பொலநறுவையில் சிவில் பாதுகாப்பு படைவீரர் சுட்டு இளைஞர் பலி


பொலநறுவை மெதிரிகிரிய பிரதேசத்தில் சிவில் பாதுகாப்புப் படைவீரர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 16 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபமாகக் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தின் போது ஒரு சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரும், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் காயமடைந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

பொலிஸாரது உத்தரவை மீறி மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இந்த இந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் காரணமாக கிராம மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் கடும் மோதல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த மோதல்களின் காரணமாக இரண்டு பொது மக்களும், இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் காயமடைந்துள்ளனர்.

அப்பாவிப் பொதுமக்கள் மீது சிவில் பாதுகாப்புப் படையினர் தாக்குதல் மேற்கொண்டு வருவதாக கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

No comments: