தமிழர்கள் பூண்டோடு அழியக்கூடிய அபாயம் நிலவுகிறது – ஐநா சபைக்கு பிரித்தானிய சட்டத்தரணிகள் அமைப்பு எழுத்து மூலம் அறிவிப்பு

]
தமிழர்கள் பூண்டோடு அழியக்கூடிய அபாயம் நிலவுவதாகப் பிரித்தானிய சட்டத்தரணி கரென் பார்கர் ஐக்கிய நாடுகள் சபையில் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அண்மையில் நடைபெற்ற விவாதமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இந்தக் கருத்தை வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்றுவரும் ஆயுதப் போராடட்ங்களின் காரணமாக மிக மோசமான வகையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

வன்னிப் பெருநிலப்பரப்பில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வாழும் மக்கள் தங்களது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத அல்லலுறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இவ்வறான ஓர் பின்னணியில் இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் அமைப்பு, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட தொண்டு நிறுவனங்களை வெளியேறுமாறு வலியுறுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்றுவரும் இன ஒடுக்குமுறை என்ற தலைப்பில் சர்வதேச கல்வி அபிவிருத்தி மற்றும் மனிதாபிமான சட்டத்தரணிகள் அமைப்பு ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.

No comments: