இலங்கையில் இடம்பெற்று வரும் இன ஒடுக்குமுறைக்கு குறித்து ஐ.நா. பாதுகாப்புப் பேரவை பொறுப்புடன் செயற்பட வேண்டும்

இலங்கையில் இடம்பெற்று வரும் இன ஒடுக்குமுறைக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவை தனது பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டுமென பொறுப்புக்களை பாதுகாக்கும் சர்வதேச மையம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் அறிவிக்கப்பட்டிருந்த தற்காலிக போர் நிறுத்தம் நிறைவடைந்ததனைத் தொடர்ந்து இறுதி கட்ட இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறித்த அமைப்பு அறிக்கையொன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளது.

யுத்த சூனிய பிரதேசம், தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைகள் என்ற பாகுபாடு இன்றி அரசாங்க இராணுவம் விமான மற்றும் ஆட்லறித் தாக்குதல்களை மேற்கொண்டு வருவாதாக சுட்டிக்காட்டியுள்ளது.

2005ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கமைய அப்பாவி பொதுமக்களை பாதுகாக்க வேண்டியது பாதுகாப்புப் பேரவையின் தலையாய பொறுப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தைப் போன்றே தமிழீழ விடுதலைப் புலிகளும் பொதுமக்களை யுத்த சூனிய பிரதேசத்திலிருந்து வெளியேற விடாது தடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் பிரகடனத்தின் அடிப்படையில் இலங்கை விவகாரத்தில் தலையீடு செய்யும் உரிமை உலக நாடுகளுக்கு இருப்பதாக அந்த அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் கெரத் ஏவன்ஸ், முன்னாள் ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான பிரதி செயலாளர் ஜேன் என்கெலன்ட், ஐக்கிய நாடுகளின் முன்னாள் செயலாளர் நாயகம் ஜொவான் மென்டாஸ் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்த அறிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.

No comments: