கொட்டும் மழையில் மனித சங்கிலி: கருணாநிதி தொடங்கி வைத்தார்


ஈழத்தில் போரை நிறுத்த வலியுறுத்தியும், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும் அனைத்துக்கட்சிகள் சார்பில் மாபெரும் மனித சங்கிலி அணிவகுப்பு இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் கன மழையின் மத்தியில் நடைபெற்றது.


சென்னை மாட்ட ‌‌ட்சிர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி ணிவகுப்பை தொடங்கி வைத்தார்.
ஈழத்தில் அப்பாவி தமிழர்கள் சிறீலங்கா படையினரால் கொலை செய்யப்படுவதை கண்டித்தும், ஈழத்தில் அமைதி ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வற்புறுத்தியும், அனைத்துக் கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வற்புறுத்தியும் இன்றைய போராட்டம் நடைபெற்றது.


கடந்த 21ஆம் நாள் நடைபெறவிருந்த இந்த மனித சங்கிலிப் போராட்டம் கன மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இன்றும் அடை மழையின் மத்தியில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

http://www.pathivu.com/uploads/images/2008/manitha_sankili_chennai_3.jpg


இன்று மாலை 3:00 மணிக்கு தொடங்கிய மனித சங்கிலிப் போராட்டம் 5:00 மணிவரை நடைபெற்றது.


மனித சங்கிலி அணிவகுப்பை தொடங்கி வைத்த முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, திறந்த 'ஜீப்' ஊர்தி மூலம் மனித சங்கிலி நடைபெறும் இடங்களை சென்று பார்வையிட்டார்.
மாவட்ட ட்‌‌சியர் அலுவலகம் முதல் அண்ணா சிலைவரை, வடசென்னையை சேர்ந்தவர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள், சட்டவாளர்களுடன் அமைச்சர் ஆற்காடு வீராசாமி கலந்துகொண்டார்.


அண்ணாசிலை முதல் கிண்டிவரை, மாணவர்கள் மற்றும் பா...வினர் ணிவகுப்பில் ங்கேற்றுள்ளனர். அவர்களுடன் அமைச்சர்கள் துரைமுருகன், .பொன்முடி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

http://www.pathivu.com/uploads/images/2008/manitha_sankili_chennai_1.jpg


தேனாம்பேட்டையில் இருந்து கிண்டி மேம்பாலம் வரை சனநாயக முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜெகத்ரட்சகன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர்.
கிண்டி முதல் தாம்பரம் வரை, திரைப்பட துறையினர் மற்றும் தென்சென்னையை சேர்ந்தவர்களுடன் அமைச்சர் மு..ஸ்டாலின் ங்கேற்றுள்ளார்.
தாம்பரம் முதல் சிவானந்த குருகுலம் வரை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தினருடன் ஆலந்தூர் பாரதி ள்பட ல்வேறு முக்கியபிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
சிவானந்த குருகுலம் முதல் செங்கல்பட்டு வரை வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுடன் அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம்,

http://www.pathivu.com/uploads/images/2008/manitha_sankili_chennai_2.jpg ..வேலு ஆகியோரும், செங்கல்பட்டு முதல் பிறமாவட்டங்களை சேர்ந்தவர்களுடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, .பெரியசாமி ஆகியோரும் ங்கேற்று‌‌ள்ளனர்.
இந்த மனிதச்சங்கிலி அணிவகுப்பில் பல்வேறு கட்சிகளும், அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் உள்பட பல்வேறு சங்கங்களும் கலந்துகொண்டுள்ளனர்.


தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் தலைமையில் அந்தக் குழுவில் அங்கம் வகிக்கும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இன்றைய மனித சங்கிலியில் பெரும் திரளாகக் கலந்துக் கொண்டார்கள்.


திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன், இந்திய பொதுவுடமைக் கட்சியின் தலைவர்கள் என அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சிகள், மற்றும் அமைப்புக்களின் தலைவர்கள் தமது தொண்டர்களுடன் பெருமளவில் இன்றைய மனித சங்கிலிப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

No comments: