது பற்றி மிக உன்னிப்பான கவனம் வைத்திருக்க வேண்டியது அவசியமானது.

விடுதலைப் புலிகளின் பக்கமும் அரசாங்கத்தின் பக்கமும் நியாயப்பாடுகள் காணப்படுவதால் மக்களின் கஷ்டங்கள் குறைந்து விடுமென்பது கருத்தல்ல.

தமிழிலேயே ஒரு பழமொழியுண்டு "பனையால் விழுந்தவனை மாடு ஏறி மிதித்த கதை'. உருவகமென்றாலும் உண்மை உண்மைதான். இதிலொரு சிக்கல் என்னவென்றால் இந்தச் சம்பவம் பற்றி பனங்காணிக்காரரும் மாட்டின் சொந்தக் காரனும் பேச விரும்பாமல் இருக்கலாம். ஆனால், அயல் வீட்டுக்காரர்கள் பேசாதிருக்க மாட்டார்கள். இப்போது சர்வதேச நிலையில் நடப்பது இதுதான். இலங்கையின் இனக் குழும போர் பற்றி எதுவும் செது கொள்ளுங்கள். மக்கள் தங்கள் உயிர் பயத்தால் தப்ப விரும்புவதை தடுக்காதீர்கள் என்ற குரல் எழும்புவது தவிர்க்கப்பட முடியாது. உண்மையில் இன்றைய சர்வதேச நிலையில் இது ஒரு பெரிய மனிதாபிமான பிரச்சினையாகும். கொங்கோவிலோ சோமாலியாவிலோ இல்லாத பிரச்சினை இலங்கையில் நடைபெறுகின்றது.

இந்த நிலையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மற்றைய நாடுகள் அதுவும் இலங்கையுடன் சம்பந்தப்பட்ட நாடுகள் இந்நிலைமை பற்றிப் பேசுவது ஆச்சரியமல்ல. ஒரு வகையில் பார்த்தால் கடமையும் கூட. கடன் வழங்கும் நாடுகள் இது பற்றிக் கவலைப்படுவது அத்தியாவசியமாகும். ஆனால், இதிலுள்ள மற்றைய நெருடலான பிரச்சினையென்னவென்றால் உரிமைப் போரின் சரி, பிழையோ அல்லது அரசாங்கம் எதிர்க்கும் சரி, பிழையோ என்பதைப் பற்றிப் பேசாமல் பிரச்சினை மக்கட் பெயர்விலேயே குவி நிலைப்பட்டு உள்ளது. இது ஒரு சர்வதேச அவலமாகிவிட்டது.

பி.பி.ஸி. தமிழ் ஓசை நிகழ்ச்சிகளில் பக்கற்சார்பு அற்ற உண்மைகள் கூறப்படுகின்றன. தமிழிலே கூறப்படுவதை விட பி.பி.ஸி. ஆங்கில செதிச் சேவையில் கூட இது முக்கியமாகப் பேசப்படுகின்றது. இப்பொழுது பி.பி.ஸி.யின் ஆங்கில நிருபராக கடமையாற்றும் அன்பரசன் மிக நிதானமாக எடுத்துக் கூறுகின்றார். இப்படியொரு நிலைமை காரணமாக ஜப்பான், அமெரிக்கா, கனடா, பிரிட்டன், நோர்வே போன்ற நாடுகள் தங்கள் கருத்துகளை வெளியிட்டுள்ளன. மானிட நிலை அவலத்தை நிறுத்துங்கள் என்பதுதான் கோஷம். இலங்கையின் அரச ஊடகங்களைப் பார்க்கும், கேட்கும் பொழுது சர்வதேச நாடுகளும் நிறுவனங்களும் விடுதலைப் புலிகளுக்கு மாத்திரமே இதைக் கூறுகின்றதாகச் சொல்கின்றனர். ஐ.நா. செயலாளரே தொலைபேசியில் பேசுவதென்பது வெறுமனே சுகம் விசாரிக்கும் நிகழ்ச்சியல்ல.

அரசாங்கத்துக்கு இது ஓர் உண்மையான நெருக்கடி நிலையை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய ஒரு கட்டத்தில் அரசின் காநகர்த்தல் எவ்வாறு அமைய வேண்டுமென்பது (அவர்கள் கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது) மிக முக்கியமான அதேவேளையில் சிக்கல்கள் பல நிறைந்த ஒரு நிலைமையாகவேயுள்ளது. இலங்கை நிலையில் ஜனாதிபதி என்கின்ற தனிமனிதனிலும் பார்க்க இன்றைய அரச அதிகாரம் நிறுவப்பட்டுள்ள முறைமையே இந்தப் போரைத் தவிர்க்க விரும்பவில்லையெனத் தெரிகின்றது. உலக நிலையில் பயங்கரவாதத்துக்கு எதிரான அபிப்பிராயத்தை தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு விடுதலைப் புலிகள் பிரச்சினையை ஒரு முற்று முழுதான பயங்கரவாத பிரச்சினையெனக் காட்டித் தீர்த்துக்கொள்ள விரும்புகின்றனர்.

அரசாங்கத்துக்கு மேலுமொரு சிக்கல்பாடு உள்ளது. இலங்கைத் தமிழ் பிரச்சினைக்கான அனுபந்தமாகவேனும் ஒரு தீர்வைக் காட்டினால் சர்வதேச அபிப்பிராயம் இவர்கள் பக்கம் கூட சாயலாம். விமல்வீரவன்ஸ, சோபித தேரர்கள் அதற்கு இடம்கொடுக்கப் போவதேயில்லை. சுருக்கமாகச் சொன்னால் இலங்கையை பௌத்த சிங்கள நாடாக தக்கவைப்பதற்கு இந்தப் போரில் வெற்றி அவசியமென்பது சிங்கள மக்களுக்கு எடுத்துக் கூறி அவர்களை நம்பவைத்தாயிற்று.

ஆனால், இது உள்ளூர் நிலைவரம் தான். வெளிநாடுகளைப் பொறுத்த வரையில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் போன்ற நாடுகள் மக்களை கஷ்டப்படுத்தாதீர்கள் என்று சொல்வது அரசாங்கத்துக்கு கஷ்டமாகவேயுள்ளது. இனிப் போரென்றால் ஆயுதங்கள் தொடர்ந்து வேண்டும். எதிராளியிடமே தாங்கிப் படையும் கப்பல் படையும் இருக்கின்றதென சொன்னால், மற்றப் பக்கம் ஆயத்தமாக இருக்க வேண்டும் தானே. அரசாங்கம் இந்த சுழிக்குள் நின்றுகொண்டு பார்க்கின்ற பொழுது இதிலிருந்து தப்புவதற்கான வழி முன்னிலையிலுள்ள, முக்கியத்துவமுள்ள முஸ்லிம் நாடுகளுக்குச் செல்வதுதான். இந்தப் பின்புலத்தில் தான் ஜனாதிபதி ஈரானுக்கு பயணம் செய்ய வேண்டி வந்தது எனலாம்.

தேயிலையை வைத்துக்கொண்டு எல்லா வேண்டுதலையும் முன்வைத்துள்ளனர். போர்த் தளபாடம் உட்பட சகல தளபாடங்களையும் வாங்கிக் கொள்ளலாம். இந்தப் பின்புலத்திலேயே ஜனாதிபதியின் அன்றைய ஈரானிய விஜயத்தையும் இன்றைய லிபிய விஜயத்தையும் பார்க்க வேண்டும். ஜனாதிபதி அவர்களிடத்துச் செல்வது அத்தியாவசியமாகின்றது.

ஈரானுக்கும் லிபியாவுக்கும் ஒரு சர்வதேச விம்பம் உண்டு. அதாவது, அவர்கள் மேற்குலகின் மிரட்டல்களுக்கு அடிபணியாதவர்கள். அவர்கள் பின்னர் பல சமரசங்கள் செது கொண்டுள்ளனரெனும் யதார்த்தத்தையும் மறக்கக்கூடாது. ஆனால், இந்த காநகர்த்தலில் ஒரு உத்திச் சிறப்பு இல்லாமல் இல்லை. ஆங்கிலத்திலே ஒரு பழமொழியுண்டு. The Proof of the pudding is in the eating அதாவது, சாப்பிடுவது நல்ல புடிங் தானா இல்லையென்பது சாப்பிடும் பொழுதுதான் தெரியும். கடனும் படையும் தான் இந்தப் பிரச்சினையின் "புடிங்'.

"வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக...'

“கலைஞர்” பற்றி தேசியத்தலைவர் பிரபாகரன். “தேசியத்தலைவர்” பற்றி அருட்தந்தை ஜெகத் கஸ்பர்


வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் அலட்டல் இல்லாத இயல் பான ஆளுமையும், எளிமையும் மனதில் ஆழப்பதிந்து நினைவினின்று அகல மறுக்கிறது. குளிர்வசதி, மின்விசிறி இல்லாத அறையில்தான் நேர்காணல் நடந்தது.
வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் அலட்டல் இல்லாத இயல் பான ஆளுமையும், எளிமையும் மனதில் ஆழப்பதிந்து நினைவினின்று அகல மறுக்கிறது. குளிர்வசதி, மின்விசிறி இல்லாத அறையில்தான் நேர்காணல் நடந்தது. எட்டுமணி நேரம்

வியர்த்துக்கொண்டே இருந்தது. துடைப்பதற்கு டவல்கூட தேடவில்லை. மேஜையில் இருந்த வெள்ளை டிஷ்யூ தாள்களை எடுத்து அவ்வப்போது நெற்றியில், கழுத்துப் பகுதியில் வழிந்துகொண்டிருந்த வியர்வையை துடைத்துக் கொண்டார். அவரது தேவைகளை பார்த்துக் கொள்ளவென்று ""சேவைப் பணி அணி'' ஏதும் இருக்க வில்லை. அறை மூலை யில் மண்பானையில் தண்ணீர் இருந்தது. தாகம் ஏற்பட்ட போது தானே எழுந்து சென்று எவர்சில்வர் குவளையில் தண்ணீர் எடுத்துக் குடித்தார். இவையெல் லாம் சின்ன விஷயங்கள்தான். ஆனால் போர்க் கள வெற்றிகளும், உலகத் தமிழரின் உள்ளங்களில் உயர்ந்து நின்ற தகைமையும், தன் கீழ் பல படையணிகள் -என ஆர்ப்பாட்டம் காட்டுவதற்கு அனைத்துமிருந்தும் அவர் இயல்பாயிருந்தார் என்பது மிகவும் பிடித்திருந்தது.
மிகவும் நகைச்சுவையான மனிதர்கூட 60 நிமிடம் பேசினால் 50 நிமிடம் கலகலப்பாக நகைச்சுவை ததும்பிடப் பேசும் ஆற்றல் லட்சத்தில் ஒருவருக்குத்தான் இருக்கும். அத்தகையோரை நமக்கு மனதாரப் பிடித்துவிடும். வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களும் அப்படியொரு கதையாடி. தமிழ் சினிமா பற்றி பேச்சு வந்தபோது, ""எங்கட போராளிகளுக்கு ஹாலிவுட் சினிமா காட்டுவோம். ஆனா அந்த வெள்ளைக்கார பெட்டையளுக்கு மட்டும் கிராஃபிக்ஸ்ல தமிழ் உடுப்பு போட்டு விடுவோம்'' என்றார்.

பல்கலைக்கழகம் சென்று படிக்காத அவர், தன் முயற்சியால் ஆங்கிலம் படித்திருக்கிறார். நான் அவரை சந்தித்த காலத்தில் வெளிவந்து உலக அளவில் பேசப்பட்ட புத்தகங்களைப் பற்றி தன் உரையாடலில் மேற்கோள் காட்டிக் குறிப்பிட்டது எனக்கு வியப்பாக இருந்தது. புத்தகங்களெல்லாம் படிக்க எப்படி உங்களுக்கு நேரம் கிடைக்கிறது?' என்று கேட்டேன். வேலை களையெல்லாம் எல்லோருக்கு மாய் பகிர்ந்து கொடுத்துவிட் டேன். எனக்கு பெரிய வேலை, காயம்பட்டு நிரந்தரமாய் படுக்கை யிலாகிவிட்ட போராளிகளை அவ்வப் போது பார்த்துக் கொள்வதும் புத்தகங்கள் படிப்பதும்தான்'' என்றார். என்னால் நம்ப முடியவில்லை. தலைசிறந்த நிர்வாகி தானே மாங்கு மாங்கென்று எல்லா வேலைகளையும் செய்து களைத்துப் போகிறவனல்ல. தகுதியானவர் களை அடையாளம் கண்டு -வள்ளுவர் சொன்னது போல் - "இதனை இதனால் இவன் முடிப்பான் என்றறிந்து அதனை அவன் கண் விடும் ஒப்பிலா நிர்வாகியாய் அவரை நான் கண்டேன்'. உண்மையில் ""தலைவன் என்கிறவன் இலட்சியத்தை மேலாண்மை செய்கிறவன், தினசரி வேலைகளை நிர்வகிக் கிறவனல்ல'' என்ற புகழ்பெற்ற மேலாண்மை விதியை அவரிடத்தில் நிதர்சனமாய் பார்க்க முடிந்தது.

உணவு இடைவேளையின்போது பாட்டி ஒருவர் திடுமென உரிமையோடு உள்ளே வந்தார். பாதி பற்கள் போயிருந்த பாட்டி ஓய்வு பெற்ற ஆசிரியராம். சொத சொதவென வெற்றிலை பாக்கு சொதப்பிக்கொண்டே வந்தார். தலைவரிடம் வன்னி விளாங்குளம் பகுதி மக்களின் பிரச்சனைகள் சிலவற்றை எடுத்துக் கூறினார். தலைவன்-மக்கள் உரையாடலாய் அவர்களின் பேச்சு இருக்கவில்லை. தாய்-மகன் போல், அக்கா-தம்பிபோல், குடும்பத்தில் ஒருவர்போல் உரிமையும், நேசங்களும் தோய்ந்த அந்த உரையாடலை இப்போது நினைக்க நெஞ்சம் நிறைந்து ஒரு வகையான ஏக்க உணர்வில் அடைக்கிறது.

உரையாடல் போக்கில் பாட்டியிடம் பிரபா கரன், "பாட்டி, உங்களிடம் எனக்கு எல்லாம் பிடிச் சிருக்கு. இந்த வெத்திலை பாக்கு பழக்கம் தவிர'' என் றார். பாட்டி பதிலெல்லாம் யோசிக்கவில்லை. பேசிக்கொண்டிருந்த அதேபோக்கில் பொலபொல வென பொரிந்தார். ""தம்பி... இஞ்செ பாருங்கோ... உம்மகிட்டேயும் எனக்கு பல விஷயங்கள் பிடிச்சி ருக்கு. ஆனா இந்த வெத்திலெ பாக்கு விஷயத்திலெல் லாம் நீர் தலையிடறது எனக்கும் துப்புரவா பிடிக்கலெ''. ""வாழ்ந்தவர் கோடி, தாழ்ந்தவர் கோடி மக்களின் மனங்களில் நிற்பவர் யார்?'' என்ற புரட்சித் தலைவரின் பாடல் நினைவுக்கு வருகிறது. சாமான்ய மக்கள் எவரும் வேலுப்பிள்ளை பிரபாகரனை சர்வாதிகாரியாகவோ, ஏன் போராளி இயக்கத் தலைவராகவோ கூட பார்க்கவில்லை யென்பதையும், தங்கள் தம்பியாக -அண்ணனாகவே பார்த்தார்கள் என்பதையும் வன்னியில் நான் சுற்றித் திரிந்த அந்நாட்களில் அறிய முடிந்தது.

புகழ்ச்சி எல்லோருக்கும் பிடிக்கும். தலைவர் களுக்கு ரொம்பவே பிடிக்கும். வேலுப்பிள்ளை பிர பாகரன் அவர்கள் எந்த அளவுக்கு புகழ் போதைக்கு அடிமையென்பது எனக்குத் தெரியாது. ஆனால் இதுவரை நான் நேர் கண்ட முக்கியமானவர்களில் மிகவும் நேர்மையான எளிமையோடு, தன்னுணர்வு சுயபிரக்ஞை இல்லாமல் அப்பட்டமான நேர்மை யோடு பதிலளித்த ஒரே மனிதர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்தான். ""தமிழீழ தேசியத் தலைவர் என்ற தகைமையை எவ்வாறு நீங்கள் உணர்கிறீர்கள்?'' என்ற எனது கேள்விக்கு அவர் தந்த பதில் காவியங்களைக் கடந்த வரலாற்றுப் பதிவாக நிற்குமென நினைக்கிறேன்.

இதோ பிரபாகரன் பேசுகிறார். ""பாருங்க ஃபாதர். இப்போ கனபேர் என்னைப்பற்றி கதை எழுதுறாங்கள். "பிரபாகரன் பிறப்பிலேயே வீரன், பதினைந்தாம் வயதிலேயே அவனுக்கு தமிழீழ கனவு பிறந்தது. பறவைகளை குறி தவறாது அவன் கொன்று வீழ்த்துவான். இப்படியெல்லாம் கதை எழுதுறாங்கள். உண்மையை சொல்லப்போனால் ஃபாதர் எனக்கு அந்த வயதில் தமிழீழமும் தெரி யாது, வடக்கு-கிழக்கும் தெரியாது. ஒண்ணும் பெரி தாகத் தெரியாது. வல்வெட்டித்துறை நூலகத்தில் நாளிதழ்களும் புத்தகங்களும் படிக்கிற மாணவர்கள் நாங்கள். ஒவ்வொரு நாளும் நாளிதழ்களில் ""தமிழ்பெண்கள் கற்பழிப்பு'', "சிங்கள காவல்துறை அப்பாவி தமிழர் மீது தாக்குதல், சித்ரவதை என்றெல்லாம் செய்திகள் படிக்கும்போது ரத்தம் கொதிக்கும். மனம்கிடந்து தவிக்கும். எதாவது செய்ய வேண்டும் என்று துடிக்கும். ""சாகிறதுக்கு முன்னம் ரெண்டு சிங்கள ஆர்மிக்காரனையோ போலீசையோ சுட்டுப்போட்டு சாகணும்'' என்று தான் வீட்டை விட்டு ஊரைவிட்டு நாங்கள் புறப்பட்டோம்.

எங்கள் இலட்சியம் அன்றைக்கு மிகச் சின் னது. தமிழர் படும் துன் பங்களுக்கெல்லாம் எங்க ளாலான சிறிய பதில் - ஓரிரண்டு பேரை பழி தீர்ப்பது. அப்படித் தான் புறப்பட் டோம். ஆனால் பயணமும் பாதை யும் பலவற்றை எங்களுக்குக் கற்றுத் தந்தது. முக்கியமாக தமிழீழம் என்ற கனவினைத் தந்தது. தமிழருக்கென தனியொரு நாடுதான் கொடுமைகள், துன்பங்கள், யாவிற்கும் தீர்வு என்ற புரிதலைத் தந்தது. எங்கள் மக்களின் பாசத்தாலும் போராளிகளின் தியாகத்தாலும் எமது மக்களுக்கான போராட்ட இயக்கமொன்றை தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை நாங்கள் கட்டி எழுப்பினோம்.

"பிறப்பால் போராளிகள் என்பதால் நாங்கள் போராட வரவில்லை. போராடினாலும் அழிவோம், போராடாவிட்டாலும் அழிவோம். ஆனால் போராடினால் பிழைத்துக்கொள்ள வாய்ப் பிருக்கிறது' என்ற புரிதலில் நின்றுதான் எங்கள் போராட்டத்தை மக்கள் போராட்டமாக வளர்த்தெடுத்து வருகிறோம்.

""இன்னும் ஒருபடி தெளிவாகச் சொல்வதானால், தமிழீழம் அமைத்து, அதற்குத் தலைவனாக வேண்டும் என்ற எண்ணத்தி லெல்லாம் நான் போராடவில்லை. உண்மையில் எனது காலத்தில் தமிழீழம் வரும் என்று கருதிக்கூட நான் போராட்ட களத்தில் நிற்கவில்லை. எனக்குப் பின்னரும் மேலும் ஓர் நாற்பது ஆண்டு களுக்கு இந்தப் போராட்டம் தொடர்ந்து நடப்பதற்கு தேவையான ஒழுங்குகளையும் ஏற்பாடுகளையுமே நான் செய்துகொண்டி ருக்கிறேன். அந்த உணர்வோடே நான் இயங்கிக்கொண்டிருக் கிறேன்.''

அவரது பதிலை இன்று 7 ஆண்டுகளுக்குப்பின் நினைக்கிற போதும் சிந்தை சிலிர்க்கிறது. விடுதலைப் போராட்டம் பற்றி அவர் கொண்டிருந்த யதார்த்தமான புரிதல் தெளிவுகாண வியப்புணர்வொன்று விரிகிறது. அம் மாமனிதன் இன்று களமாடி நிற்கும் முல்லைத்தீவு காடுகள் நோக்கி மனக்கண்கள் திரும்புகின்றன.

கடந்த இதழைப் படித்துவிட்டு நண்பர்கள் சிலர் கவலையோடு கேட்டனர். இவற்றையெல்லாம் இப்போது சொல்வ தால் உங்களுக்கு நாளை பிரச்சனைகள் வராதா என்று. நானோ, காலங்கடந்து எழுதுகிறேன் என்ற குற்ற உணர்வில் தவிக்கிறேன். எதைப்பற்றிய அச்சமும் எனக்கு இன்று இல்லை. நான் தமிழன், எனது இனம் உலகின் மிகப்பழமையான, உயர்ந்த பண்புகளையும் விழுமியங்களையும் கொண்ட ஒப்பிலா இலக்கியங்கள் படைத்த, சுயமரியாதை கொண்ட, எட்டுகோடி உயிர்களைக்கொண்ட ஒரு மிகப்பெரிய தேசிய மக்கள் இனம் என் இனம். என் இனத்தில் ஒன்றரை லட்சம் பேரை கொன்றழித்து, இன்று மேலும் அதே எண்ணிக்கையிலான மக்களை முல்லைத்தீவில் உயிரோடு புதைத்துவரும் கிராதக சிங்கள பேரினவாதிகளோடு சேர்ந்துகொண்டு இந்திய ஆளும் வர்க்கத்தில் ஒரு பகுதியினரும், பெரும் உலக சக்திகளும் என் இனம் சார்ந்த அம்மக்களின் போராட்டத்தை "பயங்கரவாதம்' என முத்திரை குத்துவது என் இனத்தையே சிறுமைப்படுத்தும் செயலாகும். குறைந்தபட்சம் என்னால் ஆனது அச்சமில்லா எதிர்குரல். ஒலிக்கும் எது வரினும்.

"இந்தியாவை ஏன் நீங்கள் பகைத்துக்கொண்டீர்கள்?' என்ற கேள்வியைத் தொடர்ந்து "கலைஞரையும் பல தருணங்களில் நீங்கள் காயப்படுத்தினீர்களே...' என்றேன்.

""இரண்டு தலைமுறை இளைஞர்களுக்கு தமிழ் உணர்வை ஊட்டி வளர்த்தவர் கலைஞர். நாங்கள் எல்லோரும் கலைஞரின் உரைகள் கேட்டு தமிழுணர்வில் ஊறியவர்கள். யாழ்ப்பாணம் சென்று பாருங்கள் கலைஞரின் உரைகள் அடங்கிய கேசட்டுகள் இல்லாத கடைகளை நீங்கள் பார்க்க முடியாது. சில சூழ்நிலைகள் அவர் மனம் வருந்தும்படி அமைந்திருக்கலாம். ஆனால் அவர் மிகப்பெரிய தலைவர். நான் சொல்ல விரும்புவது ஒன்று தான்...

(தொடரும்)

-நன்றி . நக்கீரன்-

சிட்னியில் உண்ணா நோன்பு

தமிழ் மக்கள் தமது இனத்திற்காக தியாகம் செய்ய துணிந்தவர்கள்: 'த இன்டிபென்டன்ற்'

தமிழ் மக்கள் அண்மைக்காலமாக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை பார்க்கும் போது அவர்கள் தம்மை தியாகம் செய்வதற்கு துணிந்தவர்கள் என்பது தெளிவானது என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'த இன்டிபென்டன்ற்' நாளிதழ் தெரிவித்துள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை வெளியாகிய அந்த இதழில் முதற்பக்க செய்தியாக தமிழ் இளைஞர்களின்

சாகும் வரையிலான உண்ணா நோன்பு தொடர்பான செய்தியும், ஆய்வும் வெளியிடப்பட்டிருந்தது.

அதன் முக்கிய பகுதிகள் வருமாறு:

21 வயதே நிரம்பிய சிவதர்சன் சிவகுமாரவேல் என்ற மாணவன் தனது உயிரை இழப்பதற்கு தயாராகி வருகின்றார். ஆதரவாளர்கள் கண்ணீருடன் எப்போதும் ஆதரவு வழங்க வெப்பமூட்டும் துணிகளுக்கு மத்தியில் அவர் கிடக்கின்றார்.

பிரித்தானியா நாடாளுமன்றத்திற்கு முன்பாக உண்ணாநோன்பினை மேற்கொள்ளும் இரு மாணவர்களில் சிவாவும் ஒருவர்.

போரை நிறுத்துமாறு பிரித்தானியா சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உண்ணாநோன்பினை மேற்கொண்டு வருகின்றனர்.

தனது பரீட்சைக்கு படிப்பதையோ அல்லது பல்கலைக்கழகத்தில் உள்ள புதிய நண்பர்களுடன் வெளியில் சென்று மகிழ்ச்சியாக இருப்பதனை கூட அவர்கள் புறக்கணித்து சாவை நோக்கி உண்ணாநோன்பினை மேற்கொண்டு வருகின்றனர்.

கணணித்துறை மாணவரான 28 வயதுடைய பரமேஸ்வரன் சுப்பிரமணியன் எனப்படும் மற்றைய மாணவரும் கடந்த செவ்வாய்கிழமை தொடக்கம் காலை 10:00 மணியில் இருந்து நீரோ அல்லது உணவினையோ அருந்தவில்லை.

தற்போது நடைபெற்று வரும் மோதல்களில் அனைத்துலக சமூகம் செயற்திறன் அற்று இருப்பதாக அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் தமக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்படக்கூடாது என அவர்கள் தமது அறிக்கைகளில் தெரிவித்துள்ளனர். ஆனால் நீரிழப்பினால் அவர்களின் உடல்நிலை மோசமடைந்துள்ளது.

என்னை காவல்துறையோ அல்லது மருத்துவ குழுவோ இங்கிருந்து அகற்றினாலும் எனது போராட்டம் தொடரும் எனவும், தனது தாயார் கூட உண்ணாநோன்பினை கைவிடுமாறு தொலைபேசியில் கேட்டுக்கொண்டதாகவும் ஆனால் போர் நிறுத்தம் ஒன்று ஏற்படும் வரையில் தான் அதனை கைவிடப்போவதில்லை எனவும் சிவா தெரிவித்துள்ளார்.

எமது மக்களை உலகம் கைவிட்டுள்ளது, எமது இருவரினதும் மரணமே இந்த போரின் இறுதி மரணமாக இருக்க வேண்டும் என நான் விரும்புகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் போராட்டம் கடந்த திங்கட்கிழமை வெஸ்ட்மினிஸ்ரர் பாலத்தை முடக்கியிருந்தது.

அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது என்பது கடினமானது. இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும், ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் மற்றும் பிரித்தானியா பிரதமர் ஆகியோரை சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும், பிரித்தானியா விடுதலைப் புலிகள் மீதான தடையை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளனர்.

ஆனால் நேற்று இரவு வரையிலும் பிரதமர் அலுவலகம் கருத்துக்கள் எதனையும் கூறவில்லை.

இந்த இருவரும் உண்மையாகவே இறப்பை சந்திக்க துணிந்து விட்டனரா என்பதை கூறுவது கடினமானதாக இருந்தாலும் தமிழ் மக்கள் அண்மைக்காலமாக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை பார்க்கும் போது அவர்கள் தம்மை தியாகம் செய்வதற்கு துணிந்தவர்கள் என்பது தெளிவானது.

வர்ணகுலசிங்கம் முருகதாசன் என்ற 26 வயது மாணவன் கடந்த மாதம் ஜெனீவாவில் உள்ள ஐ.நா. அலுவலகத்திற்கு முன்னால் தீக்குளித்து இறந்திருந்தார். அதன் பின்னர் பிரித்தானியா பிரதமரின் அலுவலகத்திற்கு முன்பாக மற்றுமொருவர் தீக்குளிக்க முயற்சித்திருந்தார்.

இந்தியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் கடந்த இரு மாதங்களில் ஆறு பேர் தீக்குளித்திருந்தனர். ஆனால் தற்போதைய முயற்சி பிரித்தானியாவின் இதயம் எனப்படும் பகுதியில் நடைபெறுகின்றது. அதாவது நாடாளுமன்றத்தின் வாசலில் அவர்கள் இறப்பை நோக்கி செல்வது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

பரமேஸ்வரனின் குடும்ப அங்கத்தவர்கள் ஆறு பேர் அண்மையில் வன்னியில் நடைபெற்ற மோதல்களில் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். அவரின் தகவலை உறுதிப்படுத்த முடியாது.

ஏனெனில் போர் நடைபெறும் பகுதிக்கு சிறிலங்கா அரசு ஊடகவியலாளர்களை அனுமதிப்பதில்லை. பல வாரங்களாக வன்னியில் உள்ள தமது உறவுகளுடன் தனக்கு தொடர்புகள் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவக்குழுவினர் நேற்று மாலை அவர்களை அகற்ற முற்பட்ட போதும் அவர்கள் அதனை மறுத்து விட்டனர். அவர்களுக்கு அண்மையாக நோயாளர் காவு வாகனம் மூன்று மருத்துவர்களுடன் 24 மணிநேரமும் தயாராக உள்ளதாக மருத்துவக் குழுவைச் சேர்ந்த பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

உணவும், நீரும் அருந்தாது இவ்வாறு இருப்பவர்கள் 10 நாட்களே உயிர்வாழ முடியும் என அதில் பணியாற்றும் இந்து குமரேந்திரன் என்ற மருத்துவர் தெரிவித்துள்ளார்.

உண்ணாநோன்பு என்பது எமது கலாச்சாரத்தில் பெரிதும் மதிக்கப்படும் நிகழ்வு என அவர் மேலும் தெரிவித்தார்.

இவர்களின் இந்த போராட்டத்தை பலர் லெப். கேணல் திலீபனின் போராட்டத்துடன் ஒப்பிடுகின்றனர். திலீபன், விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவர், அவர் 1987 ஆம் ஆண்டு உண்ணாநோன்பிருந்து மரணத்தை தழுவியிருந்தார்.

விடுதலைப் புலிகளை பிரித்தானியா தடை செய்துள்ளது. ஆனால் பெரும்பாலான தமிழ் மக்கள் அவர்களை விடுதலைப்போராட்ட வீரர்களாகவே பார்க்கின்றனர். சிறிலங்கா இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராக அவர்களால் மட்டுமே போராட முடியும் என நம்புகின்றனர்.

இந்த வாரத்தின் தொடக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாங்யிருந்த தமிழ் மக்களின் தேசியக்கொடியை காவல்துறையினர் அகற்ற முற்பட்டிருந்தனர். அது பாரிய அசம்பாவிதங்களை தோற்றுவித்திருந்தது. ஆனால் நேற்று மாலை கொடிகள் வைத்திருப்பதை காவல்துறை அனுமதித்திருந்ததை காண முடிந்துள்ளது.

தமிழ் மக்களையும் மனிதர்களாக மதியுங்கள் என்பதையே நாம் பிரித்தானியா அரசிடம் கேட்கின்றோம். அவர்கள் ஏதாவது செய்தே ஆக வேண்டும். ஏனெனில் யாரும் அதனை செய்வார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியாது என பரமேஸ்வரன் மேலும் தெரிவித்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உடனடி யுத்தநிறுத்தம் கோரி லண்டனில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி part 1

இலங்கையில் உடனடி யுத்தநிறுத்தம் கோரி லண்டனில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி - part 2

பர்மாவிடம் இருந்து பெறும் உதவி தொடர்பில் இலங்கை வெட்கப்பட வேண்டும் ‐ GTN ற்காக சுனந்த தேசப்பிரிய

ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு உதவுவதற்காக வந்த நாடுகளில் மியன்மார் அல்லது பர்மா என அழைக்கப்படும் நாடும் ஒன்று. அரச ஊடகங்களில் இந்த நாட்டின் உதவி தொடர்பில் மிகவும் உற்சாகமான கதைகள் வெளியிடப்பட்டன. இலங்கை உண்மையில் ஜனநாயகத்தை மதிக்கும் நாடு எனில் பர்மாவிடம் இருந்து பெறும் உதவி தொடர்பில் இலங்கை வெட்கப்பட வேண்டும் என சிரேஷ்ட ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய GTNற்கு அனுப்பி வைத்துள்ள தனது சிங்கள மொழியிலான விசேட கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
காரணம் நாம் கௌரவமாக மதிக்கும் சிறந்த நிர்வாகம் மற்றும் ஜனநாயகம் என்பன குறைந்தளவில் கூட இல்லாத நாடு என்ற பெயரை பர்மா பெற்றுள்ளது.
மனித உரிமை தொடர்பான பிரச்சினையில் இலங்கையுடன் இருக்கும் நாடுகளின் பட்டியலை எழுதினால் எமது நாட்டை குறித்து எமக்கு பெரும் துயரம் ஏற்படக்கூடும். ஜனநாயகத்திற்கு விரோதமாக பல தசாப்பதங்களாக அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள அந்த நாட்டின் உண்மையான தலைவியான ஹாங்சான் சுகி மற்றும் ஜனநாயகத்திற்காக போராட்டங்களை மேற்கொள்ளும் பௌத்த பிக்குகள் உள்ளிட்ட சிவில் அமைப்புகளுடனேயே உண்மையில் இலங்கை இருக்க வேண்டும் அன்றி பர்மிய அரசாங்கத்துடன் அல்ல.
எனினும் கவலைக்குரிய விடயம் என்னவெனில் ஜனநாயகத்திற்காக போராடும் பர்மிய நாட்டு மக்களுக்காக இலங்கை அரசாங்கம் ஒரு வாரத்தையில் கூட உதவி வழங்க தவறியுள்ளமையாகும்.
இலங்கை மீதுள்ள அன்பு காரணமாக மியன்மார் இலங்கைக்கு ஆதரவு வழங்கவில்லை. தனது ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்காக சர்வதேச தளத்தில் ஆதரவை பெற்றுக்கொள்ளும் நோக்கில் பர்மா இலங்கைக்கு ஆதரவு வழங்கி வருகிறது.
றொபேரட் முகாபேயின் சிம்பாப்வே முதல் காஸ்ரோவின் கியூபா வரையான சர்வாதிகார நாடுகள் தமது மக்கள் விரோத நிர்வாகத்திற்கு ஆதரவை பெறும் நோக்கிலேயே இலங்கைக்கு ஆதரவு வழங்கி வருகின்றன.
இந்த நாடுகள் எதிலும் சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் உரிய காலத்தில் தேர்தல்கள் நடத்தப்படுவதில்லை. ஊடகச் சுதந்திரம், நீதிமன்ற சுயாதீன தன்மை, அல்லது வேறு மனித உரிமைகளோ இந்த நாடுகளில் காணப்படவில்லை.
கடந்த வருடம் மியன்மாரில் பௌத்த பிக்குகள் தலைமையில் இடம்பெற்ற ஜனநாயக எழுச்சி குறித்து நாம் அனைவரும் அறிந்துள்ளோம். இந்தப் போராட்டம் இரும்பிலும் தீயிலும் அடக்கி ஒடுக்கப்பட்டது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் சிறையில் அடைக்கப்பட்டனர். எத்தனை பேர் எத்தனை வருடங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது எவருக்கும் தெரியாது. இவர்களில் சிலருக்கு 65 வருடம் வரை சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைகள் எங்கு நடைபெறுகின்றன. கைதுசெய்யப்பட்டவர்கள் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்ற விடயங்களை சரியான அறிந்தவர் எவருமில்லை.
இலங்கையிலும் முன்னர் இல்லாத வகையில் கருத்துகளை வெளியிடத் தடை காணப்படுகிறது இந்தத் தடையை உடைக்க கவிஞர்கள் சிலர் முன்னைப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆரம்பத்தை பெரும் அலையாக உருவெடுக்க இடமளித்து, அவர்களை ஊக்கப்படுத்துவது தற்போது முக்கியமானது. ஜே.வீ.பீயும் அரசாங்கமும் போட்டி போட்டு கொலைகளில் ஈடுப்பட்ட 1988‐1990 ஆம் ஆண்டுகளில் இவ்வறான கவிஞர்கள் புறப்பட்டனர் எனவும் சுனந்த கூறியுள்ளார்.
பின் குறிப்பு:
போர் நிறுத்த காலத்தில் எழுத்தப்பட்ட இரண்டு கட்டுரைகள் தொடர்பில் ஊடகவியலாளர் திஸ்ஸ நாயகத்திற்கு எதிராக இலங்கை அரசாங்கம் ஜனநாயக விரோத சட்டம் ஒன்றின் கீழ் வழக்கு தாக்கல் செய்துள்ளது.
இணையத்தளங்களில் இருந்து பதிவிறக்கப்பட்ட இரண்டு கட்டுரைகளை தம்வசம் வைத்திருந்ததற்காக மனித உரிமை சட்டத்தரணியான சாந்த பெர்ணாந்து கடந்த 27 ஆம் திகதி விமான நிலையத்தில் பொதிகள் சோதனையிடப்பட்ட பின்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தற்போது அவர் ஒரு மாதம் தடுப்பு காவல் உத்தரவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
காவற்துறை நடத்திய தாக்குதல் சம்பவம் தொடர்பான மனித உரிமை வழக்கில் ஆஜரான சட்டத்தரணி அமித ஆரியரத்னவின் அலுவலகம் எரியூட்டப்பட்டு, முழுமையாக சேதப்படுத்தப்பட்டுள்ளது.
தனது கணவரான சன்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தவர்களை தாம் அறிந்துள்ளதாகவும் பெப்ரவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் அதனை வெளிப்படுத்த உள்ளதாக, அரசாங்க பிரமுகர்கள் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு, மோர்னிங் லீடர் பத்திரிகையின் ஆசிரியை சோனாலி விக்ரமதுங்க விடுத்த கோரிக்கையை காவற்துறையினர் நிராகரித்துள்ளனர்.
மூன்று கொலை முயற்சிகளில் இருந்து உயிர் தப்பிய ரிவிர பத்திரிகையின் ஆசிரியர் உபாலி தென்னகோன் தற்காலிகமாக நாட்டில் இருந்து வெளியேற நேர்ந்துள்ளது. இந்த சம்பவங்கள் குறித்து விசாரணைகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாக அந்தப் பத்திரிகை தெரிவித்துள்ளது.
கடத்திச் செல்லப்பட்டு, காவற்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுடரொளி பத்திரிகையின் ஆசிரியர் சம்பந்தமாக நீதிமன்ற நடவடிக்கைளை எடுக்கும் முன்னர், நாட்டின் பொறுப்பு கூறக்கூடிய அதிகாரியான பாதுகாப்பு அமைச்சின் செயலாளார், சுடரொளி பத்திரிகை ஆசிரியர் ஒரு பயங்கரவாதி என உலகத்திற்கு தெரிவித்துள்ளார். அவர் இரண்டு மாத தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.பேராசிரியர் காங்காநாத் திசாநாயக்க கடத்திச் செல்லப்பட்டு, நாட்டில் இருந்து வெளியேறுமாறு அச்சுறுத்தப்பட்டுள்ளார்.

தவளைக்கு வைத்தியம் பார்க்கும் உலகம

தவளைக்கு வைத்தியம் பார்க்கும் உலகம்தமிழனுக்கு வைத்தியம் பார்க்க முன்வருமா?




உலகின் முதலாவது செயற்கை அங்கமொன்று பொருத்தப்பட்ட தவளை என்ற பெருமையை தென் ஆபிரிக்கத் தவளையொன்று பெறுகின்றது.நாயொன்றால் கடிக்கப்பட்டு ஒரு காலை இழந்த நிலையில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த இத் தவளைக்கு, தென் ஆபிரிக்க ஜொஹன்னஸ்பேர்க் நகரிலுள்ள மிருக வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு உலோகத்திலான செயற்கைக் கால் பொருத்தப்பட்டது.மேற்படி சத்திர சிகிச்சைக்கான ஏற்பாடுகளை மேற்கொண்ட வன வாழ்க்கை நிபுணர் ஆன் மியர்ன்ஸ் விபரிக்கையில், செயற்கைக்கால் பொருத்தப்படாவிட்டால் தவளை அசைய முடியாமல் இறக்க நேரிடும் என்பதை உணர்ந்தே இந்த சத்திர சிகிச்சையை மேற்கொள்ள முடிவு செய்ததாகக் கூறினார்.இந்த சத்திர சிகிச்சை வெற்றியளிக்குமா என்பது குறித்து முதலில் சந்தேகமாகவே இருந்தது. ஆனால் செயற்கைக் கால் தவளையின் இயல்பான அசைவுக்கு ஏற்ற வகையில் கச்சிதமாக பொருந்தியுள்ளமை எக்ஸ்ரே படங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து ஆறுதலாக உள்ளது என அவர் தெ?வித்தார்.மருத்துவமனை பராமரிப்பிலுள்ள தவளை தற்போது தேறி வருவதாக ஆன் மியர்ன்ஸ் கூறினார்.