வவுனியாவில் இரு யுவதிகள் சுட்டுக்கொலை

வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் யுவதிகள் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

திங்கட்கிழமை இரவு 8.45மணியளவில் வைரவபுளியங்குளம்,வைரவர் கோவில் வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்திலேயே இவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த, இவர்களில் ஒருவர் வவுனியா வங்கி ஒன்றில் கடமையாற்றிவந்ததாகவும் மற்றவர் தனியார் வைத்தியசாலையில் தாதியாக கடமையாற்றிவந்ததாகவும் அப்பகுதி தகவல்கள் தெரிவித்தன.

இவர்கள் தங்கியுள்ள வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற ஆயுததாரிகள் இவர்களை அழைத்து சரமாரியான துப்பாக்கிசூட்டை நடத்திவிட்டு தப்பிச்சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்டவர்களின் சடலம் இரண்டும் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்

No comments: