வெளி நபர்களும், வெளி சக்திகளும் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது - நோர்வே


இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு அமுல்படுத்தப்படும் போது, சிறந்த பொருளாதார முகாமைத்துவம் அதற்கான வசதிகளை ஏற்படுத்தும் என இலங்கைக்கான நோர்வே தூதுவர் டோரி ஹட்ரீம் தெரிவித்துள்ளார்.

எந்தத் தீர்வு திட்டமானாலும் அதற்கு அனைத்து இனகுழுக்களினதும் ஆதரவு கிடைக்க வேண்டும். இலங்கையின் பொருளாதார பிரச்சினைகளை விட அரசியல் பிரச்சினையே மிகவும் முக்கியாமான பிரச்சினை எனவும் நோர்வே தூதுவர் கூறியுள்ளார்.

இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கும் சமாதானத்தை கட்டியெழுப்பும் முயற்சிகளுக்கும் நோர்வே தொடர்ந்தும் தனது ஒத்துழைப்புகளை வழங்கும். வெளி நபர்களும், வெளி சக்திகளும் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில் கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே நோர்வே தூதுவர் இந்த கருத்துக்களை தெரிவிததுள்ளார்.

No comments: