இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண தமிழக கட்சிகள் பிரதமரை சந்திக்க வேண்டும் - தொல் திருமாவளன்


இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண அழுத்தம் கொடுக்கும் வகையில் தமிழகக் கட்சிகள், இந்தியப் பிரதமரை நேரில் சந்திக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் தமிழர் பிரச்சினை குறித்து இந்திய குடியரசுத் தலைவி பிரதீபா பட்டேலிடமும், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியிடமும் தெளிவுபடுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாடு தழுவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்று தமிழகத்தில் நடத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு இந்திய மத்திய அரசு, இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக்கோரி தமிழகத்தின் பல்வேறு கட்சிகளும் இன்று உண்ணாவிரதப் போராட்டாமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments: