ஐ.நா. உணவு லொறியில் வெடிபொருட்கள் இருந்ததென்ற தகவல் உண்மைக்குப் புறம்பானது - கோர்டன் வைஸ்


வன்னிக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைப்பதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட சரக்கு ஊர்திகளில் சீ4 வெடிபொருட்கள் காணப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மைக்கு புறம்பானதென அமைப்பின் ஊடகப் பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்ட சீ4 வெடிபொருட்கள் மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சரக்கு ஊர்தியிலேயே கண்டு பிடிக்கப்பட்டதாகவும், சில ஊடகங்களில் குறித்த தகவல் திரிபுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

வன்னியில் இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைப்பதற்காக அரசாங்கத்துடன் இணைந்து ஐக்கிய நாடுகள் அமைப்பு நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.

வன்னிக்கு பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு ஊர்திகளைச் சோதனையிட்ட போது ஓர் சரக்கு ஊர்தியில் சீ4 வெடிபொருட்கள் மற்றும் மின்கலங்கள் காணப்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சரக்கு ஊர்தி அரசாங்க அதிபரினால் அனுப்பி வைக்கப்பட்டதொன்றென ஐக்கிய நாடுகள் அமைப்பின் பேச்சாளர் கோர்டன் வைஸ் சுட்டிக் காட்டியுள்ளார்.

No comments: