பிரித்தானியாவின் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினருடன் டென்மார்க் சமூக லிபரல் கட்சி முக்கியஸ்தர் தர்மகுலம் சந்தித்து வன்னி நிலமை பற்றி எடுத்துரைப்பு.


டென்மார்க் சமூக லிபரல் கட்சியின் வருடாந்த மகாநாடு நுய்பொ (Nyporg) நகரில் 20.09.2008 ஆம் திகதி காலை 10 க்கு ஆரம்பமானது

இவ் மகாநாட்டில் சிறப்பு அதிதியாக பிரித்தானியாவின் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரும் ஐரோப்பிய நாடாளுமன்றின் லிபரல் சனநாயக கட்சி குழுத் தலைவருமாகிய கிரகம் வற்ஷன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

இவருக்கும் டென்மார்க் சமூக லிபரல் கட்சியின் பிரமுகர் தர்மகுலசிங்கத்திற்கும் இடையே நடந்த சந்திப்பில் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் வெளியேற்றத்தினைத் தொடர்ந்து அழிவின் விளிம்பில் நிற்கதியாகிநிற்கும் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் வன்னிமக்களின் அவலத்தினையும் சனநாயக ஸ்திர தன்மையற்ற நிலையினையும் எடுத்துக்கூறிய தர்மகுலசிங்கம் இலங்கையில் தமிழர் ஒரு முழுமையான வரலாறு ஆங்கிலப்பதிப்பையும் கையளித்தார்.

No comments: