தொடரும் வெள்ளைவான் கடத்தல்கள் - ஏறாவூரில் மீனவர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்.

whait_van.jpgமட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தளவாய் பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை காலை தமிழ் குடும்பஸ்த்தர் ஒருவர் வெள்ளைவான் ஆயுததாரிகளினால் கடத்திச்செல்லப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

சனிக்கிழமை காலை 11.00 மணியளவில் தளவாய் பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான கே.கணேசமூர்த்திஎன்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு கடத்திச்செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடலில் மீன்பிடித்துவிட்டு கடற்கரையில் தனது வலைகளை உலர்த்திக்கொண்டிருந்தபோது வெள்ளைவான் ஆயுததாரிகளில் இவரை வலுக்கட்டாயமாக இழுத்து கடத்திச்சென்றதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை தளவாய் பிரதேச பிள்ளையான்குழு பொறுப்பாளர் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்தே இந்த கடத்தல் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: