எனினும் அங்கிருந்த ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரையும் பிடித்து பிரித்து விட்டுள்ளனர். இதன்போது ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்கள் விடுதலை முன்னணிப் பாராளுமன்ற உறுப்பினர்களும் அநுர குமார திசநாயக்காவுக்கு ஆதரவளித்தனர்.
எனினும் இந்தச் சச்சரவின் போது ஆச்சரியத்தக்க விதத்தில் பசில் ராஜபக்சவுக்கு அரசாங்க தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் ஆதரவளிக்காமல் அமைதி காத்து இருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஸ ஜனாதிபதியின் சகோதரர் என்பதும் நிழல் ஜனாதிபதி என்பதும் குறிப்பிடத்தக்கது.பசில்ராஜபக்சவும் ஜேவிபி உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்காவும் பாராளுமன்றத்தில் குத்துச்சண்டை
தேசத்தைக் கட்டியெழுப்பவதற்கான அமைச்சர் பசில் ராஜபக்சவும் மக்கள் விடுதலை முன்னணிப் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசநாயக்காவும் பாராளுமன்றத்தில் கோப் தொடர்பான கூட்டத்தின் போது கட்டிப் புரண்டு மோதிக் கொண்டனர். கண்கண்ட சாட்சியங்களின்படி, இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒருவர் மீது ஒருவர் பாய்ந்து குத்துச் சண்டை வீரர்கள் போல மோதிக் கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment