குறித்த ஒரு பகுதி மக்களைப் பிரித்துப் பார்ப்பது அநியாயம்: மேலக மக்கள் முன்னணி


ஐந்து வருடங்களுக்குள் கொழும்புக்கு வந்து தமிழர்களை மட்டும், விசேட பொலிஸ் பதிவுக்கு ஆளாக்கியிருக்கின்றமை இலங்கை அரசியலமைப்புக்கு முரணானது எனவும், குறித்த ஒரு பகுதி மக்களை மாத்திரம் பிரித்துப் பார்ப்பது நியாயமான செயற்பாடில்லையெனவும் மேலக மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

அடாவடித்தனமான ஆட்சியை நடத்தும் எந்தவொரு அரசாங்கமும் நிலைத்து நின்ற சரித்திரம் இல்லையென மேலக மக்கள் முன்னணியின் மேல்மாகாணசபை உறுப்பினர் பிரபா கணேசன் கூறினார். பொலிஸ் பதிவுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையங்களுக்குச் சென்ற மேலக மக்கள் முன்னணியின் பிரமுகர்கள் பதிவுகளை மேற்கொள்ளச் சென்ற பொதுமக்களுடன் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர்.

மனித நேயத்திற்கு அப்பாற்பட்டு ஒருசிலரை மாத்திரம் வேறுபடுத்திக்காட்டும் இந்த நடவடிக்கைகளை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றிருப்பதாக மனோ கணேசன் கூறியுள்ளார். வெறுமனே கண்டனம் தெரிவித்துவிட்டு மௌனியாக இருக்கப் போவதில்லையென அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: