மட்டக்களப்பு சித்தாண்டி திகிலிவெட்டைப் பகுதியில் கருணா அணியின் முகாம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல்


மட்டக்களப்பு காட்டுப் பகுதியில் அமைந்துள்ள கருணா குழுவின் முகாமொன்றின் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரியவருகியது.

இந்தத் தாக்குதலில் கருணா குழுவின் ஒர் உறுப்பினர் கொல்லப்பட்டதுடன், எட்டு பேர் காயமடைந்துள்ளதாக மட்டக்களப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் கொல்லப்பட்டவரின் சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், காயம் அடைந்தவர்களும் அங்கு அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இராணுவம் கிழக்கை கைப்பற்றிய பின்னர் கருணா குழுவின் முகாம் மீது நடத்தப்பட்ட முக்கிய தாக்குதலாக இது கருதப்படுகின்றது.

அப்பகுதிக்கு வந்த குழுவொன்று மேற்படி அலுவலகம்மீது மேற்கொண்ட திடீர் தாக்குதல் காரணமாக அலுவலகத்தில் இருந்தக ருணா குழுவின் உறுப்பினரான கதிரொளி என்பவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதுடன், மேற்படி அலுவலகத்தில் இருந்த மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி தாக்குதலை நடாத்தியோர் அப்பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில நாட்களாக கருணா, பிள்ளையான் அணிகளிடையேயான மோதல்கள் கிழக்கில் மீண்டும் ஆரம்பமாகி உள்ள நிலையில் பிள்ளையானை கருணா குழுவின் பிரதித்தலைவர் பதவியிலிருந்து கருணா நீக்கியிருப்பதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டிருக்கிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள திகிலிவட்டைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரும் இணைந்து அமைத்திருந்த மினி முகாம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஏனையோர் தப்பியோடி விட்டனர். ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

கிரான் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட திகிலிவட்டைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் தமிழ் துணை இராணுவக் குழுவினரும் மினி முகாம் அமைத்திருந்தனர்.

இம்முகாம் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2:15 மணியளவில் விடுதலைப் புலிகள் அதிரடித் தாக்குதல் நடத்தினர். முகாமை தமது கட்டுப்பாட்டில் 15 நிமிடம் வரை வைத்திருந்து அங்கிருந்தவற்றினை முழுமையாக தாக்கியழித்துள்ளனர்.

இத்தாக்குதலின் போது சிறிலங்கா இராணுவம் மற்றும் துணை இராணுவக் குழுவைச் சேர்ந்த ஆறு பேர் கொல்லப்பட்டனர். ஏனையோர் தப்பியோடி விட்டனர்.

இதில் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட ஆயுத விவரம்:

ரி-56 ரக துப்பாக்கிகள் - 05

பிகே எல்எம்ஜி - 01

பிகே எல்எம்ஜி ரவைகள் - 100

ஏகே ரவைகள் - 200

ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

No comments: