தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகும் வாய்ப்பு ஆனந்த சங்கரிக்கு?


ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் வெற்றிடமாகியுள்ள தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரின் இடத்துக்கு மறைந்த அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளேயின் மனைவி சுதர்சினி அல்லது தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி நியமிக்கப்படலாம் எனத் தெரிய வருகிறது.


வடமத்திய மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்தார்.

தேர்தல் முடிந்த பின்னர் மீண்டும் அதே இடத்திற்கு வசந்த சமரசிங்கவை நியமிக்குமாறு மக்கள் விடுதலை முன்னணி ஐக்கிய மக்கள் சுதந்த்pரக் கூட்டமைப்பிடம் கோரியிருந்தது. அவ்வாறானதொரு கோரிக்கை மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வாவினால் முன்வைக்கப்பட்ட போதும் அக்கட்சி பகிரங்கமாகவே அறிக்கை விட்டு அரசிலிருந்து வெளியேறியுள்ளதால் வெளியேறிய கட்சிக்கு அந்தப் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட மாட்டாதென கட்சியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் கடந்த வாரம் கூடிய போது வெற்றிடமாகியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒருவரை நியமிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை தெரிவித்திருந்தார்.

இவ்வெற்றிடத்துக்கு மறைந்த முன்னாள அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளேயி;ன் மனைவி சுதர்சினி பெர்ணான்டோபுள்ளேயின் பெயரும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரியின் பெயரும் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் சுதர்சினி பெர்ணாண்டோபுள்ளே இதுவரை அரசியலுக்கு வருவதற்கான விருப்பத்தைத் தெரிவிக்காததால்

ஆனந்தசங்கரிக்கே அந்த வாய்ப்பு செல்ல இருப்பதாகவும் சுதந்திரக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும் ஆளும் அரசாங்கத்தின் வெற்றிடம் ஒன்றை ஆனந்தசங்கரி பொறுப்பேற்க மாட்டார் என என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.:

No comments: