யாழ் குடாநாட்டில் படையினரின் கெடுபிடிகளினால் அல்லலுறும் அப்பாவி தமிழ் மக்கள் - கஜேந்திரன் பொன்னம்பலம் எம்.பி


யாழ்ப்பாண குடாநாட்டில் பாதுகாப்பு காரணங்கள் என்ற போர்வையில் படையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் காரணமாக அப்பாவி தமிழ் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக யாழ் நகர வீதிகளில் செல்லும் பொதுமக்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

படையினரின் கட்டுப்பாட்டுக்குள் யாழ் நகரம் காணப்பட்ட போதிலும் மக்கள் எவ்வித சுதந்திரத்தையும் அனுபவிக்கவில்லை எனவும், மக்கள் பெரும் கெடுபிடிகளை எதிர்நோக்குவதாகவும் சண்டே லீடர் வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும், பெரும் எண்ணிக்கையிலான படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

திடீரென மக்கள் குழுக்களாக பாடசாலைகள் மற்றும் பொது இடங்களுக்கு அழைக்கப்பட்டு தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளியே செல்ல வேண்டுமானால் இரண்டு வாரங்களுக்கு முன்னர் இராணுவத்தினரிடம் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும், ஒரு நாள் படகில் பயணிக்க வேண்டிய நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உண்மையில் யாழ்ப்பாண மக்கள் ஓர் திறந்வெளி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு அரசாங்கத்தின் ஆழ ஊடுருவித் தாக்கும் படைப்பிரிவினரால் மரண அச்சுறுத்தல் நிலவுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொலைபேசி அழைப்புக்கள் நகரீகமற்ற முறையில் ஒட்டுக் கேட்கப்படுவதாவ அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments: