வன்னி உணவு விநியோகத்தை குழப்பினால் ஐ.நா. சகித்துக்கொள்ளாது: உலக உணவுத் திட்டம் எச்சரிக்கை


இலங்கையின் வட பகுதியில் மோதலில் சிக்கியுள்ள மக்களுக்கு உணவு விநியோகம் மேற்கொள்வதைக் குழப்பும் நடவடிக்கைகளை சகித்துக்கொள்ளப் போவதில்லையென ஐக்கிய நாடுகளின் உலக உணவுத்திட்டம் கடுமையான தொனியில் எச்சரித்துள்ளது.

உலக உணவுத் திட்டத்தின் ஆசியப் பிராந்தியத்திற்கான இயக்குநர் டொனி பன்பரி இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மோதல் நடைபெறும் வடபகுதியில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு விநியோகம் மேற்கொள்வதை யாராவது குழப்புவதையோ அல்லது மனிதாபிமானப் பணியாளர்களுக்கான அச்சுறுத் தல் விடுப்பதையோ சகித்துக்கொள்ளப் போவதில்லையென அவர் தெரிவித்துள்ளார். மனிதாபிமானப் பணியாளர்களின் பாதுகாப்பை மிக முக்கியமாகக் கருதுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது இவ்வாறிருக்க வன்னி மக்களுக்கான உணவு விநியோகம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவது அவசியம் என வலியுறுத்தியுள்ள உலக உணவுத் திட்டம், வாரம் ஒருமுறை ஒரு உணவுத் தொடரணியை அங்கு அனுப்பவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

நன்றி : உதயன்

No comments: