![]() மாங்குளத்திற்கும், கிளிநொச்சிக்கும் இடைப்பட்ட பகுதியில் ஏ-9 நெடுஞ்சாலையில் நிலவுகின்ற போர் பதற்றமான சூழ்நிலை காரணமாக கிளிநொச்சியில் இருந்து வவுனியாவிற்கு அவசர நோயாளர்களை அனுப்பி வைப்பது சிக்கல் நிறைந்த பணியாக மாறியிருப்பதாக கிளிநொச்சிப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். |
அவர் மேலும் இவ்விடயம் குறித்துத் தெரிவிக்கையில், நேற்றைய விமானக் குண்டு வீச்சில் காயமடைந்த இருவரை மேலதிக சிகிச்சைக்காக வவுனியாவிற்கு அனுப்பிவைக்க முடியாமல் போயிருப்பதாக குறிப்பிட்டார். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வழித்துணையுடன் அனுப்பி வைக்க முயற்சித்தோம். எனினும் அவர்கள் வழித்துணை வழங்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார். |
அவசர நோயாளர்களை வவுனியா அனுப்ப முடியவில்லை: கிளிநொச்சி சுகாதார பணிப்பாளர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment