தமிழருக்காக குரல் கொடுக்க தனி ஈழம் தோன்ற வேண்டும் -மலேசியாவில் தொல் திருமாவளவன்
ஈழ நாட்டில் வன்னி கிளிநாச்சி மண்டலத்தில் ஏறக்குறைய
3 இலட்சம் தமிழர்கள் வாழ்க்கை அடிப்படைத் தேவைகளான குடிநீர் இணவு இருப்பிடம் சுகாதார வசதி
கல்வி ஏதுமின்றி அல்லல்படுகின்ற அவல நிலையில் தமிழ் மக்கள் தலையில் குண்டு மழை பொழிகின்ற சிங்களவரின் பக்கத்தில் இந்திய இராணுவத்தினரும் இருக்கின்றனர்.
போரினால் மடிகின்றவர்கள் ஒருபக்கம் இருக்க பசிப் பிணியால் மாண்டு
போகின்ற தமிழர்களின் எண்ணிக்கை இன்னொரு பக்கம் அதிகரிக்கின்றது.
இந்த நிலையில் தமிழனுக்காக குரல் கொடுக்க வேண்டிய தரப்பிலிருந்தே
வஞ்சக காய் நகர்த்தப்படுகின்றது. இதற்கெல்லாம் ஒரே தீர்வு
தமிழனுக்கென்றுதனி அதிகாரம் கொண்ட நாடு தோன்ற வேண்டும்
என்று நேற்று கோலாலம்பூரில் நடைபெற்ற மலேசியததமிழர்
தேசிய முன்னேற்றக் கழக "தமிழர் கலைவிழா"வில் சிறப்புரையாற்றிய
தமிழக விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர்
தொல்.திருமாவளவன் கூறினார்.
இன்று உலகம் முழுக்க தமிழன் அறியப்படுகிறான் என்றால் அதற்கு
ஈழத்தமிழர்தம் சுதந்திரப் போர் தான் காரணம். பழந்தமிழர் வீரத்தை
இன்று நிறுவுகின்ற ஈழ நாட்டு மறவர்கள் படைக்கின்ற தோற்றுவிக்கின்ற
மாண்பில் துப்பாக்கி பிடிக்கின்றஆற்றல் இல்லா விடினும் நானும் அதில்
பங்கெடுக்கின்றேன்.
பூச்சொங், 12 வது மைல், ராக்கான் மூடா அரங்கில் நடைபெற்ற
இந்நிகழ்ச்சியில்கூட்டரசுப்பிரதேச துணையமைச்சர் டத்தோ மு.சரவணன்,
பிபிபி கட்சியின் குணா, சிங்கைத்தமிழ்மறையான் இணையர் மற்றும்
பல பெருமக்கள் கலந்து கொண்ட இவ்விழாவில் உள்நாட்டு அரசியல்கட்சி
- பொது இயக்கங்கள் என்ற எல்லைகளை எல்லாம் கடந்து தமிழ்
உணர்வோடு ஏராளமானோர் கலந்து கொண்டது எழுச்சியுடன்
காணப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment