இந்தியாவின் இரட்டை வேடம் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதற்குச் சமன்: வினோநோகராதலிங்கம் எம்.பி


இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் பங்கு இன்றியமையாதது என இருந்த போதிலும் எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போல இரட்டை வேடம் போடுகின்ற இந்தியாவை நம்பிப் பயன் இல்லை என த.தே.கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.

சர்வதேசத்தின் பக்கச்சார்ப்ற்ற தன்மை இலங்கைப் பிரச்சினை தொடர்பில் கடைப்பிடிக்கபட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

யுத்தத்தால் இடம் பெயர்ந்துள்ள அப்பாவிப் பொதுமக்களின் நிலைமைகள் மற்றும் தேசிய, சர்வதேச நடவடிக்ககைள் எவ்வாறு அமைந்துள்ளன எனக் கேட்டதற்குப் பதிலளிக்கையிலேயே வினோ நோகராதலிங்கம எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார்

மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது:

தினமும் ஏதிலிகளாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற எமது தமிழ்ச் சமூகம் வாழவே வழியற்றவர்களாக உணவுக்கும் உறங்குவதற்கும் அல்லாடிக் கொண்டிருக்கினறது. இதில் சிறுவர்களினதும் குழந்தைகளினதும் நிலைகள் மிக மிகப் பரிதாபமானதாகும்.

யுத்தத்தின் நடுவில் சிக்கித் தவிக்கும் மக்களின் நிலை குறித்து அலட்டிக் கொள்ளாத சிங்கள அரசு லொறிகளில் உணவு அனுப்புவதாகப் படம் பிடித்து சர்வதேசத்துக்குக் காட்டிக் கொண்டிருக்கிறது. வன்னிக்கு அனுப்பப்படுகின்ற உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியத் தேவைகள் பாதிக்கப்பட்டுள்ள மக்களைச் சென்றடையவில்லை. இராணுவத்தினரின் கெடுபிடிகளால் வன்னிக்குள் உணவு லொறி அனுமதிக்கப்படுவதில்லை

சுமார் நான்கு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழுகின்ற வன்னிப் பிரதேசத்ததக்கு நூற்றுக்காணக்கான லொறிகளில் அத்தியாவசிப் பொருட்களை அனுப்பினாலும் அது போதுமானதாக இருக்காது. ஆனால், அரசு ஐந்தும் பத்தும் என உணவு லொறிகளை அனுப்பிக் கொண்டிருக்கின்றது.

அகதிகளை வைத்து ஏமாற்றி அரசியல் செய்து கொண்டிருக்கின்றது சிங்களப் பேரினவாத அரசு.

இலங்கைத் தமிழர் பிரச்சினை மற்றும் வன்னி நிலைவரங்கள் குறித்து சர்வதேச பிரதிநிதிகள் பக்கச்சார்பு காட்ட வேண்டாம் என்று த.தே.கூட்டமைப்பினா கேட்டுக் கொள்கிறது. ஏனெனில் அண்மைக்காலமாக யுத்த நிலைவரம் தொடர்பில் இங்கு வருகின்ற சர்வதேசப் பிரதிநிதிகள் அரசின் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமையவே வந்து செல்கின்றனர். அத்துடன் அரசுக்கு சாதகமான அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்படுகின்றன.

சர்வதேசத்துக்கு உண்மை புரிய வேண்டுமானால் பக்கச்சார்பற்ற விதத்தில் சர்வதேசப் பிரதிநிதிகளின் வருகை அமைய வேண்டும். யுத்தப் பிரதேசங்களுக்குச் சென்று நிலவரங்களை நேரில் அறிந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

இலங்கைத் தமிழர் விடயத்தில் இந்தியா இரட்டை வேடம் போடுகின்றது. யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்றும் பேச்சுக்கு செல்ல வேண்டும் என்றும் ஊடகங்களுக்கு அறிவிக்கின்ற இந்தியா, இலங்கை அரசுக்கு ஆயுத உதவியையும் ஆட்புல உதவியையும் அளித்து வருகின்றமை எமது தமிழினத்தையே ஏமாற்றுகின்ற செயலாகும்.

இனப்பிரச்சினை தொர்பில் இந்தியாவின் தலையீடு மிக மிக இன்றியமையாதது என்பதே த.தே.கூட்டடமைப்பின் நிலைப்பாடாக இருக்கிறது. ஆனால், இந்தியாவின் அண்மைக்கால நிலைப்பாடுகள் எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போல் அமைந்திருக்கிறது.

தமிழக அரசியல் தலைவர்களினதும் அவர்களது ஆதரவாளர்களினதும் இலங்கைத் தமிழர் மீதான உணர்வலைகள் மகத்தானவை. அதற்காக நாம் கடமைப்பட்டுள்ளோம். தமிழகத்தில் இலங்கைத் தமிழருக்காக ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடைபெறுகின்றன.

ஆனால், கருணாநிதி இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் எவ்வித நடவடிக்கையையும் எடுத்ததாகத் தெரியவில்லை. அவருக்கு அதிகாரங்கள் இருந்தும் அதனைச் செய்யத் துணியவில்லை. கருணாநிதி இலங்கைத் தமிழர்கள் குறித்து சிந்திக்கப் போவதில்ல. தனது அதிகாரத்தையும் கட்சியின் செல்வாக்கையும் காப்பாற்றிக் கொள்ளும் எண்ணமே அவருக்கு இருக்கிறது.

இந்நிலையில் கருணாநிதியையோ அல்லது இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருக்கின்ற இந்தியாவையோ நாம் நம்பிப் பயன் இல்லை. அவர்களை நம்பி ஏமாறுவதை விட எமது பிரச்சினையை நாமே தீர்த்துக் கொள்வதே சிறந்தது.

No comments: