இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதனை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - கருணாநிதி


இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் குறித்து மத்திய அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என முதலமைச்சர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, தமிழக முதல்வர் கருணாநிதி இது தொடர்பாக கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

கடிதத்தில் தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு மத்திய அரசாங்கம் தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments: