இலங்கைத் தீவில் வாழும் மொத்த தமிழ்இனத்தின் எதிர்கால இருப்புக்கான அச்சுறுத்தல்:நிலவரம்

இன்று வன்னியில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் அங்கு வாழும் மக்களுக்கு மட்டுமான அச்சுறுத்தல் அல்ல. இலங்கைத் தீவில் வாழும் ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் எதிர்கால இருப்புக்குமான அச்சுறுத்தல்

என சுவிசில் இருந்து மாதம் இருமுறை வெளிவரும் நிலவரம் பத்திரிகை 26.09.08 ல் தனது ஆசிரியர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

சிறி லங்கா அரசின் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக இன்று வன்னி மண்ணிலே தோற்றுவிக்கப் பட்டுள்ள மனித அவலம் புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களிடையே ஒரு வகை ஆவேசத்தையும் ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்தியிருக்கின்றது. இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயருமாறு நிர்ப்பந்திக்கப் பட்டமை அவர்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை வழங்காமை, மருத்துவம் உட்பட அடிப்படை வசதிகளை மறுத்து வருகின்றமை, உள்ளூர் மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மக்களுக்கு உதவுவதைத் தடுத்து அவற்றை அப்பிராந்தியத்தில் இருந்து வெளியேற்றியமை, விமானக் குண்டுவீச்சுக்குளையும் இடைவிடாத எறிகணை வீச்சுக்களையும் பொதுமக்களின் குடியிருப்புக்குளை இலக்கு வைத்து நடாத்திக் கொண்டிருக்கின்றமை என்பன ஈழத் தமிழர்கள் மனங்களில் இத்தகைய உணர்வுகள் தோன்றக் காரணமாயின.

சிறி லங்கா அரசின் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக இன்று வன்னி மண்ணிலே தோற்றுவிக்கப் பட்டுள்ள மனித அவலம் புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களிடையே ஒரு வகை ஆவேசத்தையும் ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்தியிருக்கின்றது. இரண்டு
இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயருமாறு நிர்ப்பந்திக்கப் பட்டமை அவர்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை வழங்காமை, மருத்துவம் உட்பட அடிப்படை வசதிகளை மறுத்து வருகின்றமை, உள்ளூர் மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மக்களுக்கு உதவுவதைத் தடுத்து அவற்றை அப்பிராந்தியத்தில் இருந்து வெளியேற்றியமை, விமானக் குண்டுவீச்சுக்குளையும் இடைவிடாத எறிகணை வீச்சுக்களையும் பொதுமக்களின் குடியிருப்புக்குளை இலக்கு வைத்து நடாத்திக் கொண்டிருக்கின்றமை என்பன ஈழத் தமிழர்கள் மனங்களில் இத்தகைய உணர்வுகள் தோன்றக் காரணமாயின.

ஐ.நா. நிறுவனங்கள் உள்ளிட்ட சர்வதேச தொண்டு நிறுவனங்களை வெளியேறுமாறு சிறி லங்கா அரசு உத்தரவிட்ட போது சர்வதேசம் சீற்றம் கொள்ளும், தம்மை இனப்
படுகொலையில் இருந்து பாதுகாக்க காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தமிழ் மக்கள் பெரிதும் எதிர்பார்த்தார்கள். ஆனால் வழக்கம் போன்று வெற்று அறிக்கைகளை வெளியிடுவதோடு அவை தம் பணியைச் சுருக்கிக் கொண்டன.

சர்வதேச சமூகத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் செல்வாக்கு மிக்க நாடுகள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவை தத்தமெக்கென தனியான நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருக்கின்றன என்பது ஒன்றும் இரகசியமான விடயமல்ல. இதனால் தான் உலக அரங்கில் ஒரே மாதிரியான சூழ்நிலை நிலவும் பிரதேசங்களில் ஒன்றுக்கொன்று முரணான கொள்கைகளை, செயன்முறைகளைக் கடைப்பிடிக்க அவற்றால் முடிகின்றது.

இதற்கு அண்மைய உதாரணம் தெற்கு ஒஸ்ஸற்றிய விவகாரம். ஜோர்ஜியாவே தொடக்கி வைத்த இந்த மோதலில் உயிர் மற்றும் சொத்தழிவுகளைச் சந்தித்து பெரும்பாலான மக்கள் இடம்பெயர்ந்தது தெற்கு ஒஸ்ஸற்றிய பகுதியிலேயே. ஆனால், மேற்குலகும் அது சார்ந்த சர்வதேச தொண்டு நிறுவனங்களும் வரிந்து கட்டிக் கொண்டு உதவியது ஜோர்ஜிய பிராந்தியத்தில் வாழ்ந்த மக்களுக்கே. இங்கே வாழ்ந்த மக்கள் சந்தித்தது ஒரு சில நாட்கள் இடம்பெயர்வை மாத்திரமே. அதுவும் கூட தேவையற்ற ஒரு இடப்பெயர்வு.
ஆனால், விவகாரத்தில் அமெரிக்காவின் பரம வைரியான ரஸ்யா தலையிட்டிருந்தமை யாருக்கு உதவி செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதாக இருந்தது.

மற்றுமொரு அண்மைய உதாரணம் மியன்மார். இங்கே இயற்கையின் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தானே உதவுவதாகவும் வெளிநாட்டு உதவிகள் அவசியமில்லை எனவும் மியன்மார் ஆட்சியாளர்கள் அறிவித்திருந்தார்கள். இதனை ஏற்றுக் கொள்ள மறுத்த அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் தாங்கள் நேரடியாகச் சென்று உதவிகளை வழங்க அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் அனுமதி மறுக்கப்படும் பட்சத்தில் தாம் பலாத்காரத்தைப் பிரயோகிக்கப் போவதாகவும் எச்சரித்திருந்தது. இது தவிர சீற்றமடைந்த ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூன் நேரடியாக மியான்மார் சென்று ஆட்சியாளர்களுடன் பேசி இருந்தார்.
இத்தனைக்கும் மியன்மார் ஆட்சியாளர்கள் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் உதவி செய்வதைத் தடுக்கவோ கட்டுப்படுத்தவோ அவற்றை வெளியேறுமாறு அறிவிக்கவோ இல்லை.

ஆனால், வன்னியைப் பொறுத்தவரை சிறி லங்கா உதவிகளை வழங்க மறுப்பது மட்டுமன்றி உதவி வழங்கும் நிறுவனங்களையும் அச்சுறுத்தி அப்பிராந்தியத்தில் இருந்து வெளியேற்றி
இருக்கின்றது. மோசமான அச்சுறுத்தலுக்கு இலக்காகியுள்ள கிளிநொச்சிப் பகுதிக்கு உணவு உட்பட நிவாரணப் பொருட்கள் எடுத்துவரப் படவில்லை என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் அறிவித்துள்ள அதேவேளை, வன்னிப் பிராந்தியத்தில் நிலை கொண்டுள்ள ஒரேயொரு சர்வதேச நிறுவனமான சர்வதேச செஞ்சிலுவைக் குழுவும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
இப்பகுதிக்கு அனுமதிக்கப்படும் ஒன்றிரெண்டு வாகனங்களும் கூட சிறி லங்காப் படையின் ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர் தாக்குதல்களுக்கு இலக்காக வருகின்றன. இத்தகைய வாகனங்களுக்கு செஞ்சிலுவைக் குழுவின் வழித்துணை கோரப்பட்ட போதிலும் அதுவும் கிட்டவில்லை.

இத்தகைய நிலையில் வன்னியில் உள்ள மக்கள் சொல்லொணாத் துயரை அனுபவித்து வருகின்றனர். சிறி லங்கா அரசு அப்பட்டமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவது மட்டுமன்றி உணவை ஆயுதமாகப் பயன்படுத்துதல் மக்களை நெருக்கடிக்குள்ளாக்கி
இடம்பெயரச் செய்தல், திட்டமிட்ட முறையில் இனச் சுத்திகரிப்புப் பாணியில் தமிழ் மக்களைப் படுகொலை செய்தல் என பல்வேறு போர்க்குற்றங்களையும் புரிந்து வருகின்றது. இவற்றைத் தட்டிக் கேட்க வேண்டிய சர்வதேச சமூகமோ வெறும் பேச்சுடன் திருப்திப்பட்டுக் கொள்ள முனைகின்றது.

இந்நிலையில் நாம் சும்மா இருந்து விடலாமா? இன்று வன்னியில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் அங்கு வாழும் மக்களுக்கு மட்டுமான அச்சுறுத்தல் அல்ல. இலங்கைத் தீவில் வாழும் ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் எதிர்கால இருப்புக்குமான அச்சுறுத்தல். எனவே என்ன விலை தந்தாவது அது தடுக்கப்பட வேண்டும். அந்தச் செயன்முறையில் புலம்பெயர் தமிழ் மக்களும் ஒருமுகமாக இணைந்து கொள்ள வேண்டும்.

No comments: