எட்டு மாதங்களில் களமுனைகளில் 1,509 மாவீரர்கள் மட்டுமே வீரச்சாவு: மாவீரர் பணிமனை


இந்த வருட ஆரம்பத்தில் இருந்து ஓகஸ்ட் வரையான எட்டு மாதங்களில் 1,509 போராளிகளே களப்பலியானார்கள். அரசு வெளியிடும் தகவல்களில் உண்மையில்லை. விடுதலைப் புலிகளின் மாவீரர் பணிமனை மேற்கண்டவாறு நேற்று அறிவித்துள்ளது.

இதுவரை களப்பலியான போராளிகளின் விபரங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை அந்தப் பணிமனை நேற்று வெளியிட்டது. இந்த வருடத்தில் முதல் எட்டு மாதங்களில் 1,047 ஆண் போராளிகளும் 462 பெண் போராளிகளுமாக 1,509 பேர் களப்பலியாகியுள்ளனர்.

இந்தக் காலப்பகுதியில் 6,500 போராளிகள் கொல்லப்பட்டனர் என்று அரசு அறிவித்துள்ளது. அது பெரும் தவறாகும். போராளிகள் மரணமானதும் வானொலி மூலம் அறிவிப்போம். அத்துடன் களப்பலியானவர்கள் விபரங்கள் மாத அடிப்படையில் வெளியிடுவோம். அவற்றைக் கொண்டு களப்பலியானவர்களின் எண்ணிக்கையை எவரும் இலகுவில் கணக்கிட்டுவிட முடியும் என்று மாவீரர் பணிமனையின் பேச்சாளர் தெரிவித்தார்.

1982 ம் ஆண்டு நவம்பர் 27ம் திகதி தொடக்கம் 2008ம் ஆண்டு ஓகஸ்ட் 31 ம் திகதி வரை 21,648 போராளிகள் களப்பலியாகியுள்ளனர். அவர்களில் 16,953 ஆண் போராளிகளும் 4,695 பெண் போராளிகளும் அடங்குவர் என மாவீரர் பணிமனை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1 comment:

ஆட்காட்டி said...

கொஞ்ச நாட்களாக இந்தப் பட்டியல் வெளியில வரேலயே? எனக்கு கூட சில தகவல்கள் தவறி உள்ளன. இது கூடாது இல்லையா?