கொக்குவில் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் வர்த்தகர் பலி


யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளம் வர்த்தகர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

கொக்குவில் பகுதியைச் சேர்ந்த சபாரட்ணம் சசிக்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தனது வர்த்தக நிலையத்தில் இருந்து வீடு திரும்பி கொண்டிருந்தபோது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த வர்த்தகரது சடலம் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அண்மையில், கொக்குவில் பகுதியில் இரண்டு வர்த்தகர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: