கிளிநொச்சி மீதான தாக்குதலை ஆரம்பிப்பதற்கு முன் மக்கள் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் - மன்னார் ஆயர்

கிளிநொச்சி மீதான தாக்குதலை ஆரம்பிப்பதற்கு முன் மக்கள் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.

அதற்காக மக்கள் பாதுகாப்பு வலயங்களை ஏற்படுத்த வேண்டும் என மன்னார் மாவட்ட மறை ஆயர் அதி வணக்கத்திற்குரிய கலாநிதி ராயப்பு ஜோசப் ஆண்டகை கோ?க்கை விடுத்துள்ளார்.

அளித்த செவ்வியின் போதே அவர் இவ்வாறு கோரினார்.

அவர் தனது செவ்வியில் மேலும் தெரிவித்ததாவது, ஐக்கிய நாடுகளினதும் ஏனைய தொண்டு நிறுவனங்களினதும் பாது காப்பைக் காரணங்காட்டி கிளிநொச்சியில் இருந்து அவசர அவசரமாக வெளியேற்றியது. ஆனால் வன்னியில் வாழும் இரண்டரை இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பு உத்தரவாதமும் வழங்கப்படவில்லை.

அவர்கள் இன்று உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாழ்வதா சாவதா என்ற மனநிலையில் அந்தரித்து நிற்கின்றனர்.

போரை நடத்தி வெற்றி பெறலாம், அரசியலை நடத்தலாம், ஆனால் அதை அனுபவிக்க மக்கள் உயிரோடு இருக்க வேண்டும். அதற்காக மக்களை பாதுகாத்தே ஆக வேண்டும்.

உணவு விடயத்தை அரசாங்கமோ புலிகளோ ஓர் ஆயுதமாக பயன்படுத்தக் கூடாது. வன்னிக்கு உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கு அரசாங்கம் தடை விதிக்கக் கூடாது.

மூர்க்கத்தனமான விமானத் தாக்குதல்களால் பொதுமக்கள் அநியாயமாக பலியாகின்றனர். குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் என்ற பேதமில்லாமல் கொல்லப்படுகின்றனர்.

உயிருக்குஉலை வைக்கும் இந்த மிருகத்தனமான செயலை உலக மக்களால் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும்.

இவ்வாறான செயல்களை தொடர அனுமதிப்பது ஆபத்தாகவே முடியும். சமாதானத்தை விரும்பும் மனித இதயம் உள்ளவர்கள் இதற்கு தமது கடும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.

வன்னியில் பொதுமக்கள் பயணிக்கும் வாகனங்கள் கிளைமோர் தாக்குதல் நடத்தப்படுகின்றது. இதனால் சொந்த மக்களே படுகொலை செய்யப்படுகின்றனர். வவுனியா வடக்கு மாந்தைமேற்கு மடு ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 2 இலட்சத்து 10 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்து வன்னியில் தஞ்சமடைந்துள்ளனர். கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்தவர்களுமாக சுமார் மூன் றரை இலட்சம் மக்கள் வன்னியில் இருக்கின்றனர்.

அகதிகளாக வன்னிக்கு சென்ற மக்கள் இன்று மர நிழல்களிலும் குடில்களிலும் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி மிகவும் பரிதாபகரமான நிலையிலே வாழ்ந்து வருகிறார்கள். பலமுறை இடம்பெயர்ந்த அவர்களை விமானங்களில் துரத்தி துரத்தி அடிப்பது எந்த வகையில் நியாயமாகும். இடம்பெயர்ந்த ஆண்கள் மெலிந்த உடலுடன் கைகளில் பைகளை வைத்துக் கொண்டு உணவுக்காக அலைவது மிகவும் பரிதாபகரமான நிலைமை ஆகும்.

விமானங்களைக் கண்டால் சிறியவர் முதல் பெரியவர் வரை தம் உயிரை பாதுகாத்து கொள்ள ஓடி ஒளிந்து கொள்ள வேண்டிய நிலையே இன்று வன்னியில் காணப்படுகிறது. இதனால் அவர்களின் மனநிலை பாதிக்கப்பட்ட மன நோயாளிகள் போலவே நடமாடி திரிகின்றனர்.

No comments: