சாட்சி வராததால் ஊடகவியலாளர் சிவராம் படுகொலை வழக்கு விசாரணை டிசம்பர் 15ம் திகதிக்கு ஒத்தி வைப்பு


பிரபல ஊடகவியலாளர் சிவராம் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படுகொலை வழக்குடன் தொடர்புடைய பிரதான சாட்சியாளர் நீதிமன்றில் ஆஜராகியிருக்கவில்லை.

மேலும், இந்த வழக்கு விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்டிருந்த சிங்கள மொழி பேசும் ஜூரிசபையை நீதிமன்றம் அண்மையில் கலைத்திருந்தது.

பிரதான சாட்சியாகக் கருதப்படும் பிரசன்ன புபுது ரத்நாயக்க தற்போது வெளிநாடொன்றுக்கு சென்றுவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2005ம் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் திகதி பிரபல ஊடகவியலாளர் சிவராம் தர்மரட்னம் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த படுகொலைச் சம்பவத்துடன் நேரடித் தொடர்பு இருப்பதாக ஆறுமுகம் சிறிஸ்கந்தராஜா என்பர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

No comments: