
தனது கணவர் காணாமல் போவதற்கு முதல் நாள் படையினர் தமது வீட்டில் இருந்து கணவரின் புகைப்படத்தை எடுத்துச் சென்றதாக மனைவி மனித உரிமை ஆணைக்குழுவில் செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தினர் பல தடவைகள் வீட்டுக்குச் சென்று அச்சுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 23 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான அருணமதிதுரை கிஷோர்குமார் என்பரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். கிஷோர்குமாரின் இரண்டு சகோதரர்கள் ஏற்கனவே தொடர் மரண அச்சுறுத்தல்களை அடுத்து காணாமல் போயினர் எனவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment