கொழும்புக்கு அண்மையாக கடற்படையினர் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல்

கடற்படை ரோந்துப்படகை விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் தாக்கியதில் ஒருவர் கொல்லப்பட்டார். இரண்டு மாலுமிகள் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.இச்சம்பவம் இலங்கை நேரப்படி இரவு எட்டு மணியளவில் கொழும்புக்கு அண்மையாக உள்ள வத்தளை கடற்பரப்பில் இடம் பெற்றுள்ளது என அறியப்படுகிறது.

இச் செய்தி எமக்குக் கிடைத்த பின்னர் இதனை உறுதிப்படுத்த முயன்றபோதும், சிறிலங்காவில் ஊடகச் செய்திகளுக்கான கட்டுப்பாட்டின் காரணமாக, இதுவரையில் அது சாத்தியமாகவில்லை. அதே சமயம் விடுதலைப்புலிகள் தரப்பிலும் இதுவரை ஊர்ஜிதம் செய்ய முடியவில்லை.

நேற்று முன்தினம் பூநகரியிலுள்ள விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் ஒன்று கூடும் முகாமை சிறிலங்கா விமானப் படையினர் தாக்கியழித்தாகத் சிறிலங்கா அரசு தெரிவித்திருந்த பின்னரே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments: