செங்கலடி பதுளை வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரு படையினர் பலி

செங்கலடி பதுளை வீதியில் மகோயா காவற்துறைக் காவலரனில் நிறுத்தாமல் சென்ற முச்சக்கர வண்டி மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு பாதுகாப்பு படையினர் உயிரிழந்துள்ளனர். முச்சக்கரவண்டிச் சாரதி படுகாயங்களுக்குள்ளானார்.

இச்சம்பவம் நேற்று மாலை (செப்25) 06.05 மணியளவில் இடம்பெற்றது. கடமையிலிருந்த ஊர்காவற்படைச் சிப்பாயே துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்டகொண்டதாகவும் காவலரனில் நிறுத்தாமல் சென்ற முச்சக்கரவண்டி வாடகை வண்டி எனவும் தெரியவருகிறது.

உயிரிழந்தவர்களில் ஒருவர் இராணுவச் சிப்பாய் எனவும் மற்றையவர் விமானப் படைச் சிப்பாய் எனவும், இவர்கள் சாதாரண உடையிலேயே பயனித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: