இந்தியாவின் கோடிப்புறத்தை சர்வதேச விளையாட்டு மைதானமாக மாற்ற இந்தியா விரும்பவில்லை - பிரணாப் முகர்ஜி

இலங்கைக்கான இராணுவ உதவியை நிறுத்துமாறு தமிழகக்கட்சிகள் இந்திய மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தி வரும் நிலையில் அதனை மன்மோகன்சிங்கின் அரசாங்கம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இலங்கையின் பாதுகாப்பு என்பது இந்தியாவின் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டது என்றும் அது தெரிவித்துள்ளது.

ராஜ்சபாவில் கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைத் தீவின் கேந்திர முக்கியத்துவத்தை

இந்தியா மறந்து விடக் கூடாது. இது இலங்கையின் பாதுகாப்புடன் மட்டும் சம்பந்தமுடையது அல்ல. இந்தியாவின் பாதுகாப்புடன் தொடர்பைக் கொண்ட ஒரு விடயமாகும்.

அண்மையில் கொழும்பு சென்ற மூன்று இந்திய ராஜதந்திரிகளின் நோக்கத்தை விபரித்த முகர்ஜி இலங்கையின் பாதுகாப்புத் தேவைகளை தாம் நிறைவேற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் வேறு இடங்களை நாட வேண்டாம் எனக் அவர்களைக் கேட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ன உதவிகள் செய்யப்பட வேண்டும். அவர்களின் பாதுகாப்புத் தேவை என்ன என்பது குறித்து ஒரு பொதுவான மதிப்பீடு இருக்க வேண்டும். ஏனெனில் இப்பிரச்சினை இந்தியாவுக்கு நெருக்கமான ஒன்றாகும். இந்தியாவின் கோடிப்புறத்தை சர்வதேச விளையாட்டு வீரர்கள் விளையாடும் விளையாட்டு மைதானமாக மாற்ற இந்தியா விரும்பவில்லை என்பது நிச்சயமான விடயமாகும். இலங்கையின நிலவரம் தொடர்பான மதிப்பீட்டில் இவ்விடயங்கள் யாவும் உள்வாங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

No comments: