தமிழர் சுயநிர்ணய உரிமை, தமிழர் தாயகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பிரித்தானிய தொழில்கட்சி மாநாட்டில் உரை


பிரித்தானிய தொழில்கட்சியின் தமிழர்களின் தலைவர் சென்.கந்தையா அவர்கள் திங்கட்கிழமை பிரித்தானிய தொழில்கட்சியின் மாநாட்டில் உரையாற்றுகையில் தொழில்கட்சி, சிறீலங்கா அரசாங்கம் தமிழர்களுக்கு எதிராக அண்மைக்காலமாக மேற்கொள்ளும் அதிகரித்த மனித உரிமை மீறல்களையும்

மற்றும் சிறீலங்காவின் அரசியல் கொள்கைகளில் வெற்றிபெற்று அரசமைக்கும் அரசாங்கங்கள் மற்றும் அவற்றின் யாப்புமுறை தமிழர்களின் பிரதிநிதித்துவம் இன்றி இருப்பதுவுமே சிறீலங்கா இனமுரண்பாடுட்டுக்கு முக்கிய காரணமாகும் என்பதை புரிந்துகொள்ளவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ் மாநாட்டில் சுமார் 10 000 ற்கு மேற்பட்ட பிரமுகர்கள் பங்கேற்றிருந்தமையும் இவ்மாநாடு பி.பிசி தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பட்டுட்டதுவும் குறிப்பிடத்தக்கது.

அவரது உரையில் குறிப்பிட்ட விடயங்களாவன:
வடக்கில் சிறீலங்கா அரசாங்கம் இனப்படுகொலைகளை புரிவதாகவும் இதனால் பொதுமக்கள் பெருமளவு இன்னலுறுகின்றார்கள் உள்ளுரில் இடம்பெயர்ந்துள்ளார்கள் உணவு, மருந்து, பாதுகாப்பான உறைவிடம் இன்றி அல்லலுறுகிறார்கள்.

உலகத்தின் கண்கள் அதைபார்க்காமல் இருக்கின்றன ஒருதர் கூட அவர்களின் கதைகளை கூறவில்லை.

சிறீலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் இராணுவ அடிப்படையிலேயே தீர்வு காணமுனைகிறது. உண்மையில் அங்கு நடைபெறுவது அரசியல் பிரச்சனையா? எமது தமிழர்கள் நீதிக்காகவும் சமஉரிமைக்காகவும் அமைதீயான முறைகளில் போராடினார்கள் எமக்கு வழங்க வேண்டிய நீதிக்கு பதிலாக எமது நீதிக்கான குரல்கள் அவை ஆயுதமுனையில் அடக்கப்பட்டன இதனையடுத்தே தமிழர் தாயகத்துக்கான குரல்கள் மேலும் மேலும் வலுப்பெறத்தொடங்கின. ஆயுதமுனையில் அடக்கமுற்பட்ட எமது நீதிக்கான குரல்களுக்கு வேறுமார்கமின்றியே ஆயுதமேந்தி போராடவேண்டிய நிர்ப்பந்தமேட்டது. கடந்த 30 வருடங்களில் சுமார் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் தமது உயிர்களை இழந்துள்ளார்கள்.

ஆகவே நான் உங்களை கேட்பது நாட்டின் வடக்கு கிழக்கில் சிறீலங்கா அரசால் அதிகரித்துவரும் மனித உரிமை மீறல்களை முடிவுக்கு கொண்டுவருவதற்கான தீர்வுக்கு ஆதரவு வழங்குங்கள் எனவும் சிறீலங்காவின் அரசியல் கொள்கைகளில் வெற்றிபெற்று அரசமைக்கும் அரசாங்கங்கள் மற்றும் அவற்றின் யாப்புமுறை தமிழர்களின் பிரதிநிதித்துவம் இன்றி இருப்பதுவுமே சிறீலங்கா இனமுரண்பாடுட்டுக்கு இதுவே முக்கிய காரணமாகும் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும் தமிழர்கள் தமது சுயநிர்ணய உரிமையை பேணுவது தேவையானதும் அவசியமானதுவும் எனவும் அதனை பாதுகாப்பதற்கு சிறீலங்காவில் தமிழர் தேசம் அமையவேண்டும் என்பதையும் பிரித்தானிய தொழில்கட்சி உணர்ந்து கொள்ளவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இம்மாநாட்டில் பிரித்தானிய வெளிவிவகார செயலர் டேவிட் மில்பாண்ட், பிரித்தானிய சர்வதேச அபிவிருத்திநடவடிக்கைகளின் செயலர் டக்லஸ் அலெக்ஸ்சாந்தர், ஐரோப்பிய வர்த்தக ஆணையாளர் ஹொன் பீற்றர் மண்டெல்சன் மற்றும் மூத்த தொழில்கட்சி பிரமுகர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள், வர்த்தகபிரமுகர்கள், முன்னார் அமைச்சர்கள் ஆகியோரும் பங்கேற்றிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

No comments: