செப்30 இல்சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணும்படி இந்திய மத்திய அரசை வலியுறுத்தி, எதிர்வரும் செப்டம்பர் 30ல் சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிவித்துள்ளார். சென்னையில் இன்று ஊடகவியவியலாளர்களிடம் அவர் இதனை அறிவித்துள்ளார்.

ஈழத்தமிழர் பிரச்சனை தொடர்பாக 1985ம் ஆண்டு பல்வேறு பகுதிகளில் கருணாநிதி பேசிய பேச்சு ஒரு நூலாக வெளியிடப்பட்டுள்ளது. அதில், 'தமிழர்களுக்கு ஒரு நாடு, அது தமிழீழ நாடு' என்று கருணாநிதி கூறியிருக்கிறார்.

இந்த பிரச்சனை தொடர்பாக 5 உறுதிமொழிகளையும் அவர் அளித்துள்ளார். தமிழீழம் மலர ஆதரவு, தமிழர்களுக்கு நிலையான உரிமை, நிரந்தர பாதுகாப்பு, ஈழத்தமிழர்களுக்கு அடைக்கலம் தரும் கடமையிலிருந்து தவற மாட்டோம், தமிழினத்தை பாதுகாக்க எந்த தியாகத்துக்கும் தயார் என்பதே கருணாநிதி அளித்த 5 உறுதிமொழிகள்.

ஆனால் இப்போது ஈழத்தமிழர் பிரச்சனையில் கருணாநிதி மவுனம் சாதிக்கிறார். இந்த நிலையில் இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணும்படி மத்திய அரசை வலியுறுத்தி, எதிர்வரும் 30ம் திகதி சென்னையில் இலங்கை தூதரகம் முன்னால் தனது
தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் ராமதாஸ் கூறியுள்ளார்.

No comments: