வன்னிக்கு செல்லும் உணவு லொறிகளை நிறுத்துவதற்கு காரணம்தேடும் அரசு - உணவு லொறியில் வெடிமருந்து கண்டுபிடிப்பு என பாதுகாப்பு அமைச்சு சொல்கிறது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள அகதிகளுக்கு உணவுப் பொருள்களை எடுத்துச் செல்லவிருந்த லொறிகளில் ஒன்றுக்குள் இருந்து 2.5 கிலோ எடையுள்ள அதிசக்திவாய்ந்த வெடிபொருள்கள் நேற்றுப் பிற்பகல் 3.30 மணிக்கு மீட்கப்பட்டன என்று பாதுகாப்பு அமைச்சு நேற்று இரவு அறிவித்தது.வவுனியா செயலகத்தால் வாடகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 30 லொறிகளில் ஒன்றிலிருந்தே வெடி பொருள்கள் மீட்கப்பட்டன.
இது குறித்து பாதுகாப்பு அமைச்சு பின்வருமாறு விவரித்துள்ளது. ஓமந்தைச் சோதனை நிலையத்தில் படையினர் லொறிகளை சோதனை செய்தபோது குறிப்பிட்ட ஒரு லொறியிலிருந்து வெடிபொருள் மீட்கப்பட்டது. அதனையடுத்து மேலதிக விசாரணைக்காக லொறியின் சாரதியை படையினர் தடுத்துவைத்துள்ளனர். லொறியும் தடுத்துவைக்கப்பட்டுள்ளது.
நாளை வியாழக்கிழமை வன்னிக்குச் செல்லவுள்ள வாகன அணியில் அரச அதிபரின் 30 லொறிகளும் உலக உணவுத் திட்டத்தின் 30 லொறிகளும் செல்லவிருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டது

No comments: