வவுனியா பஸ் தரிப்பிடத்திற்கு அருகாமையில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்

மோட்டார் சைக்கிளில் வந்த தற்கொலைக் குண்டுதாரி முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

வவுனியா பஸ்தரிப்பு நிலையத்திற்கு அருகில் இன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் எனக் கருதப்படும் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டு 9 பேர் கடும் காயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் 3 பெண் காவற்துறைச் சிப்பாய்கள் உள்ளிட்ட 4 காவற்துறையினரும் 3 இராணுவச் சிப்பாய்களும் காயம் அடைந்ததாக வவுனியா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் வாகனமொன்றை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments: