யாழ். வலி மேற்கு கோவில்களில் படையினர் தேடுதல்: இரு குருக்கள் உட்பட 10 பேர் கைது


யாழ்ப்பாணம் வலி மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஆலயங்களில் நேற்றிரவு செவ்வாய்க்கிழமை மாலை தொடக்கம் இரவு வரை படையினரும் பொலிஸாரும் இணைந்து நடத்திய தேடுதலின்போது 10 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

இத்தேடுதலின்போது இரு ஆலயங்களின் குருமார்கள், ஆலய பரிபாலன சபையினர் கடவுளை வணங்குவதற்காக ஆலயத்திற்கு வந்தவர்கள் என பத்துப்பேர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த திங்கட்கிழமை மாசியப்பிட்டிப் பகுதியில் படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலை அடுத்தே இத்தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதென்றும் தெரிவிக்கப்பட்டது.

No comments: