யாழில் இளம் வர்த்தகர் சுட்டுக் கொலை

gun_ak_-47.jpgயாழ் தென்மராட்சியில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒருவர் இனந்தெரியாத ஆயுத பாணிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

நாவற்குழி கைதடி செல்வ நகரைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான பொன்னையா குணசேகரம் பாஸ்கரன் (வயது 43) என்பவரே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

வர்த்தகரான இவர் நேற்றுப் பிற்பகல் 2.15 மணியளவில் கைதடிக்குச் சென்று பொருட்களைக் கொள்வனவு செய்துகொண்டு வியாபாரநிலையம் நோக்கிச் சென்று கொண்டிருந்த போதே ஆயுதபணிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சம்பவ இடத்துக்குச் சென்ற சாவகச்சேரி நீதிபதி அ.பிரேம்சங்கர் மரணவிசாரணைகளை மேற்கொண்டபின் சடலத்தை பிரேதபரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து நேற்று மாலை 6.40 மணியளவில் இந்தச் சடலம் சாவகச்சேரிப் பொலிஸாரால் யாழ்.வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.

இன்று நடைபெறும் பிரேத பரிசோதனைகளையடுத்து சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

No comments: