திருகோணமலையில் இருவர் சுட்டுக் கொலை


திருகோணமலையில் பிரபல மீன் வியாபாரியொருவரும், அவரது உதவியாளரும் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இனந்தெரியாத நபர்களினால் இந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

திருகோணமலை கண்டி வீதி நான்காம் கட்டையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

டபிள்யூ.ஜீ. பிரசன்ன புஸ்பகுமார (41) மற்றும் பிரின்ஸ் உதயகுமார (38) ஆகியோரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வீட்டில் இருக்கும் போது ரி-56 ரக துப்பாக்கிகளைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No comments: