மண்டூரில் விசேட அதிரடிப்படையினரால் வர்த்தகர் சுட்டுக்கொலை

gun_ak_-47.jpgமட்டக்களப்பு மண்டூர் பகுதியில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு வர்த்தகர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

மண்டூர் 1, வீரமுனை அம்பலாந்துறை வீதியிலேயே வியாழக்கிழமை இரவு 8.15 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தனது வர்த்தக நிலையத்திற்கு பின்புறமாகவுள்ள காணியில் மாட்டைக் கட்டிவிட்டு திரும்பிய போதே இவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இவர் மீது சரமாரியாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மார்பிலும் தொடைப்பகுதியிலும் குண்டுகள் பாய்ந்த நிலையில் அந்த இடத்திலேயே வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

விசேட அதிரடிபடையினர் இவரிடம் கடனுக்க பொருட்கள் கேட்டதாகவும் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துவந்த நிலையிலேயெ இவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்ப்ட்டுள்ளது.

நான்கு பிள்ளைகளின் தந்தையான விஸ்வலிங்கம் தம்பிராஜா (48 வயது) என்பவரே சுட்டுக் கொல்லப்பட்டவராவார்.

இவரது சடலம் நேற்றுக் காலை களுவாஞ்சிக்குடி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

No comments: