யால பகுதியில் படையினர் விடுதலைப்புலிகள் தாக்குதல்

அம்பாந்தோட்டை யாலப் பகுதியின் மூன்றாவது வலயப் பகுதியில் சிறிலங்காப்படையினரை இலக்குவைத்து விடுதலைப்புலிகள் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளனர்.


இதில் சிறிலங்காப்படையினர் ஒருவர் பலியாகியுள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.


காயமடைந்த படையினர் புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதலையடுத்து சிறிலங்காப்படையினர் அந்தப் பகுதியில் தேடுதலை மேற்கொண்டுள்ளனர்.

No comments: