கொழும்பு புறக்கோட்டையில் குண்டு வெடிப்பு


கொழும்பு புறக்கோட்டைப் பகுதி மல்வத்தைச் சந்தியில் இன்று பி.ப. 12.30 மணியளவில் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மல்வத்த வீதியில் உள்ள வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் வண்டியொன்றில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெறுள்ளது.

இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்தாகவும், ஆறு வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

துறைமுகத்திலிருந்து 100 மீற்றர் தொலைவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

சம்பவத்தில் காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

சம்பவ இடத்தில் பொலிசார் தீவிர தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளதாகவும், குறித்த பிரதேசத்தில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் புறக்கோட்டையிலிருந்து கிடைக்கும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

No comments: