கிளிநொச்சி நகர் கனகாம்பிக்கைக்குளம் வீதி மக்கள் குடியிருப்புக்கள் மீது இலங்கை வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டு சிறார்கள் உட்பட 13 பேர் காயமடைந்துள்ளனர். |
குண்டுச் சிதறல்கள் கிளிநொச்சி பொதுமருத்துவமனைப் பகுதிகளிலும் வீழ்ந்துள்ளன. கிளிநொச்சி நகரில் உள்ள கனகாம்பிகைக்குளம் வீதி ஏ-9 சாலை அருகில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று புதன்கிழமை முற்பகல் 10:30 மணியளவில் இலங்கை வான்படையின் இரண்டு கிபீர் வானூர்திகள் நான்கு தடவைகள் மக்கள் குடியிருப்புக்கள் மீது குண்டுத்தாக்குதலை நடத்தின. இக்குண்டுகள் வீழ்ந்து வெடித்ததில் நான்கு வீடுகள் முற்றாக அழிந்துள்ளன. 16 வீடுகள் சேதமாகியுள்ளன. இத்தாக்குதலில் 13 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். இராமையா விஜயதர்சினி (வயது 16) பரந்தாமன் கௌரி (வயது 03) செல்லையா யோகராணி (வயது 68) செபமாலை இந்திராணி (வயது 28) அருட்சோதி ஆரோக்கியம் (வயது 49) காந்தரூபன் சிவாஜினி (வயது 28) தர்மன் கோகுலவாசன் (வயது 04) கந்தசாமி சத்தியஞானதேவி (வயது 57) வர்ணகுலசிங்கம் இராஜேந்திரம் (வயது 45) செல்லையா சுப்பிரமணியம் (வயது 53) செல்வநாயகம் பெருமாள் (வயது 65) விக்கினேஸ்வரன் கமலாதேவி (வயது 26) வேலு லட்சுமிப்பிள்ளை (வயது 68) ஆகியோர் காயமடைந்துள்ளனர்.சிறிலங்கா வானூர்திகள் நடத்திய குண்டுத்தாக்குதலின் சிதறல்கள் கிளிநொச்சி பொது மருத்துவமனைப் பகுதிக்குள் வீழ்ந்து வெடித்ததில் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன. |
கிளிநொச்சியில் இலங்கை வான்படை குண்டுத் தாக்குதல்: 2 அப்பாவி பொதுமக்கள் பலி; 2 சிறார்கள் உட்பட 13 பேர் காயம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment