இதுகுறித்து இயக்குநர் சீமான் கூறியதாவது:
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசியதற்காக என்னையும் தம்பி அமீரையும் கைது செய்ய வழக்குப் பதிவு செய்துள்ளார்களாம். இதுகுறித்து போலீசார் எனக்குத் தகவலும் கூறியுள்ளனர். அவர்கள் இப்போது என்னைக் கைது செய்ய வந்து கொண்டிருக்கிறார்கள்.
திரைப்பட இயக்குனர் சீமான் மற்றும் அமீர் ஆகியோர்; கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டின் முன்பாக செய்தி அறிந்த திரைப்பட இயக்குனர்கள், துறைசார்கலைஞர்கள், ஆதரவாளர்கள் பெருமளவில் குழுமியிருந்தனர். இவரது வீட்டிற்கு அருகாமையில் காவற்துறையினரும்; குழுமியிருந்தனர்.
சீமான் மற்றும் அமீர் ஆகியோர் வீட்டில் இருந்து வெளியே சென்று மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் கலந்துவிட்டு வீடு திரும்பும் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இயககுனர்கள் பாரதிராஜா, பாலுமகேந்திரா, இராம.நாராயணன் ஆகியோரும், ஏராளமான சினிமாத்துறை சார்ந்தோரும் குழுமியுள்ளதால் அங்கு ஒருவித பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு இருந்தது.
ராமேஸ்வரம் கூட்டத்தில் இன உணர்வுமிக்க சீமான் ஈழத்தமிழர்கள் குறித்தும், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் குறித்தும், விடுதலைப் புலிகள் அமைப்புக் குறித்தும் அவரது பல விடயங்களை உரையிலே வெளிப்படுத்தியிருந்தார். அவ்வுரை குறித்தே அவரைக் கைது செய்யவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை அதிமுகவின் தலைவி ஜெயலலிதா மற்றும் தமிழகாங்கிரஸ் கட்சியினர் சீமான், அமீர் ஆகியோரைக் கைது செய்யுமாறு வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.பாரதிராஜா கைதாவாரா?
அமீர், சீமான் இருவரும் கைது செய்யப்பட்ட பிறகு பாரதிராஜா மற்றும் சேரனையும் போலீசார் கைது செய்யக்கூடும் எனத் தெரிகிறது
No comments:
Post a Comment